கா.ஒ.கா 05. காதலுக்கும் காதலனுக்கும் மரியாதை...

கா.ஒ.கா 05. காதலுக்கும் காதலனுக்கும் மரியாதை…

இது காத்துவாக்குல ஒரு காதல் தொடர்கதையின் 5-வது அத்தியாயம்.

முன் கதை சுருக்கம்...
எனக்கு அர்ணாபிடம் நெருக்கம் கூடிப்போய், நான் அவனிடம் கொல்கத்தாவுக்கு மாற்றல் வாங்கி வந்து அவனுடன் சேர்ந்து வசிக்கட்டுமா என்று கேட்கிறேன். ஆனால் அர்ணாபின் நிபந்தனையால் குழம்பி போய் வீட்டுக்கு திரும்பி வரும் நான் என் முன்னாள் காதலனான விஷ்வாவிடம் அர்ணாப் பற்றி விவாதிக்கிறேன். விஷ்வாவின் எதிர்ப்பையும் மீறி நான் அர்ணாபின் நிபந்தனையை ஏற்று openly gay ஆக come out செய்ய முடிவெடுக்கிறேன், அர்ணாபும் என்னை ரொம்ப miss பண்ணுவதாக சொல்கிறான். நான் அர்ணாபிடம் நேரில் காதலை தெரிவிக்க முடிவெடுத்து இப்போது கொல்கத்தாவுக்கு வந்து இறங்கியிருக்கிறேன். இப்போது அர்ணாபின் எண்ணம் என்ன?
I hate porn that starts off fucking... I need to know why they are fucking
சேரும் இடத்தை போல போகும் பயணமும் சுவாரசியமே...

நள்ளிரவை தாண்டி கிட்டத்தட்ட 2:30 மணிக்கு கோல்கத்தா உள்ளூர் விமான நிலையத்தில் நான் போன விமானம் இறங்கியபோது எனக்கு கண்களில் தூக்க களைப்பையும், பயண அலுப்பையும் மீறி கோபம் தான் தலைதூக்கி இருந்தது. பின்னே? மாலை 7:30 மணிக்கு துவங்கிய என் பயணம் ஹைதராபாத்தில் நிர்ணயிக்கப்பட்ட 1:30 மணி நேரத்தை தவிர கூடுதலாக ரொம்ப நேரம் தடைபட, எனக்கு ஒன்றும் பண்ண முடியாத கையாலாகாத நிலை கோபத்தை ஏற்றியது. பின்னே? நான் அர்ணாபிடம் என் காதலை formal ஆக propose செய்வதற்காக வரும்போதா இப்படி நடக்க வேண்டும்?

கடைசியில் கோல்கத்தாவில் தரையிறங்கியதும் நான் ஓட்டமும் நடையுமாக வெளியே வந்தேன். என்னை எதிர்பார்த்து என் அர்ணாப் வாசலில் ஆர்வத்துடன் நின்றிருப்பதை நான் தூரத்தில் இருந்தே கவனித்துவிட்டேன். மேலே 2 பட்டன்கள் போடாமல் கும்மென்ற மார்பின் man cleavage-ஐ காட்டியபடி கம்பீரமாக நிற்கும் என்னவனை ஓடிச்சென்று கட்டிப்பிடிக்கும் ஆர்வத்தில் என் நடையின் வேகத்தை துரிதப்படுத்தினேன். அவனை நெருங்கியதும் அர்ணாப் தன் முரட்டு கரங்களால் என்னை முழுசாக ஆக்கிரமித்து இறுக்கி கட்டிப்பிடித்தான்.

நாங்கள் இருவரும் கையை கோர்த்துக்கொண்டு parking-க்கு நடக்கும் போது நடமாட்டம் குறைந்த ஒதுக்குபுறமான இடத்தில் அர்ணாப் சட்டென்று என்னை ஒதுக்கி கிஸ்ஸடிப்பான் என்று ஏதோ எதிர்பார்ப்பில் இருந்த எனக்கு அவனது அமைதி லேசான ஏமாற்றத்தை தந்தது. அர்ணாப் விமான நிலையத்துக்கு வெளியே வந்து அங்கு வரிசையாக நின்றிருந்த மஞ்சள் நிற Taxi ஒன்றை கை காட்டி அழைத்தான். அவன் Taxi driver-டம் பெங்காலியில் ஏதோ சொல்லிவிட்டு பின் சீட் கதவை எனக்காக திறந்து விட்டான். நாங்கள் ஏறியதும் taxi சீராக பயணிக்க ஆரம்பித்தது.

நான் அர்ணாப்பின் தோளில் சாய்ந்து “எங்கே போறோம் அர்ணாப்? நீ ஏன் bike கொண்டு வரலை?” என்று கேட்க, அர்ணாப் என் கன்னத்தை செல்லமாக தட்டினான். “Surprise… உன்னை Kidnap பண்ணிட்டு போறேன்!!!” என்று சிரித்துவிட்டு அர்ணாப் என் கைவிரல்களை கோர்த்துக்கொண்டான். அது துர்கா பூஜை சீசன் என்பதால் அந்த இரவிலும் நகரமெங்கும் விளக்குகளின் அலங்காரங்கள் பளிச்சென்று இருந்தது. முதல் முறையாக நான் கொல்கத்தாவின் இந்த அழகிய கோலாகலத்தை, நான் அர்ணாபின் தோளில் சாய்ந்துக்கொண்டு ஒய்யாரமாக பார்க்கிறேன். ஒரு பக்கம் நான் அவற்றை பிரமிப்பாக பார்த்துக்கொண்டு இருந்தாலும், அர்ணாப் என்னை எங்கே அழைத்து போகிறான் என்ற குறுகுறுப்பு கோல்கத்தாவின் அழகை ரசிக்க முடியாமல் தடுத்தது. எங்கள் taxi அந்த decent-ஆன lodge முன்பு நின்றது. அர்ணாப் reception-ல் இருந்து சாவி வாங்கிக்கொண்டு என்னை பார்க்க, நான் அவன் கையை பிடித்துக்கொண்டு மாடிப்படி ஏறினேன்.

கொஞ்சம் மட்டமான Air refreshener வாசனை கமகமத்த அந்த lodge அறைக்குள் நுழைந்ததும் நான் அர்ணாப்பை இறுக்கி கட்டிப்பிடித்தேன். இவ்வளவு நேரம் நான் அடக்கி வைத்த விரகதாபம் எல்லாவற்றையும் சூடான & கொஞ்சம் சத்தமான பெருமூச்சாக வெளியிட்டு நான் அவன் முகமெங்கும் எச்சில் முத்தமிட்டேன். அர்ணாப் அமைதியாக அவற்றை வாங்கிக் கொண்டான். தன் backpack-ல் இருந்து ஒரு புது துணி பொதியை எடுத்து என்னிடம் நீட்டினான். “குளிச்சிட்டு இதை போட்டுக்கோ கார்த்தி! இன்னும் முக்கால் மணி நேரத்துல பிரம்ம மூகூர்த்தம். Kalighat-ல விசேஷ பூஜை இருக்கு… போய் சாமி கும்பிட்டுட்டு அப்புறம் நம்ம வீட்டுக்கு போகலாம்.” என்று என் கன்னத்தை செல்லமாக தட்டினான். பொதியை பிரிக்காமல் கட்டில் மேல் போட்டுவிட்டு எனது Toothbrush-ஐ எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் நுழைந்தேன்.

அர்ணாப் உள்ளே குளித்துக்கொண்டிருக்க, உடம்பில் மெல்லிய ஈரமும், இடுப்பில் துண்டுமாக நான் அர்ணாப் என்னிடம் கொடுத்த பொதியை பிரித்தேன். சுத்தமான தும்பைப்பூ வெள்ளை நிறத்தில் பட்டு சட்டையும், வேட்டியும் பளபளத்தது. அர்ணாப் மனசுக்குள் அவ்வளவு ஆசையை வைத்துக்கொண்டு அவன் ஏன் அடக்கி வாசிக்கிறான் என்று புரிந்தது. கோவிலுக்கு ‘சுத்தமாக’ போகவேண்டும் என்று நினைக்கிறான் போல… நான் அவன் கொடுத்த பட்டு சட்டையை போட்டுக்கொண்டு, வேட்டியை நம் ஊர் style-ல் கட்ட முயற்சிக்க, கட்டியது போக இன்னும் நீளமாக மிச்சமிருந்தது. எப்படி பஞ்சகச்சம் கட்டுவது என்று வேட்டியை இப்படியும் அப்படியுமாக மடித்து என்னவோ செய்ய முயற்சிக்கிறேன்.

குளித்துவிட்டு இடுப்பில் வெறும் ஈரத்துண்டுடன் வெளியே வந்த அர்ணாப் புன்னகையுடன் கட்டிலில் உட்கார்ந்து என்னை அவன் கால்களுக்கு நடுவே இழுத்து என் வேட்டியை வாங்கி எனக்கு வங்காளிகள் முறையில் கட்டிவிட்டான். அவன் கட்டி முடிக்கும் வரை நான் அவன் கன்னத்தை தடவியபடி அவனை ஆசையோடு பார்த்துக்கொண்டு நின்றேன். முடிந்ததும் நான் என்னை கண்ணாடியில் பார்த்தபோது நீண்ட குர்த்தாவிலும், பஞ்சகச்ச style வேட்டியில் கிட்டத்தட்ட பக்கா பெங்காலியாக மாறியிருந்ததாக தோன்றியது. அர்ணாப் தயாராக சில நிமிடங்கள் மட்டுமே போதுமானதாக இருந்தது. நாங்கள் இருவரும் புது துணியில் selfie எடுத்துக்கொண்டு வெளியே இறங்கினோம்.

வங்காளிகளுக்கு துர்கா பூஜா என்பது வெறும் பண்டிகை அல்ல… அதற்கும் மேலே… மூச்சுக்காற்று போல அவர்களது வாழ்வில் நீக்கமற கலந்தது. It is an emotion. அந்த விடியற்காலையிலும் காளி கோவிலில் கூட்டம் அள்ளியது. மூலஸ்தானத்தில் இருந்த காளியை தரிசித்தபோது ஏதோ ஒரு சொல்லமுடியாத பரவசம் என் மனதிலும் பரவியது. முரசும், சங்கும், மேளமும் உச்சஸ்தாயியில் ஒலித்தபோது கூட்டத்தில் இருந்த அனைவரும் மந்திரித்து விட்டது போல ஒரே தாளத்தில் அசைந்தார்கள். பூஜை முடிந்ததும் அர்ணாப் என்னை கையை பிடித்து படித்துறைக்கு அழைத்து வந்தான். முழுசாக விடியாமல் பொங்கி வரும் கங்கையில் நகரத்து விளக்குகளின் பிரதிபலிப்பு mystic தன்மையை கொடுத்தது. அர்ணாப் கையில் இருந்த குங்குமத்தை என் நெற்றியில் திலகமாக இட்டான். அப்படியே என் கன்னத்தை தடவ, மீதமிருந்த குங்குமம் என் கன்னத்தில் ஈஷியது.

“கார்த்தி! நீ வந்துட்டு போனதுக்கு அப்புறம் என் வாழ்க்கையிலே ஏதோ வெறுமையா இருக்கு… திடீர்னு நான் தனியா நிக்கிற மாதிரி இருக்கு… ப்ளீஸ்! என் வாழ்க்கையிலே முழுசா வந்துடு… வழக்கமான நாம கல்யாணம் பண்ணிக்கலாமான்னு proposal வைக்காம, நம்ம வாழ்க்கையை காளி மாதாவின் அருளோட ஆரம்பிக்கனும்னு தான் உன்னை நேரா கோவிலுக்கு அழைச்சிட்டு வந்தேன். அன்னைக்கு நீ ஒன்னா இருக்கலாமான்னு கேட்டப்போ நான் மறுத்துட்டேன். ஆனா இன்னைக்கு எல்லாரும் கல்யாணம் பண்ற இந்த பிரம்ம முகூர்த்தத்துல நான் உன் கிட்டே formal-ஆ கேட்குறேன். கார்த்தி! Will you stay in my life forever?”என்று என் விரல்களை எடுத்து அதில் மென்மையாக முத்தம் வைத்தான். நான் சொல்ல நினைத்ததை எல்லாம் அவன் சொன்னதை கேட்டு இன்ப அதிர்ச்சியில் உறைந்தேன். அர்ணாப் குணிந்து என் உதட்டை கவ்வியபோது நான் சொர்க்கத்தில் மிதந்தேன்.

அர்ணாப் இன்னும் நெருங்கி என்னை கட்டிப்பிடித்து கன்னத்தை இழைக்க, என் குங்குமம் அவன் முகமெங்கும் அப்பியது. நான் அர்ணாபின் உதட்டை சப்பி சப்பி சுவைக்க, எங்கள் வாய்களுக்குள் எச்சில் பரிமாற்றம் தாராளமாக நடந்தது. எவ்வளவு நேரம் நாங்கள் அப்படி முத்தமிட்டபடி ஒதுக்குபுற படித்துறையில் உட்கார்ந்திருந்தோம் என்று தெரியவில்லை. நான் பேச்சு வராமல் அர்ணாப்பின் மடியில் முகம் புதைத்தபடி அமைந்திருந்தேன். பரவசத்தோடு பயணக்களைப்பும் கூட சேர்ந்து என்னை அமைதியாக்கி இருக்கலாம்.

தூரத்தில் குளிக்க வந்த பக்தர்களின் அரவம் எங்களை மீண்டும் பூலோகத்துக்கு இழுத்து வர, அர்ணாப் எழுந்து என்னிடம் கை நீட்டினான். நான் அவன் கையை பிடித்துக்கொண்டு எழுந்து அவனுடன் நடக்க ஆரம்பித்தேன். நான் கொல்கத்தாவில் இறங்கி அர்ணாப்பை பார்த்ததும் அப்படியே ஒதுக்குப்புறமாக தள்ளி மரத்தடியிலோ இல்லை roadside-ல் Bus / van-ன் மறைவிலோ அவன் உதட்டை ஊம்பியெடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் வந்த எனக்கு அர்ணாப்பின் செய்கைகளுக்கு எப்படி எதிர்வினை ஆற்றவேண்டும் என்று தெரியாத அளவுக்கு mind blank ஆகியிருந்தது.

ஒருவேளை நான் அப்படி செய்திருந்தால் அது வெறும் உடம்பு சார்ந்த காமத்தின், விரக தாபத்தின் வெளிப்பாடாக தான் இருந்திருக்கும். மனசு சார்ந்த காதலாக இருந்திருக்காது. ஆனால் அர்ணாப் செய்த விஷயம் – emotional / religious touch கொடுத்து கொழுத்த பிரம்ம முகூர்த்த நேரத்தில் என்னிடம் propose செய்தது எங்கள் அன்புக்கு செய்யும் உச்சக்கட்ட மரியாதையாக இருந்தது. என் காதல் சொல்லி அவனை அசத்த வந்த நான் அவனது home ground-ல் நான் clean bold ஆகி நிற்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Free Sitemap Generator
Scroll to Top