தொடர்கதைகள்

02. வெயிலோடு விளையாடி…

கதை எப்படி இருக்கு?

0 / 5 Results 1 Votes 1

Your page rank:

Just ஒரு கேள்வி...

சமுதாயமும் சுற்றத்தோரும் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் நீங்கள் openly gay-ஆக Come Out செய்வீர்களா?

View Results

Loading ... Loading ...
  1. 01. இதுவரை எங்கிருந்தாய்?
  2. 02. வெயிலோடு விளையாடி…
  3. 03. நினைக்க தெரிந்த மனமே
  4. 04. Friendship with benefits…. (கடைசி அத்தியாயம்)

“தம்பி! நீ என்னை மாசு விட்டுல விட்டுட்டு உன்னோட சோலிய பார்க்க போறதுன்னா போ… கிடா குட்டி பாக்க கவுண்டர் காட்டுக்கு போகோனும்..” வண்டியில் பின்னாடி உட்கார்ந்திருந்த அப்பா சொன்னது எதுவும் ரவிக்கு உரைக்கவில்லை. ரமேஷ் தன்னிடம் தான் ஊருக்கு வருவதை பற்றி சொல்லாதது அவனுக்கு முதலில் கோபமாக இருந்தது. பின்னர் “நாம் தானே அவனை பத்தி எப்போ பார்த்தாலும் நினைச்சிட்டு இருக்கோம்… அவன் என்னை பொருட்டாவே மதிக்கலைன்னு தெரியுது. நானும் அவனை தேவைக்கு அதிகமா நினைக்கிறதை நிறுத்திக்கனும்” என்று மனசுக்குள்ளேயே பேசிக்கொண்டான். ரவியின் Pulsar மாசிலாமணி மாமாவின் வீட்டு களத்தில் வந்து நிதானமாக குலுங்காமல் நின்றது.

Random கதைகள்

இவர்களை எதிர்பார்த்துக்கொண்டிருந்தது போல மாசிலாமணி வாசலில் கயிற்று கட்டிலில் உட்கார்ந்திருந்தார். இவர்கள் வந்ததும் அவர் எழுந்து வந்தார். வரவேற்று மகிழ்வதனி கொண்டு வந்த காஃபியை எல்லோரும் குடித்தபடி பேசிக்கொண்டிருந்தபோது மாசிலாமணி லேசாக தொண்டையை செருமியபடி சொன்னார்.

“ராசு! இந்த வண்டிக்கு என்ன கேடு வந்துச்சுன்னு தெரியலை… எழவு start ஆகவே மாட்டேங்குது. அதனால நான் கவுண்டன் கிட்டே நாளைக்கு குட்டியை பிடிச்சுட்டு நேரா கோவிலுக்கு வர சொல்லிடுறேன்.”

திரை படைப்புகள்

அப்பா ரவியை பார்த்த பார்வையில் அவர் அவனுடைய வண்டியை கேட்கிறார் என்று தெரிந்தது.

ரவி “அப்பா.. நான் மாசு மாமாவை கூட்டிக்கு போறேன்” என்றான்.

சைட்டிக்க கவர்ச்சி ஆண்கள்

மாசிலாமணி சாங்கடத்தோடு “நீ எதுக்கு ரவி வீணா அலையுறேங்குற? அந்த கவுண்டனை கொஞ்சம் நம்ப முடியாது தான்… சில சமயம் நம்ம கிட்டே தலையாட்டிட்டு ஏதாச்சும் கிடாரி குட்டியை புடிச்சுட்டு வந்துடுவான். அவ்வளவு தான். ஆனா கட்டாயம் ஏதாச்சும் ஒரு குட்டி எடுத்துட்டு வந்துடுவான்… நீ உன்னோட சோலியை பாரு” என்றார்.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி

Dating apps-ல hook up பண்றவங்க கூட எத்தனை தடவை sex வச்சுப்பீங்க?

View Results

Loading ... Loading ...

“பரவாயில்லைங்க மாமா… எனக்கு பெருசா வேலை எதுவும் இல்லை… நானே உங்கள கூட்டிட்டு போறேன்” – ரவி.

“அப்போ நான் ரவி கூட போறேன்ப்பா..” ரமேஷ் சொன்னபோது ரவி சட்டென்று நிமிர்ந்து பார்த்தான். “அவன் அலையும்போது நான் வீட்டுல உட்கார்ந்துட்டு ஏற்பாடுகளை கவனிக்க கஷ்டமா இருக்கு… ஒன்னு பண்ணுங்க. இந்த தாம்பூலம் போடுறது, சமையல்காரனை கூப்பிட்டு பேசுறதை எல்லாம் நீங்களும் ராசு மாமாவுன் பார்த்துக்கோங்க… நான் ரவி கூட போயிட்டு வர்றேன்”.

கிணத்துக்கடவிலிருந்து கொண்டாம்பட்டி செல்லும் பொக்கையான சாலையில் போகும்போது ரவிக்கு வானத்தில் பறப்பது போல இருந்தது. பின்னால் ரமேஷை சுமந்துக்கொண்டு போவது ஒரு காரணமாக இருந்தால், அந்த குண்டு குழியுமான சாலையின் காரணமாக ஒவ்வொருமுறை பிரேக் அடித்தபோதும் ரமேஷ் கொஞ்சம் கொஞ்சம் நெருங்கி ரவியின் முதுகோடு ஒட்டிக்கொண்டதும், சீரான சாலை வந்தபோதும் அவன் நகராததும் இன்னொரு காரணமாக இருக்கலாம்.

“ரவி! உனக்கு HR கிட்டே இருந்து ஏதாச்சும் email/call வந்துச்சா?”

“இல்லையே ரமேஷ்..”

“நான் உன்னோட profile-ஐ refer பண்ணி 2 வாரம் ஆகுது… சரி! நான் சென்னை போனதும் follow up பண்றேன்”.

“ரமேஷ்! நான் நீ கேட்டியேங்குறதுக்காக என்னோட profile share பண்ணினேன். நான் இப்போ இருக்குற இடத்துலேயே நிம்மதியா இருக்கேன். பெரிய சம்பளம் இல்லைன்னாலும் பிரச்சனைகளும் pressure-ம் இல்லை… வீடு-வேலை-வீடுன்னு வாழ்க்கை அமைதியா போகுது. ஒருவேளை உங்க கம்பெனியிலே இருந்து கால் வந்தாலும் கோயம்புத்தூர் ஓபனிங்கா இருந்தா மட்டும் தான் இண்டர்வியூ அட்டெண்ட் பண்ணுவேன்… நீ தப்பா எடுத்துக்காதே”.

“ம்ம்…” ரமேஷ் விட்ட பெருமூச்சு ரவியின் கழுத்து காலர் பகுதியில் பலமாக அடித்தது. “எனக்கு இந்த தெளிவு இல்லாததால நான் Onsite-க்கு ஆசைப்பட்டு சென்னையிலே போய் மாட்டிக்கிட்டேன். அப்புறம் வேலை Skillset-ன்னு அங்கே இருந்து வெளியே வரமுடியமாட்டேங்குது… தனியா இருந்தவரைக்கும் தெரியலை… இப்போ குழந்தை வந்தாப்புறம் எனக்கு எப்போடா அங்கேயிருந்து வெளியே வருவோம்னு இருக்கு” என்றபடி இயல்பாக ரவியின் இடுப்பை சுற்றி கையைபோட்டான்.

“கவுண்டர் காடு வந்துடுச்சு..” ரவி சொன்னபோது ரமேஷ் விலகி நிமிர்ந்து உட்கார்ந்தான்.

“அவிக அங்கன கொட்டிலுக்கு போயிருக்காக… போய் பாக்குறீங்களா?” கவுண்டரம்மா அந்த பொட்டல் காட்டுக்குள் கொஞ்சம் தூரத்திலிருந்த கொட்டகையை கைகாட்டினார். ரவியும் ரமேஷும் அந்த திசையை நோக்கி நடக்கும் முன்பு “காபி தண்ணி குடிச்சிட்டு போறீகளா?” என்று கொங்கு மண்ணின் உபசரிப்பை வெளிப்படுத்த, “இருக்கட்டும் ஆத்தா… வர்றயிலே குடிச்சுக்குறோம்” என்று ரவி சொல்லிவிட்டு நடக்க, கூடவே ரமேஷும் நடக்க ஆரம்பித்தான்.

நல்ல சரளை மண்… உச்சி வெயில், கொஞ்சம் தூரத்தில் பனை மரங்களின் வரிசை எனஅந்த வறண்ட பூமியில் இருவரும் நடக்க, ரவிக்கு தொண்டை வறண்டது. பேசாமல் கவுண்டரம்மாவிடம் ஒரு சொம்பு தண்ணி குடிச்சிட்டு வந்திருக்கலாமோ என்று தோன்றியது. அந்த கவனசிதறலில் கால் சறுக்க, சரளை மண்ணின் சிறுசிறு கற்களில் வழுக்கி விழுந்தான். விழுந்த வேகத்தில் எழுந்த செம்மண் படலம் அவன் முகத்தில் பலமாக தாக்க, பொடிக்கற்கள் ரவியின் கண்களுக்குள் போனதும் அவன் கண்கள் reflex action-ல் தானாக இறுக்க முடிக்கொண்டது. ரமேஷ் அவனை தூக்குவதை உணரமுடிந்தது.

“ரவி! ஒன்னுமில்லையே?” ரமேஷின் குரலில் லேசான பதற்றம்.

“இல்ல ரமேஷ்… கண்ணுல தூசி” என்று சொன்னபடி நின்றபடியே ரவி கண்னை திறக்க முயற்சித்தான். இதற்கிடையில் ரமேஷ் ரவியின் புஜங்களை பிடித்து அவனை பனை மரத்துக்கு நடத்திச்சென்று அவனை மரத்தில் சாய்த்து நிற்கவைத்தான். ரமேஷ் ரவியின் கண்களில் பலமாக ஊதினான். அவனது முயற்சிக்கு பலன் கிடைத்தது. ரவியால் லேசாக கண்களை திறக்க முடிந்தது. ரவி கண் திறந்ததும் அவன் கண்ட காட்சி பரவசமூட்டுவதாக இருந்தது. ரமேஷ் ரவியை கன்னங்களை தன் இரண்டு உள்ளங்கைகளாலும் நளினமாக ஏந்தியபடி, தன் உதடுகளை குவித்தபடி ரவியின் முகத்துக்கு நெருக்கமாக வந்துக்கொண்டிருந்தான். ரவிக்கு ரமேஷ தன்னை கிஸ்ஸடிக்கப்போவதாக தோன்ற, கிளர்ச்சியில் அவன் கண்கள் மீண்டும் மூடிக்கொண்டது.

ரமேஷின் கட்டைவிரல்கள் கன்னத்தை கீழே இழுத்தபடி இரண்டு கண்களையும் திறக்க, ரமேஷின் உதட்டில் இருந்து வந்த மெல்லிய சூடான காற்று ரவியின் கண்ணில் இருந்த சிறு துகள்களை மென்மையாக வெளியேற்றியது. அப்படியும் ரமேஷின் குவித்த உதட்டில் இருந்து வந்த தென்றல் காற்று ரவியின் முகமெங்கும் பட்டு சில்லென இருந்தது. ரவிக்கு தான் சொர்க்கத்தில் இருப்பது போல தோன்ற, ரமேஷின் சட்டை காலர்களை தன் கைகளால் பிடித்துக்கொண்டு மீண்டும் மரத்தில் சாய்ந்தான். அந்த இழுப்பில் ரமேஷும் அவன் மீது சரிந்தான்.

“என்னாச்சப்பு…. அடிகிடி பட்டிருக்கா?” ரமேஷ் குரல் கேட்ட திசையில் நகர்ந்து திரும்ப, கவுண்டர் இவர்களை நோக்கி வந்துக்கொண்டிருந்தார். ரவி மரத்தில் இருந்து எழுந்து கண்களை கசக்கியபடி மீண்டும் திறக்க முயற்சித்தான். ரமேஷ் ரவியின் கைகளை பிடித்துக்கொண்டு “கசக்காதே ரவி! ஏதாவது சின்ன மண்ணு இருந்தா கூட கண்ணுல கீறல் விழுந்துடும்… கொஞ்சம் பொறுத்துக்கோ” என்று சொன்னபடி கவுண்டரிடம் “கொஞ்சம் தண்ணி இருக்கா? ரவி கண்ணுல மண்ணு அடிச்சிருக்கு… கழுவனும்” என்றான்.

அவரிடம் இருந்த தூக்கு சட்டியில் கொஞ்சம் தண்ணீர் இருந்தது. ரமேஷ் அதை தன் குவித்த கைகளில் எடுத்து மடியில் படுத்திருந்த ரவியின் கண்ணில் ஊற்றினான். வழிந்த தண்ணீரோடு சிறு சிறு மணல் துளிகளும் வெளியேற, ரவிக்கு கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது.

இருவரும் கிடாயை பார்த்து முடிவு செய்துவிட்டு முன்பணம் கொடுத்துவிட்டு கிளம்ப, ரமேஷ் தான் வண்டியை ஓட்டுவதாக சாவியை பிடுங்கிக்கொண்டான். ரவி பின்னால் உட்கார்ந்துக்கொண்டு ரமேஷை கட்டிக்கொண்டு அவன் பரந்த முதுகில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டான். வண்டி செல்ல செல்ல ரவிக்கு தான் வானத்தில் பறந்துபோவது போல இருந்தது.

“ரவி! இப்போ பரவாயில்லையா? கொஞ்சம் பொறுத்துக்கோ… சீக்கிரம் வீட்டுக்கு போயிடலாம்” – ரமேஷ் சொன்னது எதுவும் ரவியின் மண்டைக்கு ஏறமறுத்தது. ரவியின் மொபைல் சிணுங்கியபோது ரவியின் கனவு கலைந்து மீண்டும் பூமிக்கு வந்தான். ரவி அழைப்பை ஏற்பதற்கு வசதியாக ரமேஷ் வண்டியை சாலையோரத்தில் ஒரு மரத்தடியில் நிறுத்தினான்.

“அப்பா தான் கூப்பிட்டாங்க… முடிஞ்சா கோவிலுக்கு போய் கோவிந்தன் கிட்டே மண்டபத்தை சுத்தப்படுத்தி வைக்க சொல்ல சொன்னாங்க. அவன் மறந்தாலும் மறந்திடுவானாம். அவன் கையிலே ஒரு நூறு ரூபாய் குடுத்துட்டா சுத்தமா துடைச்சு வச்சிடுவானாம்.”

“இப்போ சேத்துமடை வரைக்கும் போகனுமா?”

“ஆமாம்… பின்னே?”

“இல்ல ரவி… தாங்குவியா? ஏற்கனவே தூசி அடிச்சி நீ களைப்பா இருக்கே… கோவிலுக்கு போயிட்டு வர நேரமாயிடும்…”

“அதுக்கென்ன… பொள்ளாச்சியிலே ஏதாச்சும் சாப்பிட்டுக்கலாம். ரவிக்கு ரமேஷுடன் தனியாக கழிக்கும் இந்த தருணங்களை லேசில் விட்டுவிட மனசில்லை.

“ரவி… உனக்கு பிரச்சனை இல்லைன்னா ஓட்டுற எனக்கென்ன பிரச்சனை”. ரமேஷ் வண்டியை மீண்டும் உதைத்து உயிர்கொடுத்து ஓடவிட்டான்.

பொள்ளாச்சியை தாண்டியதும் அம்பராம்பாளையத்து கூட்டு ரோட்டில் ஜூஸ் கடையில் வண்டியை நிறுத்திவிட்டு ரவி இறங்கியதும் ரமேஷ் இறங்கினான். “ரவி! எனக்கு தர்பூசனி ஜூஸ் சொல்லேன்” என்று சொல்லிவிட்டு கடை வாசலில் இருந்த பைப்பில் திறந்து முகம் கழுவினான். பின்னர் கர்சீஃபை எடுத்து முகம் துடைத்தபடி டேபிளில் உட்கார்ந்தான்.

“சொல்லிடியா ரவி?” என்று எதிரில் உட்கார்ந்திருந்த ரவியிடம் கேட்டான்.

“ம்ம்… எனக்கு முலாம்பழம் உனக்கு தர்பூசனியும் சொல்லியிருக்கேன்”. ரவி சொல்லிமுடிக்கும் முன்பு கடையில் வேலை செய்யும் பையன் இரண்டு நெடிய கண்ணாடி கோப்பைகளை கொண்டு வந்து வைத்தான்.

ரமேஷ் ஒரு கோப்பையை எடுத்து லேசாக உறிய, அவன் முகம் சட்டென்று மாறியது.

“என்னாச்சு ரமேஷ்?”

“நான் தர்பூசனின்னு நினைச்சு முலாம்பழ ஜூசை சிப் பண்ணிட்டேன்.” என்று சொல்லிவிட்டு “தம்பி! இங்கே வா..” கடைக்கார பையனை கூப்பிட்டான்.

“இன்னொரு முலாம்பழ ஜூஸ் கொண்டு வா” பக்கத்தில் வந்த பையனிடம் சொன்னான்.

“ஏன் ரமேஷ்?”

“உனக்கு தான்… அது எச்சி ஆயிடுச்சே..” என்று சொன்னபடி அதை டேபிளின் மூலைக்கு நகர்த்த, ரவி கடைக்கார பையனிடம் “வேணாம்பா… நீ போ” என்று சொல்லிவிட்டு அந்த ஜூஸ் கோப்பையை தன் பக்கம் இழுத்தான். அதிலிருந்து குடித்தபடியே ரமேஷை பார்த்தான் “எனக்கு பிடிச்சவங்களோட தட்டுல, கப்புல இருந்து சாப்பிடுறதுல சங்கடம் இல்லை…”

“ஹா ஹா! இந்த கொஞ்ச தர்பீஸ் ஜூஸ் குடியேன்…” ரமேஷ் தன் கோப்பையை ரவியிடம் தள்ளினான்.

“ஏன் என்னோட ஜூஸ் கப்-ல இருந்து கொஞ்சம் குடிச்சதுக்கு பதிலா?” ரவி சிரித்தபடி ஜூஸ் கோப்பையை ரமேஷிடம் நகர்த்தினான்..

“அப்படி இல்லை… முழுசா குடுக்கல… கொஞ்சம் டேஸ்ட் பண்ணிப்பாரேன்…” ரமேஷ் மீண்டும் கோப்பையை ரவியின் பக்கம் தள்ளினான். 

“எச்சி ஆயிடுச்சுன்னா திரும்ப ஆர்டர் பண்ணனும்…” ரவி கேலியாக சிரித்தான்.

“நான் strangers கிட்டே அந்த formality பார்ப்பேன்… ஆனால் மனசுக்கு நெருக்கமானவங்க கிட்டே அந்த சுத்தம் எல்லாம் பார்க்கமாட்டேன்…. So எனக்கு நீ யாருன்னு இப்போ நீ தான் சொல்லனும்….” ரமேஷ் சொல்லி முடிக்கும் முன்பு ரவி அவனது கோப்பையை எடுத்து நளினமாக ஒரு சிப் எடுத்துக்கொண்டு மீண்டும் ரமேஷிடம் வைக்க, அவனும் ரவியை பார்த்தபடி மீதியை காலி செய்தான்.

கோவிலுக்கு போய்விட்டு மீண்டும் வீட்டுக்கு வரும்போது நன்றாக இருட்டியிருந்தது. ரவியின் அம்மாவும், அப்பாவும் வந்திருந்தார்கள். அடுத்த நாள் காலையில் சீக்கிரம் கிளம்பவேண்டியிருக்கும் என்பதாலும், இவர்களுக்கு உதவிகள் செய்வதற்காகவும் ரவியின் பெற்றோர்கள் அன்றிரவு அங்கேயே தங்கிக்கொள்வது போல வந்திருந்தார்கள்.

ரமேஷின் குழந்தை தத்தி தத்தி நடந்துவந்து ரவியின் காலை கட்டிக்கொண்டு மழலையில் “மாமா… இங்க்கா” என்றது. ரவி அதை ஆசையோடு தூக்கிக்கொண்டான்.

“ஆச்சரியம்… என் பையன் யாரை பார்த்தாலும் பூச்சாண்டியை பார்த்தது மாதிரி அலறுவான்… உன் கிட்டே தான் தான் வந்து கட்டிக்கிட்டான்… அவனுக்கும் உன்னை பிடிச்சிடுச்சு போல…” ரமேஷ் சொன்னபோது ரவிக்கு அவன் “அவனுக்கும்” என்ற வார்த்தையை அழுத்திச்சொன்னது போல இருந்தது.

அனைவரும் சாப்பிட்ட பிறகு “ரவி! பேசாம ராத்திரி இங்கேயே படுத்துக்கோ.. என்னோட லுங்கியை கட்டிக்கோ. காலையிலே போகும்போது குளிச்சுட்டு டிரஸ் மாத்திக்கலாம்” என்று ரமேஷ் சொன்னபோது ரவியால் தட்ட முடியவில்லை.

களத்தில் போடப்பட்ட கயிற்றுக்கட்டிலில் படுத்து வானத்தை பார்த்தபடி அன்று நடந்த நிகழ்ச்சிகளை மனதில் அசைபோட்டபடி ரவி படுத்திருந்தான். பக்கத்தில் ஏதோ சத்தம் அவன் கனவை கலைக்க, திரும்பி பார்த்தபோது ரமேஷ் இன்னொரு நாடா கட்டிலை பக்கத்தில் விரித்துக்கொண்டிருந்தான். ரவி ரமேஷை பார்த்து சினேகமாக சிரிக்க, ரமேஷும் சிரித்தபடி கட்டிலின் மீது விரிப்பை பரப்பி தலையணையை போட்டான்.

“அசதியா இருக்குல்ல…” ரவி கேட்டபோது ரமேஷ் “ம்ம்..” என்று ஆமோதித்தபடி படுத்தான். கொஞ்ச நேரம் அங்கே கனத்த மௌனம். இருவருக்கும் என்ன பேசுவது என்று தெரியவில்லை.

“உனக்கு அந்த கட்டில் வசதியா இருக்கா?”

“ம்ம்… ஏன் ரமேஷ்?”

“இல்லை… அது ரொம்ப தாழ்வா இருக்கும்… சில சமயத்துல அதுல படுத்தா எனக்கு முதுகு வலிக்கும். அதனால கேட்டேன். உனக்கு வசதியா இல்லைன்னா வந்து என் கூட படுத்துக்கோ… இது டபுள் காட் தான்”

ரவி எழுந்து ரமேஷின் பக்கத்தில் படுத்துக்கொண்டான். ரமேஷ் ஒருக்களித்து படுத்ததில் அவன் சூடான பெருமூச்சு ரவியின் மீது அடிப்பதை உணரமுடிந்தது.

“ஏன் ரமேஷ்… இப்படி பெருமூச்சு விடுறே? உடம்பு அழன்றுபோச்சா?”

“இல்லை ரவி! நாளைக்கு ராத்திரி திரும்ப சென்னை ஓடனும்… ஒரு நாள் கூடுதல் லீவ் கேட்டதுக்கு என்னோட புராஜெக்ட் மேனேஜர் அவ்வளவு பிரச்சனை பண்ணிட்டான். இதையெல்லாம் நினைச்சா என்ன பொழப்புன்னு தோணும். இங்கேயே நம்ம ஊரை சுத்தியும் அவ்வளவு engineering colleges இருக்கு… கொஞ்ச நாள் கழிச்சு பேசாம எங்கேயாச்சும் லெக்சரர் வேலைக்காச்சும் போயிடலாம்னு தோணுது. உன்னை பார்த்தா இப்போ எனக்கு பொறாமையா இருக்கு. நிம்மதியா இருக்கே…”

“இல்லை ரமேஷ்… இக்கரைக்கு அக்கரை பச்சை. நீ அலட்டிக்காம தூங்கு… காலையிலே சீக்கிரம் எழுந்து ஓடனும்”

கொஞ்ச நேரத்தில் எல்லாம் ரமேஷிடம் இருந்து மெல்லிய குறட்டை வெளிப்பட, ரமேஷின் உடலோடு ஒட்டிக்கொண்டு படுத்திருக்கும் அருகாமை ரவியை சலனபடுத்தி வந்த கொஞ்ச நஞ்ச தூக்கத்தையும் விரட்டியிருந்தது. ரவி ரமேஷ் பக்கம் ஒருக்களித்து படுத்தான்.

அந்த நிலா வெளிச்சத்தில் ரமேஷ் லேசாக வாயை திறந்துக்கொண்டு தூங்குவதை பார்த்து அவனுக்கு வாஞ்சை ஊற்றெடுக்க ஆரம்பித்தது. ரமேஷின் கன்னங்களை லேசாக தடவினான். அவனது தாடையை தன் விரல்களால் லேசாக அழுத்தி திறந்த வாயை மூடினான். ரவி ரமேஷின் முகத்தின் அருகே தன் முகத்தை கொண்டு சென்று தன் சூடான மூச்சுக்காற்றால் அவன் முகமெங்கும் தொடாமல் தடவினான். ரமேஷின் முகத்தை அப்படியே பார்த்துக்கொண்டிருந்தான். எவ்வளவு நேரம் பார்த்துக்கொண்டிருந்தோம் என்று ரவிக்கே தெரியாத அளவுக்கு அந்த காற்றில் காதல் மயக்கம் கலந்திருந்தது.

கடைசியில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு ரமேஷின் நெற்றியில் தன் இதழ்களை பதித்தான். ரமேஷின் உடம்பில் அசைவு எதுவும் தெரியவில்லை. ரவி மெல்ல கீழிறங்கி ரமேஷின் உதட்டை தன் நுணிவிரலால் தடவினான். அடர்த்தியான மீசைக்கிடையே கொஞ்சம் போல அவன் மேலுதடு தெரிந்தது. கீழுதட்டை தன் விரலால் லேசாக தடவிவிட்டு ரவி அதை கவ்வுவதற்காக குணிந்தான்.

அதே நேரம் சில டார்ச் லைட் வெளிச்சங்கள் இவர்களை நோக்கி வருவதை கண்டு ரவி எழுந்து “யாரது?” என்று சத்தம் கொடுத்தான்.

இந்த சத்தத்தில் ரமேஷும் எழுந்துக்கொண்டுவிட, டார்ச்லைட்டுகள் நெருங்கி வந்தன.

“நீங்களா மாமா…. யாரது இந்நேரத்துலன்னு குழம்பிட்டேன்” ரமேஷின் முகத்தில் தெரிந்த புன்னகை வந்தவர்கள் ரமேஷுக்கு தெரிந்தவர்கள் என்று சொன்னது.

வந்த உறவுக்காரர்களுக்காக ரமேஷ் தனது கட்டிலை விட்டுக்கொடுத்து வீட்டுக்குள்ளே படுக்க போய்விட, ரவி அதற்கு மேலும் அங்கே நிற்க பிடிக்காமல் தனது பல்ஸார் வண்டியை களத்துக்கு தாண்டி தள்ளிக்கொண்டு போய்விட்டு உதைத்து ஸ்டார்ட் செய்து வீட்டுக்கு போனான்.

ஏனோ ரவிக்கு அழவேண்டும் போல இருந்தது. அன்றைய பொழுதில் இருவரும் நெருங்க ஆரம்பித்ததை நினைத்து சந்தோஷப்படுவதா இல்லை உடலளவில் நெருங்குவதற்கு கிடைத்த வாய்ப்பு கைகூடும் முன்பே தொலைந்துவிட்டதை நினைத்து வருத்தம் கொள்வதா என்று அவன் மனதுக்கு புரியவில்லை. ரவி எப்போது உறங்கிப்போனான் என்று அவனுக்கு தெரியவில்லை.

கதை எப்படி இருக்கு?

0 / 5 Results 1 Votes 1

Your page rank:

Picture of the day


02. வெயிலோடு விளையாடி…
மேலும் காட்ட

இதோ.. நீங்க தொடர்கதை படிக்கிறதால கேட்குறேன்.

இதுவரை வந்த தொடர்கதைகளில் உங்களுக்கு பிடித்த கதை / கதைகள்?

தொடர்கதை பிடித்ததற்கு காரணம்? (பல காரணங்கள் தேர்வு செய்யலாம்)

தொடர்கதைகள் படிப்பதில் எரிச்சலான விஷயம்?

அதிகபட்சம் எத்தனை அத்தியாயங்கள் இருக்கலாம்?


அனைத்து பதிவுகளையும் ஒரே table-ல் காண, இங்கே click செய்யவும்.

காதல்ரசிகன்

காதலுக்கும் காமத்துக்கும் பால் (Gender) தேவையில்லை என்று கருதும் கூட்டத்தில் ஒருத்தன். அழகு எங்கிருந்தாலும், யாரிடமிருந்தாலும் ரசிக்கும் கலாரசிகன். அன்பு எங்கிருந்து கிடைத்தாலும் பால் நோக்காமல் கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் கொண்டவன். கட்டிலில் கட்டியவளோடு புணர்ந்தாலும் நான் ஓரினச்சேர்கையாளனும் கூட என்று சொல்லிக்கொள்வதில் வெட்கமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Free Sitemap Generator

Adblock Detected

Please disable the adblocker for this site (not only the page) to render the in-line related posts blocks effectively and reload the page.