| முன் கதை சுருக்கம்... |
|---|
| அஷ்வினை மீண்டும் project-ல் சேர்வதற்கு அழைப்பதற்காக பார்த்திபன் அவன் வீட்டுக்கு போகிறான். அஷ்வின் தான் Project-க்கு விசுவாசமாக இருந்தாலும், சரியான காரணம் இல்லாமல் வெளியேற்றப்பட்டது தனக்கு இழைக்கப்பட்ட அநீதி என்று முதலில் project-க்கு திரும்பி வர மறுக்கும் அஷ்வின், பின்னர் பார்த்திபனின் வற்புறுத்தல் காரணமாக ஒத்துக்கொள்கிறான். ஆனால் அந்த சந்திப்பு பார்த்திபனுக்கு அஷ்வினின் sexual orientation-ஐ மீறி அவனுடைய vulnerability-யும், கலைத்திறமையும் பற்றி அறிந்துக்கொள்ள வாய்ப்பாக அமைகிறது. Flashback-ல் பார்த்திபன் தான் படிப்பை கோட்டை விட்டதற்காக குற்ற உணர்ச்சியில் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் நினைவுக்கு வருகிறது. |
இன்று… கடந்த கால நினைவில் ஆழ்ந்திருந்த பார்த்திபனுக்கு தன் படுக்கை அறை கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டு, சட்டென்று தன் laptop திரையை ஒரு excel spreadsheet-னால் நிரப்பினான். LCD TV திரையில் ஓடும் படத்தை சில நிமிடங்களுக்கு பின்னோக்கி rewind செய்து ஏதோ ஒரு தீவிரமான உரையாடல் காட்சிக்கு கொண்டுவந்து pause போட்டு நிறுத்தினான். சீதா தூக்க கலக்கத்தில் கழிப்பறைக்கு சென்று கதவை தாழிட்டாள். பார்த்திபன் மும்முரமாக வேலை செய்வதாக காட்டிக்கொள்ள முயற்சித்தான். வெளியே வந்த சீதா, தூக்க கலக்கத்தில் லேசாக சோம்பல் முறித்தபடி, கடிகாரத்தில் மணி பார்த்துவிட்டு பார்த்திபனிடம் வந்து நின்றாள். நிமிர்ந்து பார்த்த பார்த்திபனிடம் “என்னங்க… நிறைய வேலை இருக்கா… வந்து படுங்க… நாளைக்கு office-லயும் பண்றதுக்கு கொஞ்சம் வேலையை மிச்சம் வச்சுக்கோங்க…” என்று உரிமையுடன் அவன் முகத்தை தன் மார்பில் அழுத்திக்கொண்டாள். பார்த்திபன் “ம்ம்…” என்று laptop-ஐ மூடினான்.
படுக்கையில் மல்லாந்து கிடந்த பார்த்திபனுக்கு நவீனின் நினைவுகள் இன்பவலியை தூண்டிவிட்டது. “இப்போது நவீன் சந்தோஷமாக இருப்பானா? குழந்தைகள் பிறந்திருக்குமோ?” பார்த்திபன் மனதுக்குள் கேள்விகள் ஓடிக்கொண்டிருந்தது. பக்கத்தில் ஒருக்களித்து தன்னை கட்டிக்கொண்டு படுத்திருக்கும் சீதாவை திரும்பி பார்த்தான். “உலகத்துக்காக நான் இவள் முன்னாடி நடிச்சிட்டு இருக்கேன்… எவ்வளவு நாள் நடிக்க முடியும் தெரியலை…” என்று கீழே நகர்ந்து அவள் நெற்றியில் முத்தமிட்டான். சீதா லேசாக முனக, பார்த்திபன் இன்னும் கீழிறங்கி அவளது காய்களில் முகம் புதைத்தான். காமத்தை விட, அந்த நொடி பார்த்திபனுக்கு தாயின் மார்பில் சாய்ந்து தூங்கும் குழந்தை போல பாதுகாப்பாக உணர்ந்தான்.| மேலே படிக்கிறதுக்கு முன்னாடி... |
|---|
பார்த்திபன் சீதாவை கட்டிக்கொண்டு தன் கையை அவள் முதுகில் அலையவிட்டான். சீதா “தூங்குங்க… காலையிலே சீக்கிரம் எழுந்து உங்களை office-க்கு ready பண்ணி அனுப்பனும்…” என்று தூக்கத்தில் முனகினாள். பார்த்திபன் “சும்மா கட்டிக்கிட்டேண்டி… இன்னைக்கு matter எல்லாம் பண்ணலை” என்று செல்லமாக அவள் மார்பை கடித்துவிட்டு “Good night” என்று அடங்கினான். ஆனால் மனம் அடங்காததால் தூக்கம் வரவில்லை. கொஞ்ச நேரத்துக்கு முன்பு பார்த்த “Boy Erased” படத்தின் மீது அவன் எண்ணம் போனது. படத்தின் நிஜ வாழ்க்கை நாயகனான “Garrard Conley”-ஐ சிலாகித்தான். பார்த்திபனுக்கு “Boy Erased”-ன் Jared போல தன்னுடைய தன்பாலீர்ப்பை வெளியே சொல்ல துணிச்சல் இல்லை என்றாலும், தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களுக்கு தானே காரணம் என்பது அஷ்வினின் வருகையை, அவனுடைய நடவடிக்கைகளை பார்த்ததும் புரிய ஆரம்பித்தது.
இந்த கதை பிடிச்சிருந்ததா? அடுத்து ஏதாவது இன்னொரு கதை படிக்கலாமா?
* பதிவு முதலில் பதியப்பட்ட நாள்: 29/05/2026
| Feedback |
| எழுதின எனக்கு objective-ஆ பார்க்கமுடியாது... படிச்ச உங்களுக்கு கதை எப்படி இருந்தது என்று உங்களோட கருத்துக்களை மறக்காமல் Comments-ல் போடவும். |
|
கதை எப்படி இருக்கு? |



