ஓரினச்சேர்க்கை

அவனும் நானும் ஜெயமோகனும்…

தனிமையை புத்தகங்களுடன் கழிப்பதில் இனிமை காணும் என்னை போன்ற ஆட்களுக்கு, குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் கலையுணர்ச்சி நிறைந்த அமைதியான சுபாவம் கொண்ட Closet-ல் உள்ள கே-க்களுக்கு கோவை டவுன் ஹால் பகுதி ஒரு சொர்க்கம். சுற்றி சுற்றி இருக்கும் புத்தக கடைகளில் ஏறி இறங்கவே நேரம் பத்தாது என்றால் எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தது போல இருக்கும் சேரன் புக் ஹவுஸ் மற்றும் அதன் எதிரில் இருக்கும் shopping complex-ன் அடிப்பகுதியில் இருக்கும் புத்தக கடைகளும் படிக்கும் ஆர்வலர்களுக்கு பரவசம் கொடுக்கும் இடங்கள். அன்றும் அப்படி தான் வடவள்ளியில் இருந்து கிளம்பினேன். 7c பஸ் என்னை சுமந்துக்கொண்டு ஊரெல்லாம் சுற்றிவிட்டு கடைசியில் Townhall-ல் உதிர்த்தபோது எனக்கு களைப்பே தெரியவில்லை. ஆர்வமாக புத்தக கடைகளுக்கு ஓடினேன். அது “அங்காடி தெரு” படம் வந்த புதுசு… அதில் வசனம் எழுதியிருந்த ஜெயமோகன் பற்றி ஒரு சர்ச்சை ஓடிக்கொண்டு இருந்ததால் “யாரவர்?” என்ற ஆர்வத்தில் ஜெயமோகனின் எழுத்துகளை பற்றி ஆராய்ச்சி செய்ய, எனக்கு ஜெயமோகனின் எழுத்துக்கள் மீது ஒரு காதலே வந்திருந்தது. அதனால் எனது அன்றைய தேடல் ஜெயமோகனின் படைப்புகளாக இருந்தது.

Saraswathy Book Center-ல் நுழைந்தபோது அவன் என் கவனத்தில் வந்து விழுந்தான். புறாக்கூடு போன்ற தலைமுடியும், வித்தியாசம் என்று நினைத்துக்கொண்டு வைக்கப்பட்டிருந்த தாடியும் சட்டென்று என்னை ஈர்த்தது. அவன் உடம்பை இறுக்கிப் பிடித்த மாதிரி T-Shirt போட்டிருந்ததை பார்த்து “என்ன ஒரு over confidence” என்று சிரித்துக்கொண்டேன். ஏனென்றால் body hugging T-Shirt போட்டு காட்டும் அளவுக்கு அப்படி கட்டான sculpted உடம்பு எல்லாம் இல்லை. ஆனால் ஒவ்வொருவருக்கும் தான் ஒரு hunk என்ற எண்ணம் இருப்பது இயற்கை மட்டுமல்ல, தப்பு சொல்லவும் முடியாது அல்லவா? “என்னங்க சார் வேணும்?” என்ற Sales girl-ன் குரல் என்னை அவனிடம் இருந்து பிரித்து இழுத்தது.

அவனும் நானும் ஜெயமோகனும்…
நான் எனக்கு தேவையான புத்தகங்களை சொல்ல, அவள் எது இருக்கிறது, எவையெல்லாம் இல்லை என்று மனப்பாடமாக சொல்லிக்கொண்டிருந்தாள். கடைசியில் என்னுடைய list-ல் இருந்து சில புத்தகங்கள் மட்டுமே கிடைத்திருந்தது. அதை எடுத்துவர அவள் உள்ளே சென்றதும் நான் சும்மா கடையை நோட்டமிட, அவன் போயிருந்ததை அப்போது தான் கவனித்தேன். மெல்லிய அசட்டு புன்னகையோடு நான் மீண்டும் திரும்ப, அந்த Salesgirl நான் கேட்ட புத்தகங்களை எடுத்து வந்திருந்தாள். புத்தகங்கள் அடங்கிய plastic bag-ஐ எடுத்துக்கொண்டு நான் oneway road-ல் இறங்கினேன். அடுத்து என் இலக்கு சேரன் புக் ஹவுஸ் தான்.

பொதுவாக சேரன் புக் ஹவுஸில் Text Books-கள் தான் அதிகம் கிடைக்கும் என்றாலும் உள்ளே சில களஞ்சியங்களும் ஒளிந்திருக்கும் என்பது என்னை போன்ற அடிக்கடி வரும் நபர்களுக்கு மட்டுமே தெரியும். நான் உள்ளே நுழைந்தபோது கடையில் ஓரளவுக்கு அமைதி இருந்தது.

... Slide-க்கு கீழே பதிவு தொடர்கிறது

ஜில் ஜில் படங்கள்

பதிவு தொடர்கிறது...

“ஜெயமோகன் எழுதுன விஷ்ணுபுரம் இருக்குதாங்கண்ணா?” நான் அந்த இளம் Salesman-டம் கேட்டபோது, அவன் தாடையை சொறிந்துக்கொண்டு “இருக்கும்னு நினைக்கிறேன்…. பார்த்துட்டு சொல்றேனே” என்று மறைந்தான். நான் மீண்டும் கடையை சுற்றிப் பார்த்தபோது என் கண்கள் மகிழ்ச்சியில் அகல விரிந்தன. அந்த புறாக்கூடு தலையன் தூரத்தில் சில புத்தகங்களை தேடிக்கொண்டிருந்தான். நான் இம்முறை அவன் மறைவதற்குள் ஆசை தீர sight அடித்துக்கொள்ள வேண்டும் என்று வெட்கமே இல்லாமல் அவனை வெறித்து வெறித்து பார்த்தபடி நின்றேன். அவன் புத்தகங்களை தேடிய விதத்திலும், எடுத்த புத்தகங்களை பார்த்த, படித்த விதத்திலும் அவனும் ஒரு தீவிர வாசிப்பாளனாக இருக்கவேண்டும் என்று நினைத்தேன்.

அவனும் நானும் ஜெயமோகனும்…
என்னை தாண்டி ஒரு Salesgirl விஷ்ணுபுரம் புத்தகத்தை எடுத்துச்செல்ல, நான் அவளிடம் “ஏங்க… நான் தான் அந்த book கேட்டேன்” என்று அவளிடம் இருந்து வாங்க முயற்சிக்க, அவள் என்னை புதிராக பார்த்தாள்.

“இல்லைங்களே… அந்த customer தான் கேட்டார்ன்னு நான் தேடி எடுத்துட்டு வர்றேன்” என்று அவனை கைகாட்டினாள். உள்ளுணர்ச்சி அவனை தூண்டியிருக்கும் போல… சரியாக அதே சமயம் அவன் அவளை பார்த்துவிட்டு கையில் இருந்து புத்தகத்தை Book shelf-ல் வைத்துவிட்டு எங்களை நோக்கி நடந்தான்.

அவளை நோக்கி புன்னகையுடன் “Thanks” என்று சொல்லிவிட்டு புத்தகத்தை எடுத்து பிரித்து பார்க்க ஆரம்பித்தான். நான் ஏக்கமாக அந்த புத்தகத்தை பார்த்துக்கொண்டிருந்தாலும் என் gay பக்கம் அவன் படிக்கும் அழகை, பக்கங்கள் திரும்புகையில் அவன் கண்ணில் ஏற்பட்ட பரவசத்தை sight அடித்துக்கொண்டிருந்தது. என் Salesman வந்து என்னிடம் “Sorry Sir! அது stock தீர்ந்து போச்சு… இருந்ததே ஒரே piece தான்.. அதுவும் இப்போ தான் இவர் முந்திக்கிட்டார்” என்றபோது அவன் என்னை நிமிர்ந்து பார்த்தான்.

அவனும் நானும் ஜெயமோகனும்…
நான் துணிச்சலை வரவழைத்துக்கொண்டு அவனிடம் “நான் இந்த புக்கை பார்த்துட்டு தரட்டுமா?” என்று கேட்க, அவன் புன்னகையோடு என்னிடம் கொடுத்தான். நான் முன்னுரையை படிக்கையில் “எங்கே நீங்க எனக்கு இந்த book-ஐ குடுத்திடுறீங்களான்னு கேட்கப்போறீங்களோன்னு பயந்துட்டேன்… உங்க கண்ணுல அவ்வளவு ஏக்கம் தெரிஞ்சுது” நான் அவனை வியப்பாக பார்த்தேன்.

“ஒரு ரசிகர் கிட்டே இப்படி கேட்குறது எவ்வளவு insensitive-ஆன விஷயம்னு எனக்கு தெரியும். அதனால தான் என்னால கேட்க முடியலை. நான் குடுத்து வச்சது அவ்வளவு தான்” புத்தகத்தை அவனிடம் நீட்டினேன். Salesman-ஐ பார்த்து “Thanks” என்று சொல்லிவிட்டு அவனிடம் “Online-ல தான் order பண்ணனும். வர்றதுக்கு 10-15 நாள் ஆகலாம். பரவாயில்லை” என்று வெளியே நடக்க, அவன் Counter-ஐ நோக்கி நடந்தான். நான் சோர்வாக Bus stop நிழற்குடைக்கு அருகே இருந்த கரும்பு ஜூஸ் கடையில் வந்து “அண்ணா… ஐஸ் கம்மியா ஒன்னு” என்று சொல்லிவிட்டு மணி பார்த்தேன். என் பக்கத்தில் ஏதோ நிழலாட, அவன் தான் வந்து நின்றான்.

அவனும் நானும் ஜெயமோகனும்…
நான் அவனை பார்த்து புன்னகைத்தேன். அவனும் பதிலுக்கு புன்னகைத்துவிட்டு “நீங்க புக் கிடைக்கலைன்னு தளர்வா போறதை பார்த்தா எனக்கு பாவமா இருந்துச்சு… வேணும்னா இந்த புக்-ஐ எடுத்துக்கோங்க” என்று புத்தகத்தை என்னிடம் நீட்டினான்.

“இல்லைங்க… பரவாயில்லை. நான் internetல ஜெயமோகன் பத்தி தேடுனப்போ இது அவரோட magnum opus-நு போட்டிருந்துச்சு.. அதனால ஒரு ஆர்வத்தால தான் தேடுனேன்… பரவாயில்லை” என்று புத்தகத்தை அவன் பக்கம் தள்ளிவிட்டேன்.

அவன் முகத்தில் ஒரு மலர்ச்சி. “நல்ல வேளை… நீங்க இதை முதல் book-ஆ படிச்சீங்கன்னா உங்களுக்கு இந்த புத்தகத்தை படிக்க முடியாது. ஏன்னா அவரோட எழுத்துக்கள்ல மலையாளம் ரொம்ப தூக்கலா இருக்கும்… நீங்க அவரோட உலோகம், ஏழாம் உலகம் படிச்சிட்டு தயாரானதுக்கு அப்புறம் விஷ்ணுபுரம் படிச்சீங்கன்னா ரசிக்கமுடியும்… இப்போ எனக்கு குற்ற உணர்ச்சி இல்லை” என்று அவன் சிரித்தபோது அப்படியே இழுத்து கிஸ்ஸடிக்கவேண்டும் போல இருந்தது.

அவனும் நானும் ஜெயமோகனும்…
“உங்களுக்கு நேரம் இருந்துச்சுன்னா இங்கே உக்கடத்துல பழைய புக் மார்க்கெட் இருக்குல்ல… அங்கே போய் பார்க்கலாமா?” என்னால் மறுக்கக்கூடிய கேள்வியா அது? “சரி!” என்று சுருக்கமாக என் சம்மதத்தை தெரிவித்தேன்.

கொளுத்தும் வெயிலில் உக்கடம் பழைய புத்தக கடைகளில் தேடியதில் “உலோகம்” மட்டும் கிடைத்தது. ஆனாலும் எனக்கு அவன் கூட இருந்ததில் களைப்பு தெரியவில்லை. வாங்கிய புத்தகத்தை எடுத்துக்கொண்டு நான் உக்கடம் Bus stand-ஐ நோக்கி திரும்ப, அவன் என்னிடம் “சீ! நான் உங்க பேரும், எங்கே இருந்து வர்றீங்கன்னும் கேட்கவே இல்லை… my bad!” தன் தலையில் அவனே அடித்துக்கொண்டு கேட்ட அழகில் நான் சொக்கிப்போய் “கார்த்தி… வடவள்ளியிலே இருந்து வர்றேன்” என்றேன்.

“நான் சுரேஷ்… கோவைப்புதூர்ல இருக்கேன். என் கூட வர்றீங்களா?” என் கையை குலுக்கியபடி கேட்டான். முதல் touching touching 😉

நான் யோசித்தேன்… “என் ரூம்ல கொஞ்சம் book collection வச்சிருக்கேன். வந்து பாருங்க… அங்கே இருந்து வடவள்ளிக்கு மினிபஸ் இருக்கு” மீண்டும் என்னால் மறுக்கமுடியாத proposition-ஐ அவன் முன்வைத்தான்.

1 2 3Next page

காதல்ரசிகன்

காதலுக்கும் காமத்துக்கும் பால் (Gender) தேவையில்லை என்று கருதும் கூட்டத்தில் ஒருத்தன். அழகு எங்கிருந்தாலும், யாரிடமிருந்தாலும் ரசிக்கும் கலாரசிகன். அன்பு எங்கிருந்து கிடைத்தாலும் பால் நோக்காமல் கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் கொண்டவன். கட்டிலில் கட்டியவளோடு புணர்ந்தாலும் நான் ஓரினச்சேர்கையாளனும் கூட என்று சொல்லிக்கொள்வதில் வெட்கமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Free Sitemap Generator
error: Alert: Content is protected !!