| முன் கதை சுருக்கம்... |
|---|
| அர்ணாப் என் தந்தையை பார்க்க என் வீட்டுக்கு வருகிறான். இங்கே நான் அவனை என் முன்னாள் காதலனான விஷ்வாவை அறிமுகம் செய்து வைக்க, இருவரும் நன்றாக bond ஆகிறார்கள். நான் என்னை கைவிட்ட விஷ்வாவை பழிவாங்குவதாக வேண்டுமென்றே அவன் கண் முன்னாலேயே அர்ணாபை பாலியல் ரீதியாக சீண்டுகிறேன். அர்ணாப் அதை தடுத்ததால் அதை carry forward செய்து, எங்கள் வீட்டில் உடலுறவு கொள்ள முயற்சிக்க, என் அப்பா அதை பார்த்துவிடுகிறார். கையும் களவுமாக மாட்டிய குற்ற உணர்ச்சியில் நிற்க, என் அப்பாவின் verbal assault-ல் இருந்து காப்பாற்றிக்கொள்ள நான் களத்தில் குதிக்கிறேன். |
டாக்டர் அப்பாவிடம் “அதுவரைக்கும் சார்! நீங்க உங்க பையனை ஏதாவது பேசி தானா தற்கொலை பண்ணிக்க வச்சுக்காதீங்க…. உங்க sperm மூலமா வந்ததால அவர் adult ஆன பிறகும் அவர் life-ஐ நீங்க control பண்ணனும்னு நினைக்கிறது தப்பு. உங்களுக்கு அவர் வேணாம்னா எனக்கு தெரிஞ்ச வக்கீல் கிட்டே சொல்லி விடுதலை பத்திரம் எழுத ஏற்பாடு பண்ணி தர்றேன். அது வரைக்கும் நீங்க அவருக்கு ஏதாவது நல்லது செய்யனும்னு நினைச்சீங்கன்னா அவர் கிட்டே இருந்து ஒதுங்கி இருக்குறது தான் ரொம்ப நல்ல விஷயம்.” என்று கண்டிப்பான குரலில் பேசிக்கொண்டிருந்தவர் திடீரென்று சூடானார்.
“Division Manager-ஆ இருந்தவர் தானே நீங்க? உலகம் சுத்தி பார்த்து தெரிஞ்ச, படிச்சவர் பண்ற காரியமா பண்ணியிருக்கீங்க? வீட்டுல மனைவி இல்லை… இருக்கிறது ஒரே பையன்னு சொல்றீங்க… உங்கள மாதிரி ஆளுங்களுக்கு சம்பந்தப்பட்டவங்க வாழ்க்கையை விட உங்க society பேரும் வெட்டி கௌரவமும் பெருசா போச்சு இல்லை? நல்லா சம்பாரிச்சு ஒழுக்கமா இருக்குற ஒரு 32 வயசு ஆம்பளைக்கு தன் வாழ்க்கையை சுயமா வாழ உரிமை இல்லையா?… வீட்டுல எப்படியோ போங்க… இங்கே hospital-ல என்னோட patient கிட்டே well behaved-ஆ இல்லைன்னா, I’ll take disciplinary actions…” என்று கடிந்துக்கொண்டார்.
| மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts |
|---|
அப்பா “ஆனா நீ இப்போ எல்லாத்தையும் விட்டுட்டு காயத்ரி கூட சந்தோஷமா தானே இருக்கே? கார்த்தியும் அப்படி பொண்டாட்டி, குழந்தைன்னு வாழனும்னு தானே நான் ஆசைப்படுறேன்… இதுல என்ன தப்பு?” என்று மீண்டும் ஆரம்பித்த இடத்துக்கே வந்தார். பின்னர் “உன்னால காயத்ரியை penetrate பண்ண முடியுது இல்லை?” என்று doubt கேட்டார். விஷ்வா “அப்பா! Gay-ங்களுக்கும் penile erection இருக்கும், penetrate பண்ணுவாங்க… தன்பாலீர்ப்புங்குறது உடல் ரீதியான பிரச்சனை இல்லை. ஆனா மனசுல பொண்ணுங்க மேலே lust-ஐ feel பண்ண முடியாது.. சொல்லப்போனா அவங்க உடம்பு எங்க மேலே தேய்க்குறப்போ லேசான அருவெறுப்பு கூட இருக்கும். மனசுல காமம் இல்லைன்னா, அருவெறுப்பா இருந்தா பூள் எப்படிங்கப்பா எழுந்திருக்கும்? அப்புறம் எங்கே penetrate பண்றது?” என்று முடிந்த வரைக்கும் கூச்சப்படாமல் விவரித்தான்.
என் அப்பா “அப்போ யாரையாச்சும் ஆம்பளை கூட படுக்குறதா கற்பனை பண்ணிக்கிட்டு பொம்பளை கூட வாழ்க்கை நடத்தலாமே…. ஊருக்குள்ள எல்லாருமே கட்டில்ல பொண்டாட்டி கூட படுத்தாலும் மனசுக்குள்ள எவளாச்சும் கவர்ச்சி நடிகையை நினைச்சு தானே ஓக்குறாங்க…” என்று விடாமல் மல்லுக்கு நின்றார். “பொம்பளைக்கோ ஆம்பளைக்கோ… கட்டில்ல குடுக்குறதும் வாங்குறதும் தானே விஷயம்… விளக்கை அணைச்சதும் இருட்டுல அவங்க மனசுல என்ன ஓடுதுங்குறங்குறதை அடுத்தவங்களுக்கு தெரியவா போகுது? பிடிச்சாலும் பிடிக்காட்டியும் அப்படி பண்ணுனா தான் சமுதாயம்ங்குற கட்டமைப்பு உறுதியா இருக்கும்.” தன் பங்குக்கு போலி முகத்தை நியாயப்படுத்தினார்.
“அங்கிள்! நீங்க முழுக்க முழுக்க sex-ங்குற aspect-ல இருந்து மட்டுமே இதை பாக்குறீங்க… ஆனா குடும்ப வாழ்க்கையிலே அதை தவிர வேற விஷயங்களும் இருக்கே…. காயத்ரிக்கு என் மேலே ஆசை இருக்குற மாதிரி எனக்கு அவ கூட எதுவும் தோணலை. ஒரு புருஷனா நடந்துக்குறதுக்கும் friend-ஆ நடந்துக்குறதுக்கும் வித்தியாசம் இருக்குல்ல? எங்கே காயத்ரி கூட ரொம்ப நேரம் சிரிச்சு பேசுனா படுக்க கூப்பிடுவாளோன்னு பயந்துட்டு நான் எப்பவும் என்னை இறுக்கமா வச்சுக்கிறேன்… அது மாதிரி ஏதாவது சண்டை வந்துச்சுன்னா அதை காரணமா வச்சு நாலஞ்சு நாட்கள் கோவிச்சுக்கிட்டு தனியா படுத்துக்கலாமே, Sex-ஐ தவிர்க்கலாமேன்னு அவளை சமாதானம் பண்ணாம ஒதுங்கிக்கிறேன். இதெல்லாம் மெல்ல மெல்ல அவளோட கல்யாண ஆசைகளை, கனவுகளை குழி தோண்டி புதைக்கிறதுக்கு சமம் இல்லையா?” – விஷ்வா.| மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி |
|---|
“அதுமட்டுமில்லாம நான் எவ்வளவு நாளுக்கு இப்படி நடிக்க முடியும்? தினம் தினம் இப்படி போலியா வாழுறது மூச்சு முட்டுது… கார்ல போகும் போது எதிர்ல வர்ற லாரிக்கு அடியில விட்டு செத்து போயிடலாமான்னு தோணுது…. என்னை புரிஞ்சிக்கிட்டவங்க யாரும் இல்லைன்னு தனியா இருக்குற மாதிரி இருக்கு. உடம்பு சுகத்துக்காக மத்த ஆம்பளைங்களை திருட்டுத்தனமா தேடும் போது தப்பு பண்றோமோங்குற குற்ற உணர்ச்சியை விட, எங்கே இந்த கொஞ்ச நேரத்து சுகத்துக்காக கூட படுக்குற ஆள் நாளைக்கு விஷயத்தை வெளியே சொல்லிட்டான்னா என்ன பண்றதுங்குற பயம் வேற… எல்லா கல்யாணம் ஆன Gays-க்களும் சந்திக்கிற போராட்டம் இது… வெளி உலகத்துக்கு தெரியாது” விஷ்வா ஒரு கட்டத்தில் self control-ஐ இழந்து விசும்பினான்.
என் அப்பாவுக்கு விஷ்வாவின் வலி புரிந்ததா இல்லையா தெரியவில்லை. ஆனால் இதற்கு மேல் அவனை பேச வைக்கவேண்டாம் என்று அவன் தோளை தட்டிக்கொடுத்தார். “அர்ணாப் தனக்கு நல்ல வாழ்க்கை துணையா இருப்பான்னு கார்த்தி சொன்னப்போ எனக்கு ஒரு பக்கம் சந்தோஷமா இருந்தாலும், அவன் என்னை மாதிரி விட்டுட்டு போயிடுவானோங்குற பயம் இருந்துச்சு… நான் அவனை நேர்ல பார்த்து பேசிப் பார்த்ததுல அவனும் கார்த்தி மேலே உயிரா இருக்கான்னு தெரிஞ்சுது… அவங்க relationship-ஐ அடுத்த stage-க்கு கொண்டு போறதுக்கு எப்படி உங்க கிட்டே பேசனும்னு யோசிச்சிட்டு இருந்தோம். ஆனா அதுக்குள்ள இப்படி ஆயிடுச்சு…” விஷ்வாவின் மொபைல் சிணுங்கி அவனது பேச்சை இடைமறித்தது. மொபைலை எடுத்து பார்த்த விஷ்வாவின் கண்களில் லேசான மிரட்சி எட்டிப்பார்த்தது.“ஹாங்! இதோ வர்றேன்…” என்று எழுந்திருக்க முயற்சித்தவன் என் அப்பாவை பார்த்துவிட்டு “அர்ணாப்! நாங்க மூணாவது ஃப்ளோர்ல ICU-ல இருக்கோம்… நீ phone-ஐ receptionist கிட்டே குடு” என்று என்னை என் அப்பாவுடன் தனியாக விட்டுவிட்டு சில நிமிடங்கள் நகர்வதை கூட தவிர்த்தான். அது என் அப்பாவுக்கும் புரிந்தது போல. “பரவாயில்லை விஷ்வா… நான் போய் அர்ணாபை அழைச்சிட்டு வர்றேன்” என்று சொன்னதை கூட அவன் ஆமோதிக்கவில்லை. அவர் அவனை கூட்டிட்டு வரும் சாக்குல, அர்ணாபை தனியாக ஒதுக்கி ஏதாவது மிரட்டினால்? விஷ்வா “பரவாயில்லைங்க அங்கிள்! அவன் வந்துட்டான்..” என்று ICU வாசல் கதவை திறக்க, என் அர்ணாப் PPE Kit மாட்டிக்கொண்டு நின்றிருந்தான்.
அர்ணாப் அறைக்குள் இருக்கும் யாரையும் கண்டு கொள்ளாமல் நேரே கட்டிலை நெருங்கி குணிந்து என் நெற்றியில் முத்தம் வைத்தான். அதுவரை கண்கள் மூடி அரை மயக்கத்தில் இருந்த நான் “அர்ணாப் பாபு…” என்று தன்னிச்சையாக அழைக்க, அவன் “ப்ரணயி! நான் தான்… ஒரு வழியா வந்துட்டேன்…” என்று என் கன்னத்தை தடவினான். என் தட்டுத்தடுமாறி என் கையை தூக்கி அவன் கைகளை என் கன்னத்தோடு சேர்த்து அழுத்திக்கொள்ள, அர்ணாப் என் கை விரல்களை கோர்த்துக்கொண்டான். “Stress பண்ணிக்காதே… Come whatever may…” வேண்டுமென்றே என் அப்பாவை பார்க்காமல் “யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை…” என்று அவருக்கு உறைக்கும்படியாக “உன்னை முழு ஆரோக்கியத்தோடு discharge பண்ணி வீட்டுக்கு அழைச்சிட்டு போற வரைக்கும் நான் உன் கூட தான் இருக்கப்போறேன்… Take your own time to recover” என்று அர்ணாப் சொன்னதும் என் முகத்தில் புன்னகை படர்ந்தது. அனேகமாக அந்த புன்னகை தான் என் அப்பாவுக்கு “இனிமேல் அவன் வாழ்க்கையை அவன் வாழ்ந்துக்கொள்ளட்டும்” என்று தோன்ற வைத்திருக்கும் என்று நினைக்கிறேன். அப்பா அர்ணாபின் முதுகை தட்டி கொடுத்துவிட்டு அறையில் இருந்து வெளியேறினார்.இப்படி Conversion Therapy-க்கு ஆளாகிய LGBTQ-க்கள் பொதுவாக தங்கள் மனவலிமையை இழந்து பயந்தாங்கொள்ளிகளாக, சமுதாயம் தங்களை கண்டுக்கொண்டு ஒதுக்கிவிட்டால் என்ற அச்சத்துடன் தினம் தினம் செத்து பிழப்பவர்களாக, போதை வஸ்துக்களை அதிகம் உட்கொள்பவர்களாக மாறுகிறார்கள் என்று United Nations நடத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு பல நாடுகளில் இந்த Conversion Therapy in any forms என்பது சட்டவிரோதமான முறை என்று classify செய்து தடை செய்யப்பட்டுள்ளது. ஆயினும் புற்றீசல் போல இந்த Clinic-கள் எல்லா நகரங்களிலும் ஏதோ ஒரு பெயரில் இயங்கிக்கொண்டு தான் இருக்கின்றன. மேலும் நம்மூரிலேயே விஷயம் வெளியே தெரிந்துவிடக்கூடாது என்று Lesbian பெண்களின் பெற்றோர்கள் தங்கள் குடும்பத்தினர்கள் / சொந்தக்காரர்களை வைத்தே corrective rape என்ற பெயரில் பாலியல் பலாத்காரம் செய்ய வைப்பதும் நடந்துக்கொண்டு தான் இருக்கிறது. நிஜத்தில் இந்த PTSD-ல் இருந்து வெளிவருவது நீண்ட மற்றும் மிகவும் கொடிய காலம் என்றாலும், to keep the story simple, இங்கே எனது / கார்த்தியின் மீண்டு வரும்போது எதிர்கொள்ளும் துன்பங்களை சில வாக்கியங்களில் கடந்துவிடுகிறேன்.
* பதிவு முதலில் பதியப்பட்ட நாள்: 26/10/2024
| Feedback |
| எழுதின எனக்கு objective-ஆ பார்க்கமுடியாது... படிச்ச உங்களுக்கு கதை எப்படி இருந்தது என்று உங்களோட கருத்துக்களை மறக்காமல் Comments-ல் போடவும். |
![]() |
கதை எப்படி இருக்கு? |
| Picture of the day |
|---|
![]() |





