தொடர்கதைகள்

P G 08. அப்புறம்

கதை எப்படி இருக்கு?

0 / 5 Results 0 Votes 0

Your page rank:

Just ஒரு கேள்வி...

இங்கே கதைகளுக்கு கொடுக்கப்படும் featured image மற்றும் பெயர்கள் படிக்கும் போது உங்கள் கற்பனையை influence செய்கிறதா?

View Results

Loading ... Loading ...
  1. P G 01. Proposal
  2. P G 02. கிணத்துத்தண்ணி
  3. P G 03. உடம்பு வலி
  4. P G 04. காதல் கம்மிநாட்டி…
  5. P G 05. கற்று தெரிவது காமக்கலை….
  6. P G 06. பலவந்தம்
  7. P G 07. கோடை (கானல்) காதல்
  8. P G 08. அப்புறம்
  9. P G 09. எந்நாளும் நம் குடும்பம்
  10. P G 10. ஆப் (App) வைத்த ஆப்பு
  11. P G 11. பிரளயம்
  12. P G 12. பிரிவு
  13. P G 13. புயலுக்கு பின் அமைதி – இந்தப்பக்கம்
  14. P G 14. ஜோஷுவா – சமீரை இமை போல காக்க…
  15. P G 15. ஒரு மெல்லிய கோடு…
  16. P G 16. புயலுக்கு பின் அமைதி – அந்த பக்கம்
  17. PG 17. மீண்டும் மீண்டு(ம்) வா…
  18. PG 18. நெஞ்சமெல்லாம் நேசம்…
  19. PG 19. (மன)நிறைவு

Hall-ல் இருந்த LCD TV-யில் கிரேசி மோகனின் கைவண்ணத்தில் உருவான நகைச்சுவை காட்சி ஓடிக்கொண்டிருந்தது. Sofa-வில் உட்கார்ந்திருந்த ரவியின் சட்டை போடாத வெற்று மார்பில் தலை சாய்த்துக்கொண்டு ரவியின் இடுப்பை சுற்றி கட்டிப்பிடித்துக்கொண்டு அவன் மீது கால் போட்டபடி அவினாஷ் TV-யை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தான். பொதுவாக வெளியூருக்கு சென்ற குடும்ப உறுப்பினர்கள் திரும்பி வரும்போது ஒன்று அவர்களை வரவேற்கும் சந்தோஷம் இருக்கும். வீட்டு பொறுப்பு தன்னை விட்டு போகிறது என்னும் ஆசுவாசம் இருக்கும். ஆனால் இங்கு அவற்றோடு சேர்ந்து ஏதோ ஒரு இனம் புரியாத கவலையும் இருந்தது. அந்த கோடைக்கால விடுமுறை முழுவதும் ரவியும் அவினாஷும் ஒரு புருஷன் பொண்டாட்டி வாழ்க்கையை முழுசாக வாழ்ந்துவிட்டார்கள். நாளை முதல் மீண்டும் பழைய Landlord – குடித்தனக்காரர் – சகஊழியர் role-க்கு திரும்பவேண்டும். ஏனோ இருவருக்குமே மனது கனத்தது. அதனால் TV திரையில் ஓடிக்கொண்டிருக்கும் நகைச்சுவையில் யாருக்கும் மனசு லயிக்கவே இல்லை. அவினாஷ் ரவியின் நெஞ்சில் முத்தம் வைத்துவிட்டு எழுந்து நிமிருந்து உட்கார்ந்தான்.

Random கதைகள்

ரவி அவினாஷின் நெற்றியில் முத்தமிட்டபடி “காலைல நாலு மணிக்கு கார் எடுத்தால் ஐந்து மணிக்கு ரயிலில் வரும் ரூபாவையும் மிட்டுவையும் அழைச்சிட்டு வர சரியாக இருக்கும்… நான் போய் அவங்களை அழைச்சிட்டு வந்துடுறேன்..” ரவி தன் மொபைலில் காலை 3:45-க்கு அலாரம் வைத்தான்.

அவினாஷ் “நானும் உங்க கூட வர்றேன்… மிட்டு தூக்கத்துல இருப்பா… நீங்க ரெண்டு பேரும் luggage-ஐ வச்சுக்கிட்டு அவளையும் தூக்கிக்கிட்டு நடக்க கஷ்டமா இருக்கும்”

திரை படைப்புகள்

“சீ! பரவாயில்லடா… manage பண்ணிக்கலாம். நீ அவ்வளவு சீக்கிரமா எழுந்து என்ன பண்ணப்போறே?” ரவி அவினாஷின் செல்லமாக தலையை கலைத்தான்.

“நானும் வர்றேன்.. அவ்வளவு தான்” அவினாஷ் போலியாக முறுக்கிக்கொண்டு நின்றான்.

சைட்டிக்க கவர்ச்சி ஆண்கள்

“சரி வா!” ரவி அவினாஷின் இடுப்பை வளைத்து நெற்றியோடு நெற்றியை மோதினான். “காலையிலே சீக்கிரம் எழுந்துக்கனும்… போய் படு.” ரவி bathroom-ஐ நோக்கி நடக்க, “அண்ணா… இன்னைக்கு என் கூட படுத்துக்குறீங்களா? ப்ளீஸ்” அவினாஷ் கொஞ்சினான்.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி

உங்க gay நண்பருக்கு personal message-ஆ நினைச்சிட்டு, ஒரு romantic message-ஐ அவரும் இருக்குற WhatsApp group-க்கு தவறுதலா அனுப்பி சமாளிச்சிருக்கீங்களா?

View Results

Loading ... Loading ...

“இதை மெனக்கட்டு சொல்லனுமாடா? இரு toilet போயிட்டு மூஞ்சி கழுவிட்டு வர்றேன்” ரவி நகர்ந்தான்.

காலையில் சீக்கிரம் எழுந்திருக்கவேண்டும் என்று காரணம் சொல்லி அன்று சீக்கிரம் படுத்துவிட்டாலும் தூக்கம் என்ற ஒன்று ரவியையும் அவினாஷையும் தீண்டவே இல்லை. மனதில் ஏற்பட்ட கவலைக்கு ஆறுதலாக இருவரும் மற்றவர்களின் உடம்பெங்கும் தடவியும், கட்டிப்பிடித்தும் முத்தங்களின் மூலமும் தங்கள் கவலைக்கு வடிகால் தேடினார்கள். சில சமயத்தில் கவலையில் நடக்கும் therapeutic sex உறவுகளை மேலும் புனிதமாக்குறது. அந்த இரவில் ரவியும் அவினாஷும் மீண்டும் ஒரு முறை புனிதர்கள் ஆனார்கள்.

ரயில் நிலையத்தின் Parking lot-ல் வண்டியை நிறுத்தியபோது மும்பை குர்லா எக்ஸ்பிரஸ் 20 நிமிடங்கள் தாமதமாக வரும் என்று தெரிவிக்க, ரவியும் அவினாஷும் காரில் இருந்து இறங்காமல் கைகளை இறுக்கமாக கோர்த்துக்கொண்டு ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே இருந்தார்கள். இதே காரில் தான் இருவரும் முதன் முறையாக கிஸ்ஸடித்துக்கொண்ட நினைவு மின்னலடித்தது. ரவி அவினாஷின் கோர்த்த கையை எடுத்து அவன் கண்களை பார்த்தபடியே முத்தமிட்டான். பின்னர் அவினாஷை நோக்கி குணிய, அவினாஷும் முன்னே நகர்ந்து ரவியின் உதட்டை தன் உதட்டில் ஏந்திக்கொண்டான். எத்தனை நிமிடங்கள் அந்த முத்தம் நீடித்ததோ தெரியவில்லை, ரவியின் மொபைல் சிணுங்கி அவர்களின் முத்தத்தை உடைத்தது.

“ஏங்க… ரயில் ஸ்டேஷனுக்குள்ளே வர்றதுக்காக signal-க்காக காத்திட்டு இருக்கு. எங்க compartment கடைசியிலே வரும் போல… platform-க்கு வந்துடுறீங்களா?” – ரூபா

ரவியும் அவினாஷும் கைகளை கோர்த்துக்கொண்டு platform-க்கு செல்லபவும், ரயில் வரவும் சரியாக இருந்தது.

ரவி ஆழ்ந்து உறங்கும் மிட்டுவை தன் தோளில் தூக்கிக்கொள்ள, அவினாஷ் ரூபாவிடமிருந்து பெட்டிகளை எடுத்துக்கொள்ள, அவர்கள் அனைவரும் parking lot-ல் நிறுத்தப்பட்ட car-ஐ அடைவதில் எந்த சிரமமும் இருக்கவில்லை.

வீட்டுக்குள் நுழைந்ததும் ரவி தூங்கிக்கொண்டிருக்கும் மிட்டுவை கட்டிலில் போடுவதற்காக அவர்களுடைய அறைக்கு போக, அவினாஷ் லக்கேஜ்-களை ஹாலில் கொண்டுப்போய் வைத்தான். ரூபா டாய்லெட் சென்றுவிட்டு நேராக கிச்சனுக்கு டீ போட சென்றாள். ஃப்ரிட்ஜில் இருந்த பாலை கொதிக்க வைத்தப்போது ரவி வந்தான்.

“பரவாயில்லைங்க… வீட்டை சுத்தமா வச்சிருக்கீங்க… நான் கூட போன தடவை மாதிரி நாறடிச்சு வச்சிருப்பீங்களோ… சுத்தம் பண்ண எத்தனை நாள் பிடிக்குமோன்னு பயந்துட்டே வந்தேன். இப்படி சுத்த பத்தமா வச்சிருப்பீங்கன்னு தெரிஞ்சிருந்தா பேசாம இன்னும் ஒரு வாரம் கழிச்சு கூட வந்திருப்பேனே” ரூபா ரவியின் தோளில் பெருமையாக தட்டிக்கொடுத்தபடி சொன்னாள்.

“நான் எங்கே சுத்தம் பண்ணினேன்… எல்லாம் அவன் பண்ணின வேலை” சோஃபாவில் அக்கடாவென்று உட்கார்ந்த அவினாஷை கை காட்டினான். “அது சரி! அப்போ உன்னை திரும்ப மும்பைக்கு டிக்கெட் எடுத்து அனுப்பிடட்டுமா?” ரவி சிரித்தான்.

“என் புருஷனுக்கு நான் சோறு பொங்கிப்போட்டு, வீட்டை சுத்தப்படுத்துறதுக்கு தான் இருக்கேன். இப்போ அந்த வேலைக்கும் வேட்டு வச்சிட்டியா அவி… இனிமே நான் ஊருக்கு போனா நானா திரும்ப வந்தா தான் ஆச்சு…” ரூபா செல்லமாக அங்கலாய்த்துக்கொண்டாள்.

“அண்ணி! நான் போய் தூங்குறேன்” அவினாஷ் எழுந்தான்.

“காஃபி குடிச்சுட்டு போ அவி… உனக்கும் சேர்த்து தான் கலக்குறேன்” ரூபா குரல் கொடுத்தாள்.

“சரி தான்… காஃபி குடிச்சா அப்புறம் எங்கே தூங்குறது? ஃப்ளாஸ்க்-ல ஊத்தி வச்சிடுங்க அண்ணி. அப்புறமா எழுந்து குளிச்சுக்குறேன்” அவி ரூபாவின் பதிலை எதிர்பார்க்காமல் தன் அறைக்குள் சென்று கட்டிலில் விழுந்தான். சிறிது நேரத்தில் தன் மீது பாரம் படர்வதை உணர்ந்து அவினாஷ் தலையை தூக்க, ரவி அவன் மீது படுத்திருந்தான்.

அவினாஷ் திடுக்கிட்டு எழுந்து சுற்றிப்பார்க்க “ரூபா குளிக்க போயிருக்கா… எனக்கு உன்னை விட்டு எப்படி தள்ளி இருக்கப்போறேன்னு தெரியலைடா” ரவி கிசுகிசுப்பாக அவினாஷின் காது மடல்களை கடித்தபடி சொன்னான்.

அவினாஷ் மல்லாக்க திரும்பி “பழகிடும் அண்ணா… மிட்டு எழுந்ததும் பாருங்க… அவளை சமாளிக்கவே உங்களுக்கு….” வாக்கியத்தை முடிக்கும் முன்பு ரவி அவினாஷின் உதட்டை கவ்வி மேலே பேசவிடாமல் அடைத்தான். அவினாஷ் ரவியின் பிடரி முடியை கோதியபடி முத்தத்துக்கு ஈடு கொடுத்தான். பாத்ரூம் கதவின் தாழ்ப்பாள் திறக்கப்படும் சத்தம் கேட்க, ரவி எழுந்து சத்தம் போடாமல் வெளியேற, அவினாஷ் அதற்கு மேல் தூங்குவதற்கு சிரமப்பட்டான்.

1 2Next page
மேலும் காட்ட

இதோ.. நீங்க தொடர்கதை படிக்கிறதால கேட்குறேன்.

இதுவரை வந்த தொடர்கதைகளில் உங்களுக்கு பிடித்த கதை / கதைகள்?

தொடர்கதை பிடித்ததற்கு காரணம்? (பல காரணங்கள் தேர்வு செய்யலாம்)

தொடர்கதைகள் படிப்பதில் எரிச்சலான விஷயம்?

அதிகபட்சம் எத்தனை அத்தியாயங்கள் இருக்கலாம்?


அனைத்து பதிவுகளையும் ஒரே table-ல் காண, இங்கே click செய்யவும்.

காதல்ரசிகன்

காதலுக்கும் காமத்துக்கும் பால் (Gender) தேவையில்லை என்று கருதும் கூட்டத்தில் ஒருத்தன். அழகு எங்கிருந்தாலும், யாரிடமிருந்தாலும் ரசிக்கும் கலாரசிகன். அன்பு எங்கிருந்து கிடைத்தாலும் பால் நோக்காமல் கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் கொண்டவன். கட்டிலில் கட்டியவளோடு புணர்ந்தாலும் நான் ஓரினச்சேர்கையாளனும் கூட என்று சொல்லிக்கொள்வதில் வெட்கமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Free Sitemap Generator

Adblock Detected

Please disable the adblocker for this site (not only the page) to render the in-line related posts blocks effectively and reload the page.