பா.க 08 என்னை இழு இழுவென இழுக்குதடி…
ரத்த வெள்ளத்தில் கிடக்கும் தருணை ஏற்றிக்கொண்டு ambulance நகரத்து போக்குவரத்தில் சாலை விதிகளை மீறியபடி சீறிப்பாய்கிறது. உள்ளே இருந்த Paramedics-களுடன் அஷ்வினும், பார்த்திபனும் உட்கார்ந்திருக்கிறார்கள். தரையில் கிடந்த தருணை தூக்குவதற்கு உதவி செய்ததால் அஷ்வினுடைய சட்டையில் ஏற்பட்ட ரத்தக்கறைகளை அவன் சட்டை செய்யாமல், தருணை தொட்டு தொட்டு பார்த்துக்கொண்டிருந்தான்.










