கா.ஒ.கா 7 – குளத்துக்கரையில குதூகலம்

கா.ஒ.கா 07. கொண்டாடுவோம் குளத்துக்கரையில்…

இது காத்துவாக்குல ஒரு காதல் தொடர்கதையின் 7-வது அத்தியாயம்.

முன் கதை சுருக்கம்...
நானும் அர்ணாபும் புதுமண தம்பதிகள் போல எங்கள் தனிமையை தேன் நிலவாக கொண்டாடுகிறோம். எனக்கு அர்ணாபின் குடும்ப பின்னணியை தெரிந்து கொள்வதை விட அவன் கன்னி கழிந்த அனுபவத்தை கேட்பதில் தான் ஆர்வமாக இருக்கிறது. அர்ணாப் வெட்கத்துடன் தன் முதல் அனுபவத்தை சொல்ல, நான் அவனது வெட்கத்தை கண்டு வியக்கிறேன். அவன் குடும்பத்தை சந்திக்க போகிறோம். திரையில் பார்த்த காட்சிகளுக்கு கொஞ்சமும் சளைக்காமல் drama-வுடன் அர்ணாபின் குடும்பத்துடன் என் முதல் சந்திப்பு நடக்கிறது.

அந்த A/C Sleeper Bus-ல் இரவு முழுக்க பயணம் செய்தது களைப்பை கொடுத்ததோ இல்லையோ, எனக்கு என்னவனின் homophobic பெற்றோர்களை பார்க்கப்போகிறேன் என்பது என் நெஞ்சில் பாரத்தை ஏற்றியிருந்தது. பஸ் புறப்படும் நொடி வரைக்கும் அர்ணாப் என்னிடம் “இப்போ கூட ஒன்னும் குறையலை… உனக்கு இஷ்டம் இல்லைன்னா நாம பஸ்ல இருந்து இறங்கிடலாம்” என்று சுதந்திரம் கொடுத்திருந்தாலும் ஏதோ ஒரு வைராக்கியத்தில் நான் “இல்லை… எனக்கு உன் வீட்டு மனுஷங்களை பார்த்தா தான் உன்னை முழுசா ஏத்துக்க முடியும்” என்று வசனம் எல்லாம் பேசிவிட்டேன். பஸ் பயணம் முழுக்க என் மனது திக் திக்கென்று அடித்துக்கொண்டதை உணர்ந்த அர்ணாப் என் கைவிரல்களை இறுக்க கோர்த்துக்கொண்டதால் நான் கொஞ்சம் தெம்பாக உணர்ந்தேன். கிட்டத்தட்ட முழு பயணத்திலும் நாங்கள் ஒருவரை ஒருவர் முகம் பார்த்தபடி ஒருக்களித்து படுத்த நிலையில் அவ்வப்போது கிஸ்ஸடித்துக்கொண்டு தூங்காமல் ராய்கஞ்ச் வந்து சேர்ந்த பிறகு தான் என் கண்களை தூக்கம் அழுத்த ஆரம்பித்தது.

கா.ஒ.கா 07. கொண்டாடுவோம் குளத்துக்கரையில்…
Raiganj Bus Stand-ல் இருந்து இறங்கியதும் அர்ணாப் என்னை ஒரு decent ஆன வசதிகள் கொண்ட ஹோட்டலுக்கு அழைத்துச்சென்றான். ஒருவகையில் அர்ணாப்பின் வீட்டுக்கு போவதற்கு முன்பு எனக்கும் ஒரு ஓய்வு தேவைப்பட்டதால் நான் அவனை எதுவும் கேட்கவில்லை. அர்ணாப் அந்த ஆண் receptionist-டம் பேசியதில் இருந்து இரண்டு மூன்று நாட்கள் தேவைப்படும் என்று சொன்னதும் நான் கொஞ்சம் துணுக்குற்றேன். அறைக்குள் போனதும் நான் கட்டிலில் பொத்தென்று விழுந்தேன். அர்ணாப் என் அருகில் படுத்து என் கண்ணை ஊடுருவி பார்த்தபடி கன்னத்தை தடவினான். “இப்போ கூட ஒன்னு குறைஞ்சிடலை பிரணயி… எங்க வீட்டுக்கு போகாம விட்டுடலாம்…” என்று எனக்கு ஆசை காட்டினான். நான் “ம்ம்ம்.. இவ்வளவு தூரம் வந்துட்டும் அவங்களை பார்க்காம போயிட்டோமேன்னு நாளை பின்னே நான் guilty-ஆ feel பண்ணப்போறேன்… அதுக்காகவாச்சும் பார்த்துட்டு போகலாம்..” என்று திரும்பி அவனது இடுப்பை கட்டிக்கொண்டேன்.

என் அர்ணாப் “நீ அவ்வளவு எல்லாம் யோசிக்காதே பிரணயி (my love)… இங்கே இருந்து 6 மணி நேரம் தான் Darjeeling-க்கு. நாம டார்ஜிலிங்க் போய் ஒரு honeymoon கொண்டாடிட்டு flight பிடிச்சு கொல்கத்தா போயிடலாம்…” என்று மேலும் தூபம் போட்டான். நான் பொய்க்கோபத்தோடு புருவம் நெறிக்க, அர்ணாப் “நீ என் வீட்டு ஆளுங்களை பார்க்க ஆசைப்படுறதுல எனக்கு ரொம்ப சந்தோஷம் தான்.. ஆனா அவங்க உன்னை அவமானப்படுத்தி, அது நம்ம love-ஐ பாதிச்சிடுமோங்குற பயம் தான்…” என்று என் கைவிரல்களை கோர்த்துக்கொண்டான். நான் அவன் கைவிரல்களை இழுத்து மென்மையாக முத்தமிட்டேன். “நீ என் கூட இருக்குறதுக்காக மொத்த உலகமுமே என்னை கழுவி கழுவி ஊத்தினாலும் நான் அதையெல்லாம் கண்டுக்கமாட்டேன். கவலைபடாதே… நம்மள புரிஞ்சுக்க ஒருத்தராவது இருப்பாங்க…” என்று நகர்ந்து அவன் மடியில் தலைவைத்து படுத்தேன்.

கா.ஒ.கா 07. கொண்டாடுவோம் குளத்துக்கரையில்…
“ஏன் 2-3 நாள் இருப்போம்னு சொன்னே? உங்க வீட்டுல தங்கிக்க முடியாதா?” என்று உண்மையிலேயே குறுகுறுப்பாக கேட்டேன். அர்ணாப் குளுக்கென்று சிரித்தான். “இருந்தாலும் உனக்கு ரொம்பத்தான் பேராசை பிரணயி…” என் அர்ணாப் என்னை பிரணயி என்று அழைக்கும்போதெல்லாம் நான் கிறங்குகிறேன். “வீட்டுக்குள்ள விடுவாங்களான்னே தெரியாம நான் வர்றேன்… இதுல உனக்கு அங்கேயே தங்கனுமாம்” என்று என் உதட்டை கவ்வினான். நான் அவன் கையை இழுத்து என் சுன்னிப்புடைப்பில் வைத்துக்கொண்டேன். “பார்த்தியா… இதுக்கு தான் நாம டார்ஜிலிங்க் போகலாம்னு சொல்றேன்” என்று அர்ணாப் என்னை சீண்டினான். நான் வெட்கத்தில் முகம் சிவந்தேன். அர்ணாப் மீண்டும் என் உதட்டை செல்லமாக கவ்வினான். கொஞ்ச நேரத்தில் எல்லாம் நான் அர்ணாப்பை கட்டிப்பிடித்துக்கொண்டு தூங்கிப்போனேன்.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts

நாங்கள் ஆட்டோ பிடித்து 12 கி.மீ தூரத்தில் ஹேம்டாபாத்-ல் இருக்கும் அர்ணாப்பின் வீட்டுக்கு போனபோது மாலை மஞ்சள் வெயிலாக மாற ஆரம்பித்திருந்தது. ஹேம்டாபாத் கிராமமென்றோ இல்லை டவுனோ என்று வகைப்படுத்தமுடியாத இரண்டும் கெட்டானாக இருந்தது. ஊரின் எல்லையில், அர்ணாப்பின் வீடு இருக்கும் தெருவுக்குள் நுழைந்த பிறகு தான் அவன் எப்படிப்பட்ட சூழலில் இருந்து இன்று உலகம் சுற்றும் நிலைக்கு வந்திருக்கும் உயரம் புரிந்தது. ஒரு வீட்டின் வாசலில் சாக்குகளின் மறைவில் சில கோழிக்குஞ்சுகள் சத்தம் போட்டுக்கொண்டிருந்தன. அர்ணாப் என்னை எதிர்பார்க்காமல் சென்று அந்த வீட்டின் மரக்கதவை தட்டினான். “மா… அரணாப் ஏகானே…” என்று குரல் கொடுக்க, உள்ளே ஏற்பட்ட சலசலப்பை என்னால் தெருவில் இருந்தே உணரமுடிந்தது.

கா.ஒ.கா 07. கொண்டாடுவோம் குளத்துக்கரையில்…
கதவை திறந்துக்கொண்டு ஒரு நடுத்தர வயது பெண்மணி வாசலுக்கு வந்து அர்ணாப்பை பார்த்துவிட்டு, அடுத்த நொடியில் அவர் பார்வையில் நான் விழுந்ததும் அர்ணாப்பிடம் என்ன கேட்டிருப்பார் என்று என்னால் எளிதில் யூகிக்க முடிந்தது. எனக்கு புரியாத பெங்காலி மொழியில் என்னவோ பேசினார்கள். என்னை அழைத்து வருமாறு சொன்னார் போல அதற்கு அர்ணாப் என்னை காட்டி என்னவோ சொன்னான். அவர் கண்ணில் பயத்துடன் என்னையும் அர்ணாப்பையும் மாறி மாறி பார்த்தார். பின்னர் என்னவோ சொல்லிக்கொண்டு அர்ணாப்பை வெளியே போகுமாறு தள்ளினார். நான் OTT-ல் இருப்பது போல நிஜவாழ்க்கையிலும் subtitle வசதி இருந்தால் நன்றாயிருக்குமே என்று கேணத்தனமாக யோசித்தபடி நடப்பவற்றை பார்த்துக்கொண்டு தெருவிலேயே நின்றிருந்தேன். அர்ணாப் அவன் தாயுடன் வாதாடிக்கொண்டிருக்க, உள்ளே இருந்து ஒரு 18-19 வயது இளம்பெண் எட்டிப்பார்த்தாள். அது அர்ணாப்பின் தங்கையாக இருக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.

அர்ணாப் மற்றும் அவன் அம்மாவின் உரையாடலில் தன்னிச்சையாக சத்தமும் இரைச்சலும் கூடிவிட, இதற்குள் அக்கம் பக்கத்து வீடுகளில் இருந்து சில தலைகள் எட்டிப்பார்த்தன, சிலர் வந்து அர்ணாப் வீட்டு வாசலில் குழுமினார்கள். அவர்களுடைய பார்வைகள் அப்படியே என் பக்கமும் திரும்பின. நான் ஏதோ zoo கூண்டில் இருக்கும் மிருகம் போல கூனிக்குறுகி நிற்க, கூட்டத்தை விலக்கிக்கொண்டு ஒருவர் வந்து அர்ணாப்பின் அம்மாவிடம் என்னை காட்டி என்னவோ சொன்னார். அர்ணாப் பதற்றத்துடன் வந்து என் கையை பிடித்து இழுத்துக்கொண்டு கதவருகே வந்தான். மத்தியஸ்தம் செய்த அந்த நபர் அர்ணாப்பிடம் என்னை காட்டி “உள்ளே அழைத்து போக” சொன்னார் போல… அர்ணாப் என் கையை இறுக்க கோர்த்துக்கொண்டு வீட்டுக்குள் அழைத்துப்போனான். கொல்கத்தாவில் நடந்தது போல இனிமையாக இல்லாமல் நான் என் ‘நிஜமான’ புகுந்த வீட்டுக்குள் நுழைவது பயங்கர dramatic event-ஆக மாறிப்போனது.

கா.ஒ.கா 07. கொண்டாடுவோம் குளத்துக்கரையில்…
கொஞ்ச நேரம் கழித்து அர்ணாப்பின் அப்பா கண்களில் கோபம் கொப்பளிக்க வீட்டுக்குள் வந்தார். அழுக்கான வெள்ளை குர்தாவும், வியர்வையும் அவர் நிலத்தில் இருந்து நேராக வருவதாக தோன்றியது. எங்களுக்கு மத்தியஸ்தம் செய்து வைத்த பெரியவர் தான் என்னை அவரிடம் இருந்து பாதுகாத்தார் என்று தான் சொல்லவேண்டும். அவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது அர்ணாப் எனக்கு ஆறுதல் சொல்லும் விதமாக என் கைகளை அழுத்தினான். ஆனால் அர்ணாப் என்னை “தொட்ட” போதெல்லாம் அர்ணாப்பின் அப்பா என்னை சுட்டெரித்துவிடுவது போல பார்த்தார். அர்ணாப் ஏன் நான் அவர்கள் குடும்பத்தை பார்ப்பதை தவிர்க்க முயற்சித்தான் என்று எனக்கு புரிந்தது. நான் அவர்களிடம் நேரடியாக பேச முடியாத அளவுக்கு மொழி தடையாக இருந்தது. அந்த பெரியவரின் வார்த்தைக்கு மதிப்பு இருப்பது கண்கூடாக தெரிந்தது.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி

நீங்க Gym-ல சேர்ந்ததுக்கு / சேர விரும்புறதுக்கு முக்கியமான காரணம்....

View Results

Loading ... Loading ...

அர்ணாப் அப்பாவின் ஆவேசம் கொஞ்சம் தணிந்த பிறகு, சூழ்நிலை பார்த்து அர்ணாப்பின் அம்மாவும் தங்கையும் ஒரு அலுமினிய தட்டில் தேநீர் மற்றும் அரிசியுடன் தேங்காய் கலந்த உருண்டையும் வைத்து கொடுத்தார்கள். அவர்களை பார்த்ததும் ஏனோ எனக்குள் காரணமே இல்லாத பரிவு தோன்றியது. ஒருவேளை கோபக்கார அர்ணாபின் அப்பாவிடம் அவன் அம்மா பயந்து நடுங்குகிறார்களோ என்று நானே உருவாக்கிக்கொண்ட theory-யும் ஒரு காரணமாக இருக்கலாம். அதற்கும் மேல் அவர்களுடைய பரிதாபமான தோற்றத்தை விட, என் அர்ணாப்பை பெற்று எனக்கு கொடுத்தவர் என்ற நன்றியுணர்ச்சி தான் மேலோங்கி இருந்தது. நான் குணிந்து அவர் பாதத்தை தொட்டு வணங்க, அவர் எப்படி react செய்வது என்று தெரியாமல் தடுமாறுவது தெரிந்தது. அர்ணாப் என்னிடம் உருண்டையை காட்டி “இது பப்பா பிட்டா… கிராமத்து பலகாரம்” என்று சொன்னபோது “டேய்! உனக்கு இந்த ரணகளத்துலயும் கிளுகிளுப்பு கேட்குது” என்று அவனை இடிக்க தோன்றியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Free Sitemap Generator
Scroll to Top