பா.க 04 நீரும் நெருப்பும்…
புதிதாக இழவு விழுந்த வீடு போல இறுக்கமான சூழலில் பார்த்திபன் அம்மாவின் சத்தமான விசும்பல் சத்தம் அமைதியை கலைத்தது. பன்னிரெண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் வந்த பல வீடுகளில் இது தான் தற்போதைய நிலைமை என்ற போதும் பார்த்திபன் வீட்டில் சோகம், கோபம் எல்லாம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. தன் மகன் முதல் ஐந்து வரிசையில் வருவான் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த பார்த்திபனின் அம்மாவுக்கு, அவன் எல்லா பாடங்களிலும் “just pass” ஆனது தாங்கிக்கொள்ள முடியாத அதிர்ச்சியாக இருந்தது.










