விஜய் போனா வசந்த்
சரத் வீட்டுக்குள் திரும்பி “அம்மணி! நான் போய் வயலுக்கு தண்ணி இறைச்சுட்டு வந்துடுறேன். ஷாமியானாவை பிரிச்சு எடுத்துட்டு போக ஆளுங்க வருவாங்க…” என்று குரல் கொடுத்துவிட்டு தன் வேட்டியை மடித்து கட்டியபடி வயல் பக்கம் நடக்க ஆரம்பித்தான். கொஞ்ச தூரம் அவன் சென்றதும் ஓட்டமும் நடையுமாக வசந்த் சரத்தை சென்றடைந்தான்.










