| முன் கதை சுருக்கம்... |
|---|
| தங்கலுடைய Project-ல் மீண்டும் இணைந்த அஷ்வினை அறிமுகம் செய்யம் client meeting-ல், தருண் அஷ்வினின் sexuality-ஐ பற்றி indirect-ஆக மோசமான comment ஒன்றை உதிர்க்கிறான். அதை கேட்டு கோபம் கொள்ளும் பார்த்திபன், அஷ்வின் தருண் பக்கம் நின்று பேசியதை பார்த்து மேலும் கோபமடைகிறான். பின்னர் அஷ்வின் பார்த்திபனிடம் தான் அப்படி நடந்துக் கொண்டதற்கான காரணத்தை சொல்லி சமாதானம் செய்கிறான். Flashback-ல் lecturer நவீனுக்கு பார்த்திபனுக்கும் காமம் பற்றிக்கொள்கிறது. நவீனிடம் tuition-க்கு சென்ற பார்த்திபன் கிட்டத்தட்ட இரண்டரை வருட வறட்சிக்கு பிறகு மீண்டும் நிஜமான உடலுறவு கொள்கிறான். |
அஷ்வின் தன்னுடைய coffee cup-ஐ dust bin-ல் போட்டுவிட்டு அவர்கள் table-க்கு சென்றான். “என்ன girls… ஏதோ பெருசா plan போட்டுட்டு இருக்கீங்க போல?” என்று அஷ்வின் கேட்க, அவர்கள் ஒருத்தரை ஒருத்தர் துருதிரு என்று விழித்தபடி பார்த்துக்கொண்டார்கள். அஷ்வின் மாளவிகா வாங்கி வந்த மெஹந்தி cone-ஐ எடுத்து பார்த்து, அதன் நுணியை பிரித்தான். தன் கையில் மருதானி போடுவது போல வைத்துப்பார்த்து “உங்கள்ல யார் நல்லா design போடுவீங்க?” என்று கேட்டான். முதலில் தயங்கினாலும் அனுபமா “யாருக்கும் தெரியாது.. நாங்க அரைச்சு வைக்குற மருதாணி மாதிரி, வட்டம் வட்டமா போட்டுப்போம்.. இந்த cone-னா உடனே காஞ்சிடும். அதனால இதை வாங்கினோம்” என்று பதில் சொன்னாள். அஷ்வின் “அப்போ நான் உங்களுக்கு இதுல design போட்டுவிடுறேன்…” என்று மாளவிகாவின் கையை இழுத்து அவள் உள்ளங்கையில் ஒரு வளைவை வரைந்தான். மாளவிகாவின் கண்கள் ஆச்சரியத்தில் விரிய, அவள் தைரியமாக அஷ்வினிடம் கையை நீட்டினாள். அடுத்த நிமிடம் அஷ்வின் சரசரவென்று அவள் உள்ளங்கையை அழகான design-ல் நிரப்பினான். மாளவிகாவின் கண்கள் இன்னும் நம்பிக்கையில்லாமல் சந்தோஷத்தில் விரிந்திருக்க, அஷ்வின் அவளது அடுத்த கையிலும் அதே அளவு நேர்த்தியான இன்னொரு design-ஐ வரைந்தான். மாளவிகா அஷ்வினின் ஓவிய திறமையில் வாயடைத்து போய், வார்த்தை வராமல் அஷ்வினை பார்த்து “Thanks..” என்றாள். அஷ்வின் “வேற யார் design போட்டுக்குறீங்க?” என்று கேட்க, அனுபமாவும், சத்யாவும் போட்டி போட்டுக்கொண்டு கையை நீட்டினார்கள். பெண்கள் மூவரும் தங்கள் கையில் புதிதாக முளைத்திருக்கும், இன்னும் ஈரம் காயாத மெஹந்தி கோலத்தை பரவசத்துடன் பார்த்துக்கொண்டிருக்க, அஷ்வின் “யாருக்கும் office வேலை செய்யுற idea இல்லையா?” என்றான். மாளவிகா எழுந்த போது அவள் தோளில் இருந்து துப்பட்டா சரிந்தது. அதை அவள் தடுக்க முயற்சிக்க, அஷ்வின் அவளுடைய துப்பட்டாவை மேலே இழுத்து அவளுடைய கழுத்தை சுற்றி லேசாக முடிச்சு போட்டான். அஷ்வின் “சரி! எல்லாரும் வாங்க… ODC போகலாம்” என்று அழைத்தான். “ரெண்டு கையிலயும் மெஹந்தி வச்சுக்கிட்டு எப்படி கதவை திறப்பீங்க?” என்று தான் அழைப்பதற்கான காரணத்தையும் சொன்னான். அனைவரும் ODC-க்கு சென்றனர்.
| மேலே படிக்கிறதுக்கு முன்னாடி... |
|---|
Network Printer-ல் இருந்து சில printout-களை எடுத்துக்கொண்டு வந்த பார்த்திபன் இந்த பெண்களின் எதிரில் வர, “வேலை நேரத்துல இப்படி மெஹந்தி வச்சுக்கிட்டா office வேலையை யார் பாக்குறது?” என்று கடிந்துக்கொண்டான். மாளவிகா அஷ்வினை பரிதாபமாக பார்க்க, பார்த்திபன் அவளிடம் “இந்த சார் தான் உங்க கையில design போட்டு விட்டாரா?” என்று அஷ்வினை பார்த்தபடி கேட்டான். அஷ்வின் “ஆமாம் பார்த்திபன்… just அரை மணி நேரம் வச்சிருந்தா போதும்… இப்பவே 10 நிமிஷம் ஆயிடுச்சு… just ஒரு 20 minutes தானே… அவங்களுக்கு எவ்வளவு சந்தோஷம் பாருங்க” என்று அந்த பெண்களுக்காக வக்காலத்து வாங்கினான். பார்த்திபன் அவர்களை கோபமாக முறைக்க முயற்சித்தாலும், அந்த பெண்களின் முகத்தை பார்த்ததும் மனமிரங்கினான். பார்த்திபன் “சரி! இன்னும் 20 நிமிஷத்துல எல்லாரும் login பண்ணியிருக்கனும்” என்று சொல்லிவிட்டு நகர்ந்தான்.
தருண் தன் பக்கத்தில் உட்கார்ந்த சத்யாவின் உள்ளங்கையை பார்க்க, அவள் “அஷ்வின் போட்டுவிட்டான்… நல்லா இருக்குல்ல?” என்று தன் உள்ளங்கையை நீட்டினாள். தருண் “ம்ம்.. பொம்பளைங்களுக்கு கோலம் போடுறது வழக்கம்ங்குறதால, அந்த அஜக்ஸுக்கு நல்லா மருதானி design வரைய வருது போல…” என்று முனுமுனுத்தான். சத்யா “உன் கிட்டே போய் காமிச்சேன் பாரு…” என்று பதிலுக்கு முனகிக்கொண்டு அடுத்த பக்கம் திரும்பினாள். இந்த உரையாடலை காதில் கேட்டுக்கொண்டிருந்த பார்த்திபன் மனதுக்குள் சிரித்துக்கொண்டான். அஷ்வின் அடுத்தவர்களுக்காக தன்னை மாற்றிக்கொள்ளவில்லை என்றாலும், நாட்கள் செல்ல செல்ல, அவன் அனைவரையும் தன் அன்பால் ஈர்த்துவிடுவான் என்ற நம்பிக்கை பார்த்திபனுக்கு வந்தது. ஆனால் தான் இளவயதில் எப்போதும் அடுத்தவர்களை திருப்தி படுத்துவதற்காக தனக்கு என்று ஒரு strong personality வளர்த்துக் கொள்ளாமல் இருந்தது லேசாக வலித்தது. குறிப்பாக நவீனுடைய செயல்…நவீன் தன் கைக்கடிகாரத்தை பார்த்து “Last five minutes… எல்லாரும் பேப்பரை கட்டிட்டு எழுதுங்க” என்று வேகப்படுத்தினான். பார்த்திபன் தான் எழுதியதை மீண்டும் revision செய்துவிட்டு இனிமேல் எழுத, திருத்த ஒன்றும் இல்லை என்பது போல கன்னத்தில் கை வைத்து நவீனை பார்த்தபடி உட்கார்ந்திருந்தான். அதை கவனித்த நவீன் கண்கள் சுருக்கி பார்த்திபனிடம் காதல் மொழி பேச, பார்த்திபன் தன் கீழுதட்டை சுழித்து பதில் சொன்னான். நவீன் “Time’s up… பேப்பர் குடுங்க..” என்று ஒவ்வொரு மாணவனிடம் இருந்தும் விடைத்தாளை வாங்கினான்… சிலரிடம் பிடுங்கினான். நவீன் பார்த்திபனிடம் வந்தபோது அவன் யாரும் கவனிக்காதபடிக்கு விடைத்தாளில் முத்தம் வைத்துவிட்டு நீட்ட, அதை வாங்கிய நவீன் விடைத்தாள்களை ஒழுங்கு படுத்துவது போல அதில் பதில் முத்தம் வைத்தான். மாணவர்கள் வகுப்பில் இருந்து கலைந்தனர்.
தனது இருக்கையில் அமர்ந்து விடைத்தாள்களை எண்ணி சரிபார்த்துக் கொண்டிருக்கும் நவீன், தன்னை தாண்டி செல்லும் பார்த்திபனை “Question paper எப்படி இருந்துச்சு?” என்று கேட்க, அவன் திரும்பி வந்தான். பார்த்திபன் “நல்லா எழுதினேன்… நீங்க சொல்லி குடுத்ததால easy-யா இருந்துச்சு…” என்று நவீனின் கையை சுரண்டினான். நவீன் “நான் answer papers-ஐ department-ல வச்சு lock பண்ணிட்டு கிளம்ப கொஞ்ச நேரம் ஆகும்.. அடுத்த trip-ல போகலாமா?” என்ற கேள்விக்கு பார்த்திபன் மறுத்து சொல்ல முடியுமா? பார்த்திபன் நவீனுடன் கீழே department-க்கு நடந்தான். Department room-ல் மற்ற lecturer-கள் யாரும் இல்லை. நவீன் பார்த்திபனை உள்ளே வந்து உட்காருமாறு சொல்ல, அவன் தயக்கத்துடன் உள்ளே வந்து உட்கார்ந்தான். நேரம் செல்ல செல்ல பார்த்திபனுக்கு இறுக்கம் குறைந்தது.| Just ஒரு கேள்வி... |
|---|



