P G 15. ஒரு மெல்லிய கோடு…

P G 15. ஒரு மெல்லிய கோடு…

No referring post found.

இது Paying Guest தொடர்கதையின் 15-வது அத்தியாயம்.

முன் கதை சுருக்கம்...
Flashback-ல் சமீர் தனக்கு propose செய்தபோது மும்பை போலீஸால் sexual assault செய்யப்பட்டதை நினைத்து அவினாஷ் தான் அவனுக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று மறுக்கிறான். ஆனால் சமீருக்கு ஒரு துணை தேவை என்று தன் gym-ல் பார்த்த ஜோஷுவா என்னும் Brazilian papi-ஐ date-க்கு ஏற்பாடு செய்கிறான். ஆனால் சமீர் தான் அவினாஷுக்காக எவ்வளவு காலம் வேண்டுமானாலும் காத்திருப்பதாக சொல்கிறான்.

“நான் இன்னும் அவங்க கூடவே.. ரவியண்ணா கூட சந்தோஷமா இருந்திருப்பேன்” அவினாஷின் முகத்தில் வெட்கத்தோடு சேர்த்து ஒரு சந்தோஷ புன்னகை.

“And…. you guys fucking each other in discreet, just behind her back… Right?” சமீர் stern-ஆன குரலில் கேட்டான்.

“Yes, Sex-ங்குற aspect-ல பார்த்தா… ஆமாம். Our physical relationship would have been a secret. ஆனா நான் மனசுங்குறதை பார்க்குறேன்”

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி...

“சரி! எவ்வளவு நாளுக்கு அவங்க கூடவே தொங்கிட்டு இருந்திருப்பே? அதுவும் வெறும் Paying guest-ஆவா? இல்லை ரூபா உன்னை தன் புருஷனோட “other man” ஏத்துக்கிட்டு அவங்களோட ரவியை உன் கூட share பண்ணிப்பாங்களா? ரவி bottom பண்றதுக்கு ரூபா, நீ ரவியை bottom பண்றதுன்னு ஒரு erotic chain போடுட்டு ஒரே வீட்டுல இருந்திருப்பீங்களா?”

“ச்சீய்! உன் உதாரணம் நாராசமா இருக்கு… நான் அதையெல்லாம் எதிர்பார்க்கலை.. எனக்கு அவர் பக்கத்துல இருந்து பார்த்துட்டு இருக்குறதே போதும்.”

“அவினாஷ்! நான் சொல்றது கொஞ்சம் harsh-ஆ இருந்தாலும் உண்மை இது தான் – நீ infatuation-ஐயும் love-ஐயும் போட்டு குழப்பிக்கிறே. அப்படியே அது infatuation இல்லை, love-ன்னும், நீ இருந்தது relationship-லன்னே வச்சுக்குவோமே. நீ அங்கேயே இருந்திருந்தாலும் இந்நேரத்துக்கு எல்லாம் நீயா வெளியே போயிருப்பே – ஒன்னு வீட்டை விட்டு.. இல்லைன்னா வெறுத்துப்போயோ / அலுத்துப்போயோ relationship-ஐயே விட்டே விலகியிருப்பே. ஏன்னா எந்த ஒரு உறவுமே அதுக்காக அங்கீகாரம் இல்லைன்னா காலப்போக்குல அதை எதிர்த்து யோசிக்க ஆரம்பிக்கும்…” சமீர் அவினாஷின் கன்னத்தை தன் உள்ளங்கையில் எடுத்து அவன் கண்ணை நேராக பார்த்தான்.

“ஒரு கட்டத்துக்கு அப்புறம் ரவி subtle-ஆவாச்சும் public-ல உன்னை தன்னோட “other man”-ன்னு சொல்லனும்னு எதிர்பார்த்திருப்பே… இல்லைன்னா உன்னோட பிரதிபலன் எதிர்பார்ப்பில்லாத காதலுக்கு அவர் கிட்டே இருந்து acknowledgement எதுவும் இல்லைன்னா, என்னைக்காச்சும் ஒரு நாள் நான் என்ன doormat-ஆ, இல்லை அவருக்கு தோணுறப்போ வந்து என்னை ஓத்துட்டு போறதுக்கு நான் என்ன விபச்சாரியான்னு ஒரு சலிப்பு வந்திருக்கும்… ஆனான் இந்த மாதிரி ஒரு நிகழ்ச்சிக்கு நடக்குறதுக்கு, அந்த சூழ்நிலைக்கு போறதுக்கு முன்னாடி உன்னை வலுக்கட்டாயமா பிரிச்சதால உனக்கு அந்த affair ஒரு romance-ன்னு தோணிக்கிட்டு இருக்கு… உனக்கு affair-க்கும் romantic relationship-க்கும் வித்தியாசம் தெரியும் இல்லை? Ravi can be best.. an affair to remember… அவரால உன்னோட காதலுக்கான acknowledgement-ஐ குடுத்தா தன் மனைவி, குழந்தை முன்னாடி தலை குணிஞ்சு நிக்கனும்னு தெரியும்… கடைசி வரைக்கும் தன்னால உனக்கு வெளிப்படையா அங்கீகாரம் குடுக்க முடியாதுன்னு தெரிஞ்சும் உன் மேலே ஈர்க்கப்பட்டிருக்கார் இல்லைன்னா impractical-ஆ காதல் வசப்பட்டிருக்கார். அதை தப்பு சொல்லவும் முடியாது.. ஏன்னா All is fair in war and love. ஆனா I believe… as a relationship, it is doomed right from the first moment.”

Just ஒரு கேள்வி...

இங்கே கதைகளில் கதாபாத்திரங்களிடையே நடக்கும் உடலுறவை graphical-ஆக எழுதவேண்டுமா? அல்லது கதாபாத்திரங்களை கஜகஜாவுக்கு கொண்டு வந்து மீதியை உங்கள் கற்பனைக்கு விட்டுவிடலாமா?

View Results

Loading ... Loading ...

“சினிமாவுல வர்ற காதல்கள் எல்லாம் கல்யாணம் பண்ணிக்கிறதோட முடிச்சிடுற மாதிரி… ஆனா உண்மையான வாழ்க்கையிலே அதுக்கப்புறம் தானே எல்லா பிரச்சனைகளும் ஆரம்பிக்குது? அது மாதிரி தான் உன்னோட காதல் கதையும்… உண்மையான பிரச்சனைகள் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே முடிஞ்சிட்ட மாதிரி… Just do some objective introspection” சமீரின் குரலில் உண்மையான அக்கறை தொனித்தது.

அவினாஷ் எதுவும் பேசவில்லை… வேண்டுமென்றே பேசவில்லையா இல்லை வாயடைச்சு போயிருக்கிறானா என்று தெரியவில்லை. அவன் கண்களில் அடிபட்ட கோபமும், வலியின் இயலாமையும் தெரிந்தது. ஆனால் சமீரின் ஒவ்வொரு வார்த்தைகளும் நிதர்சனமானவை என்பது மட்டும் அவனால் ஒத்துக்கொள்ள முடிந்தது.

“அவி! உன்னோட காதலை நான் infatuation-ன்னும், affair-ன்னும் சொல்லி கொச்சைப்படுத்திட்டதா நினைச்சேன்னா நான் மனப்பூர்வமா மன்னிப்பு கேட்டுக்குறேன். என்னோட உத்தேசம் அது இல்லை. நீ என்னோட love proposal-ஐ ஏத்துக்கனுங்குறதுக்காக இதையெல்லாம் சொல்லலை… நான்னு இல்லை வேற யார் கூடன்னாலும் பரவாயில்லை… என்னை பொருத்தவரைக்கும் நீ ஒரு நல்ல உறவுல dignified-ஆ, உலகத்து முன்னாடி தலை நிமிர்ந்து இருக்கனும். ஏதோ காரணங்களுக்காக வெளியே சொல்லிக்க முடியாதபடி வெட்கப்பட்டோ இல்லை அசிங்கமா நினைச்சோ, மறைஞ்சு ஒளிஞ்சு இருக்கக்கூடாது. நம்ம ஊர்ல பொம்பளைங்க தன் புருஷன் குடிகாரன், abusive husband-ன்னு இருந்தாலும் ஏன் விட்டுட்டு போறதில்லை? அவங்களுக்கு கல்யாணம், புருஷன் தர்ற ‘அடிச்சாலும் புடிச்சலும் நான் இவனோட என் பொண்டாட்டி’-ங்குற diginity தான். எந்த ஒரு relationship-லேயும் அந்த dignity தான் ரொம்ப முக்கியம்…” அவினாஷின் மௌனம் இன்னும் கனத்தது.

முடிக்கப்போவதற்கு அறிகுறியாக சமீர் அவினாஷின் நெற்றியில் தன் நெற்றியை ஒட்டி மூக்கோடு மூக்கு உரசியபடி “ஒருவேளை என்னைக்காச்சும் நீ என்னோட காதலை புரிஞ்சுக்கிட்டு என்னோட proposal-ஐ ஏத்துக்குவேங்குற நப்பாசை காரணமா தான் எனக்கு முன்னாடி நீ முதல்ல settle down ஆகனும்னு நான் காத்துட்டிருக்கேனோ என்னவோ. எது எப்படியோ… நீ முதல்ல ஒரு நல்ல partner-ஆ பார்த்து ஒரு நிலையான relationship-ல settle ஆகு. அதை பார்த்த சந்தோஷத்துல நானும் எனக்கான சரியான துணை கிடைக்கும்போது நிச்சயம் settle ஆவேன்…. சரி! ரொம்ப பேசிட்டேன் போல… வயிறு பசிக்குது. சரி! நீ வாங்கிட்டு வந்த Salaam Bombay பாக்கெட் எங்கே? என்ன வாங்கிட்டு வந்தே?” சமீர் எழுந்து போக, அவினாஷ் தரையை வெறித்து பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான்.

சமீர் சாப்பாட்டு தட்டோடு அவினாஷ் பக்கத்தில் உட்கார்ந்து ஒரு டோக்லா துண்டை எடுத்து அவினாஷுக்கு ஊட்டிவிட, அவன் மறுப்பேதும் சொல்லாமல் அதை கடித்து வாயில் வாங்கிக்கொண்டு, மெல்லாமல், விழுங்காமல் எதுவும் பேசாமல் யோசித்துக்கொண்டிருந்தான்.

“அவி! Truth always hurts and I know that you are hurt now… But eventually you’ll get through. இந்த கேள்விங்களை உன் கிட்டே கேட்கனும்னு கடந்த ரெண்டு வருஷமா தோணிக்கிட்டே இருந்துச்சு ஆனா அதுக்கான சந்தர்ப்பம் இன்னைக்கு தான் வந்துச்சு… இதையெல்லாம் சொன்னதால உனக்கு என் மேலே கோபம் இருந்தா அதை மனசுக்குள்ளேயே வச்சுக்காத அவி… என்னை நாலு அடி அடிச்சிட்டு உடனே மறந்துடு.” சமீர் எட்டி அவினாஷின் கன்னத்தில் மென்மையாக முத்தம் வைத்தபோது அவினாஷால் தடுக்க முடியவில்லை.

“ஐயோ! உன் கன்னத்துல எச்சில் ketchup ஒட்டிக்கிடச்சு… போய் மூஞ்சி கழுவிட்டு வா…” என்ற சமீர் கடிகாரத்தை பார்த்ததும் “இல்லைடா.. போய் படு. நானும் கை கழுவிட்டு வர்றேன். It is already too late. நீ காலையிலே gym-க்கு போறதுக்காக எழுந்திருக்கனும் இல்லை” என்று சொல்ல, அவினாஷ் எழுந்து சோர்வாக நடந்து போனான்.

ஒரு நாள் மதியத்தின் பின் பகுதி… அலுவலகமே பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்க, அவினாஷ் சற்றே களைப்பாறிக்கொள்ள Pantry-க்கு சென்று Vending amchine-ல் Green Tea பிடித்துக்கொண்டிருந்தபோது பழக்கம் காரணமாக தன்னிச்சையாக mobile phone-ஐ எடுத்து பார்க்க அதில் குறுஞ்செய்தி வந்திருப்பதன் அடையாளமாக WhatsApp-ன் வெள்ளை வெளிச்சம் கண்ணடித்துக்கொண்டிருந்தது. சுவாரசியம் இல்லாமல் அவினாஷ் அதை எடுத்து பார்க்க, Notification Bar-ல் message-ஐ படித்ததும் அவினாஷுக்கு குப்பென்று வியர்த்தது.

Delete செய்யாமல் Contacts-ல் இன்னும் சேமிக்கப்பட்டிருந்த ரூபாவின் எண்ணில் இருந்து “Is this Avinash”? என்று ஒற்றை வரி செய்தி அவினாஷின் மனதில் ஆயிரம் கேள்விகளை தட்டியெழுப்பியது.

இந்த Paying Guest இன்னும் தொடரும்...

இந்த கதை பிடிச்சிருந்ததா? அடுத்து ஏதாவது இன்னொரு கதை படிக்கலாமா?


* பதிவு முதலில் பதியப்பட்ட நாள்: 31/05/2019
* Read in Wattpad: https://orinakadhalkadhaigal.blogspot.com/2019/05/p-g-15.html
Feedback
எழுதின எனக்கு objective-ஆ பார்க்கமுடியாது... படிச்ச உங்களுக்கு கதை எப்படி இருந்தது என்று உங்களோட கருத்துக்களை மறக்காமல் Comments-ல் போடவும்.
Comments

கதை எப்படி இருக்கு?

0 / 5 Results 0 Votes 0

Your page rank:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA

Free Sitemap Generator
Scroll to Top