சொக்கத்தங்கமான என் அர்ணாபை சந்தேகப்பட்டு நான் முன்பின் தெரியாத ஒருத்தனுடன் quickie sex செய்துவிட்ட குற்ற உணர்ச்சியில் தவிக்கிறேன். என் Petrol Station-ல் நடந்த கொள்ளை முயற்சியால் என் வேலைக்கே ஆபத்து வந்து மயிரிழையில் தப்பிக்கிறேன். அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு நள்ளிரவில் என்னை சும்மா பார்த்துவிட்டு போக வந்த அர்ணாபின் வருகை என் குற்ற உணர்ச்சியை அதிகமாக்குகிறது.
நான் அணிந்திருந்த எனது BP (British Petroleum) logo பொறிக்கப்பட்ட uniform T Shirt-ஐ, கண்ணாடியில் பார்த்து சுருக்கங்கள் சரி செய்தபடி அன்றைய வேலைக்கு கிளம்புகிறேன். Petrol Station-க்கு நான் செல்லவேண்டிய Light Rail இன்னும் 10 நிமிடத்தில் Terminal-ல் இருந்து கிளம்பும் என்பதால் நான் ஓடிப்போய் தான் வண்டியேற வேண்டும். எனவே என் உடம்பில் லேசான பதற்றம் இயல்பாகவே இருந்தது. அர்ணாபிடம் சொல்லிக்கொண்டு கிளம்பலாம் என்று நினைத்து குளியலறையின் வாசலை எட்டி எட்டி பார்த்துக்கொண்டிருக்கிறேன். அலுவலகத்தில் இருந்து அர்ணாப் கொஞ்ச நேரத்துக்கு முன்பு தான் வந்துவிட்டு, குளிக்க போயிருக்கிறான்.
நேரமாக ஆக என் பரபரப்பு அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இன்னும் 1-2 நிமிடத்தில் அர்ணாப் குளியலறையில் இருந்து வராவிட்டால் நானே குளியலறை கதவை தட்டி “போயிட்டு வர்றேன்” என்று சொல்லிவிட்டு வெளியேறலாம் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். நான் பொறுமையிழந்து கதவை தட்டப்போக, அதற்கு அவசியப்படாமல் அர்ணாப் இடுப்பில் துண்டுடன் வெளியே வந்தான். அந்த பதற்றத்திலும் அவன் மதமதர்ப்பான உடம்பில் டாலடித்த நீர்த்துளிகளையும், சோப் வாசனையையும் ரசித்தபடி நான் அவனை கட்டிப்பிடிக்க நெருங்கினேன். ஆனால் அர்ணாப் என் நெஞ்சில் கை வைத்து என்னை நெருங்கவிடாமல் நகர்த்தினான். இதை எதிர்பாராத நான் குழப்பமாக நின்றுக்கொண்டிருக்க, அர்ணாப் “கார்த்தி! உன் கிட்டே கொஞ்சம் பேசனும்” என்று சொல்ல, நான் அதிர்ந்தேன்.
பொதுவாக அர்ணாப் என்னை பெயர் சொல்லி அழைப்பதில்லை. அவன் “பிரணயி” என்று கூப்பிடும் போதெல்லாம் எனக்கு ஏதோ மெல்லிய தென்றல் வருடுவது போல இதமாக இருக்கும். ஆனால் அர்ணாப் இன்று “கார்த்தி” என்று அழைத்த போது எனக்கு ஏதோ திகிலாக இருந்தது. நாங்கள் நண்பர்களாக இருந்தபோது கார்த்தி என்று அழைத்தாலும், என்று நாங்கள் காதலர்கள் ஆனோமோ அன்று முதல் அவன் என்னை ‘பிரணயி’ என்று மட்டுமே அழைப்பதை வழக்கமாக கொண்டுள்ளான். அப்படியென்றால் நான் காதலன் நிலையில் இருந்து அந்நியனாக downgrade ஆகிவிட்டேனோ என்று பயம் தொற்றிக்கொண்டது. ஒருவேளை இந்த முடிவெடுத்துவிட்டு தான் கடைசி தடவையாக என்னை பார்க்க நடு இரவில் நான் வேலை பார்க்கும் Petrol Station-க்கு வந்தானா? ஆனாலும் நான் வெளிக்காட்டிக்கொள்ளாமல் “அர்ணாப் பாபு! எனக்கு Train-க்கு நேரம் ஆகுது… நாம காலையில பேசலாமா?” என்று குரலில் வேண்டுமென்றே பதற்றத்தை கூட்டிக்கொண்டேன்.
அர்ணாப் “I wish… ஆனா காலையிலே வர்றப்போ நீ ராத்திரி முழுக்க தூக்கம் இல்லாம அடிச்சு போட்ட மாதிரி களைப்பா வர்றே. அப்போ நான் Office-க்கு கிளம்பிடுறேன். அதனால உனக்கு late ஆனாலும் பரவாயில்லைன்னு இப்போவே பேசிடுறது தான் better-ன்னு உன்னை hold up பண்ண வேண்டியதா ஆயிடுச்சு… I’m sorry for that. அது மட்டுமில்லாம இப்போ பேசினா உனக்கு அதை பத்தி யோசனை பண்ண ராத்திரி முழுக்க நேரம் கிடைக்கும்ல? பத்து பதினோரு மணிக்கு மேலே உனக்கும் வேலை கம்மியா தான் இருக்கும். நான் சொல்றதை நல்லா analyse பண்ணு” என்று நேரே தன் laptop bag-ல் இருந்து இரண்டு folder-களை எடுத்து நீட்டினான்.
அவை என்னவாக இருக்கும் என்று குழப்பம் கலந்த ஆர்வத்துடன் நான் அவற்றை வாங்கி அதில் ஒன்றை பிரிக்க, அர்ணாப் “ஒன்னு இந்த வீட்டோட lease agreement-ஐ உன்னை மட்டும் Sole tenant-ஆ மாத்துறதுக்கு lease amendment form, இன்னொன்னு நம்ம கல்யாண license-க்கு apply பண்றதுக்கு application form… இன்னைக்கு நீ இந்த ரெண்டுத்துல ஏதாவது ஒன்னுத்தை மட்டும் தேர்ந்தெடுத்து தான் ஆகனும்” என்று சொன்னான். “என்னால இந்த குழப்பத்தை ரொம்ப நாளுக்கு சுமக்க முடியலை. அதனால I just want to close this forever tonight…” என்று அர்ணாப் தீர்க்கமாக சொல்ல, எனக்கு கால்களில் இருந்து சக்தி அனைத்தும் உறிஞ்சப்படுவது போல நடுக்கம் தோன்றியது. என் கால்களுக்கு கீழே பூமி நகர்வது போல இருந்தது. நான் சோர்வு தாங்க முடியாமல் அப்படியே sofa-ல் உட்கார்ந்தேன்.
அர்ணாப் என் கால்கள் நடுவே முட்டிப்போட்டு உட்கார்ந்தான். உரிமையோடு என் இரு முட்டிகளிலும் கை வைத்து, அவன் என் கண்ணை ஊடுருவி பார்த்த போது எனக்கு அதன் தீர்க்கத்தை தாங்கும் சக்தி இல்லை. அதனால் நான் அவன் பார்வையை நேராக பார்க்காமல் தவிர்த்தேன். என்றாவது ஒரு நாள் இப்படி இறுக்கமான சூழ்நிலையில் இந்த மாதிரி ஒரு உரையாடல் வரும் என்று நான் நினைத்து பார்க்கவே இல்லை. கடந்த ஆறேழு மாதங்களாக நானும் அர்ணாபும் ஒன்றாக இருக்கும் நேரங்கள் நிமிடங்களில் சுருங்கிவிட்டதை நான் கவனித்தாலும் I didn’t see this coming.
வேலை பளுவாலும், என் கவனக்குறைவால் இப்போது மீளமுடியாத சுழலில் சிக்கிக்கொண்டது போல தவிக்கிறேன். ஆரம்பத்தில் நாங்கள் எங்களுக்கு கிடைக்கும் அந்த குறைவான நேரத்தை, இருவரும் tried to make them to the most என்றாலும், மிக விரைவில் ஒரே கூரைக்கு அடியில் இரு அந்நியர்கள் ஆகிப்போனதையும் உணர முடிந்தது. ஆனால் பொறுமையின் சிகரமான அர்ணாபுக்கும் ஒரு எல்லை இருக்கும் என்பதை நான் ஏன் உணர மறந்தேன் என்று தெரியவில்லை. ஒருவேளை அவனது நிதானத்தை, அழகான பொறுமையை நான் taken for granted ஆக கடந்துவிட்டேனோ?
அர்ணாப் கம்பீரமான குரலில் “கார்த்தி! நான் ஆசைப்பட்டு வந்த வாழ்க்கை இது இல்லை. சூழ்நிலைகளுக்கேற்ப நம்மள மாத்திக்கனும்னு நினைச்சாலும் என்னால என்னோட கனவுகளை, எதுக்காக இங்கே வந்தோமோ அந்த core intentions – அதை விட்டுத்தர முடியலை. சூழ்நிலைக்கு ஏற்ப நான் மாற்றிக்க முயற்சிக்கிறேன்.. ஆனா நீ இந்த மாற்றத்துக்கு எளிதா adopt ஆகிட்டதையும் தாண்டி நாம ஏன் குடும்பத்தை விட்டுட்டு கனடாவுக்கு குடிபெயர்ந்தோம்ங்குறதையே மறந்துட்டே போல… இங்கேயே இப்படி உன் கூடவே இருந்தா ஒருவேளை நான் உன்னை வெறுக்கவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படலாம். அதனால நான் என் காதலை காப்பாத்த கடைசி முயற்சியா இங்கே உன் கிட்டே பேசிட்டு இருக்கேன். பக்கத்துல இருந்து உன்னை வெறுக்குறதை விட நான் தூரமா போனாலும் I’ll keep loving you…” என்று சொன்னபோது அவன் குரலில் இருந்த வலி அப்பட்டமாக தெரிந்தது. மூச்சுக்கு மூச்சு எப்போதும் அவன் சொல்லும் “நம் காதல்” இன்று “என் காதல்” ஆகியிருக்கிறது.
மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி
Loading ...
நான் அவனது வலியில் நெகிழ்ந்தேன். வேலை, பொருளாதாரம் என்ற ஓட்டத்தில் எங்கள் காதலை குழி தோண்டி புதைத்துவிட்ட குற்ற உணர்ச்சி என்னை பலமாக தாக்கியது. நான் பலவீனமாக “அர்ணாப் பாபு! This also will pass by… நானும் ஆசைப்பட்டு இப்படி நமக்குள்ளே தூரம் கொடுக்குற வேலையை செய்யலை… என்னைக்காச்சும் ஒரு நாள்… எனக்கு regular IT job கிடைக்கும்… அப்போ நாம… make up for the lost times” என்று திக்கித் திணறினேன். அர்ணாப் “பிரணயி! But அப்போ நமக்கு நடுவுல love உயிரோட இருக்குமான்னு தெரியலையே… நீ Petrol Station-க்கு வேலைக்கு போறது என் பிரச்சனை இல்லை…. ஆனா அது நம்ம உறவை பாதிக்கிறதை தான் என்னால தாங்கிக்க முடியலை!” என்று என் கன்னத்தை தடவினான். அந்த தீண்டலில் நான் இளகிப்போனேன். அதிர்ச்சியில் உலர்ந்து போன என் உதடுகளை கடித்து ஈரப்படுத்திக்கொண்டு “அர்ணாப் பாபு! நீ சொல்றது எனக்கும் புரியுது… ஆனா வீட்டு வாடகை, living expenses, utilities bills-க்கு..?” என்றேன்.