சிறிய வயதில் எலியும் பூனையுமாக எதிரிகளாக திரிந்த நெருங்கிய உறவினர்களான ஜெய்யும் பிரபாகரும் பல வருடங்கள் கழித்து மீண்டும் சந்திக்கும்போது எதிர்பாராமல் காதல் உருவாகிறது. நாளடைவில் ஒருவரி மற்றொருவர் உயிருக்கு உயிராக காதலிக்கும் அவர்களிடையே சமுதாய கட்டமைப்பு வில்லனாக வர, எப்படி அவர்கள் அதை எதிர்கொள்கிறார்கள் என்ற கதை. இது கிட்டத்தட்ட எனது சொந்த வாழ்க்கை கதை என்று சொல்லலாம். அதோடு சில கற்பனைகளையும் சேர்த்து எழுதப்பட்ட தொடர்.
கதாபாத்திரங்களை ஏற்பவர்கள்:
ஜெய்: ஜெய் சம்பத்
பிரபாகர்: ‘இனிகோ’ பிரபாகர்
அஞ்சலி: அஞ்சலி
ராஜி: ரெஜினா
ஜெய்யின் பெற்றோர்கள்: ‘ஆடுகளம்’ நரேன், ‘பசங்க’ சுஜாதா
பிரபாகரின் பெற்றோர்கள்: ஜெயபிரகாஷ் மற்றும் சாரதா
மொத்த அத்தியாயங்கள்: 25
நிலை: கதை முடிவுற்றது