தொடர்கதைகள்

P G 09. எந்நாளும் நம் குடும்பம்

கதை எப்படி இருக்கு?

0 / 5 Results 0 Votes 0

Your page rank:

  1. P G 01. Proposal
  2. P G 02. கிணத்துத்தண்ணி
  3. P G 03. உடம்பு வலி
  4. P G 04. காதல் கம்மிநாட்டி…
  5. P G 05. கற்று தெரிவது காமக்கலை….
  6. P G 06. பலவந்தம்
  7. P G 07. கோடை (கானல்) காதல்
  8. P G 08. அப்புறம்
  9. P G 09. எந்நாளும் நம் குடும்பம்
  10. P G 10. ஆப் (App) வைத்த ஆப்பு
  11. P G 11. பிரளயம்
  12. P G 12. பிரிவு
  13. P G 13. புயலுக்கு பின் அமைதி – இந்தப்பக்கம்
  14. P G 14. ஜோஷுவா – சமீரை இமை போல காக்க…
  15. P G 15. ஒரு மெல்லிய கோடு…
  16. P G 16. புயலுக்கு பின் அமைதி – அந்த பக்கம்
  17. PG 17. மீண்டும் மீண்டு(ம்) வா…
  18. PG 18. நெஞ்சமெல்லாம் நேசம்…
  19. PG 19. (மன)நிறைவு

அடுத்த நாளும் வீட்டில் இதே நிலைமை என்பதால் வீட்டுக்கு வரும்போதே ரவியும் அவினாஷும் உடனே Gym-க்கு கிளம்புவது என்ற தீர்மானத்தோடு வந்து அதை நடத்தியும் காட்டினார்கள். உடற்பயிற்சி முடிந்து வியர்த்து விறுவிறுத்து வீட்டுக்கு வந்தபோது மிட்டு ஓடிவந்து அவினாஷை கட்டிக்கொள்ள, அவன் அவளை தூக்கிக்கொண்டு தட்டாமாலை சுற்றினான்.

Random கதைகள்

“அவி மாமா! இங்கே பாரேன் எனக்கு பாட்டி புது பட்டுப்பாவாடை சட்டை கொண்டு வந்திருக்காங்க” மிட்டுவின் மழலை கொஞ்சல் அவினாஷுக்கு கிறக்கமாக இருந்தது.

“ஹை! சூப்பரா இருக்கே! குட்டிப்பாப்பாவுக்கு பர்த்டே-வா?” அவினாஷ் மிட்டுவின் நெற்றியில் செல்லமாக உரசினான்.

திரை படைப்புகள்

“இல்லை மாமா… நாம திருப்பதி போறோம்ல. சாமி கும்புடுறதுக்கு பாட்டி எனக்கு பட்டு சட்டை தச்சிட்டு வந்தாங்க…. நல்லா இருக்கா?”

“உனக்கு என்னடி செல்லம்… cute-ஆ இருக்கே. நானும் கோவிலுக்கு போட்டுக்க உனக்கு matching matching-ஆ பட்டு வேஷ்டி, பட்டுச்சட்டை எடுத்து வக்கிறேன்” அவினாஷ் மிட்டுவை sofa-வின் கைப்பிடியில் நிறுத்தினான்.

சைட்டிக்க கவர்ச்சி ஆண்கள்

“ஓ! நம்ம Trustie friend நம்ம family-க்கு அஞ்சு டிக்கட் தான் அனுப்பியிருக்கார்… அண்ணாவை அவசரப்பட்டு பட்டு வேஷ்டி இப்போ எடுத்து வைக்கவேண்டாம்னு சொல்லுடாம்மா” ரூபாவின் அப்பா sofa-வில் அமர்ந்தபடி TV-யில் கண்களை நிறுத்தியபடி பதில் சொல்ல, அவினாஷின் முகத்தில் ஏற்பட்ட ஏமாற்றத்தை அவர் வேண்டுமென்றே கவனிக்க விரும்பவில்லை என்பது தெரிந்தது. washroom-லிருந்து வெளியே வந்த ரவி அரைகுறையாக இந்த உரையாடலை கேட்டதும் விருட்டென்று தன் அறைக்குள் போனான். ரூபாவுக்கு ஏதோ நிலைமை சரியில்லை என்று தெரிந்தது.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி

நீங்க உங்க புதிய gay sex partner-ஐ மற்ற sex partner-கள் கூட share பண்ணிக்குவீங்களா?

View Results

Loading ... Loading ...

அறையில் மடியில் laptop-மாக ரவி வேலை செய்துக்கொண்டிருக்க, ரூபா “சாப்பிட வர்றீங்களா? ஏதாச்சும் அவசர வேலையா? இல்லை சாப்பாட்டை தட்டுல போட்டு இங்கேயே எடுத்துட்டு வந்துடட்டுமா?” ரூபா ரவியின் கோபத்தை தெரிந்துக்கொண்டு வேண்டுமென்றே underplay செய்தாள்.

“இல்லை… வியாழக்கிழமை Project Status Meeting இருக்கு. அதுக்கு PPT தயார் பண்ணிட்டு இருக்கேன்.” – ரவி ரூபாவை பார்க்காமலேயே பதில் சொன்னான்.

“வியாழக்கிழமையா? திருப்பதிக்கு போயும் WFH பண்ணுவீங்களா?”

“இல்லை… நீங்க குடும்பமா போயிட்டு சாமி கும்பிட்டுட்டு வாங்க. நானும் அவினாஷும் ஆஃபீஸ் போறோம்”

“என்ன…?” ரூபா திணறினாலும் ரவி என்ன சொல்ல வருகிறான் என்பதை யூகித்துக்கொண்டாள். “ஏங்க! அப்பாவோட friend குடும்பம்னு அஞ்சு டிக்கெட் குடுத்திருக்கார். அவருக்கு எப்படி அவினாஷ்ன்னு ஒருத்தன் நம்ம வீட்டுல இருக்கான், அவனும் நம்ம கூட வருவான்னு தெரியும்?” சமாளித்தாள்.

“அவருக்கு தெரியாது தான்… ஆனா உங்க அப்பா கிட்டே நீ தானே சொல்லியிருக்கனும் மொத்தம் ஆறு பேர் போகனும்னு. ஏண்டி! குட்டி போட்ட பூனையாட்டம் அண்ணா அண்ணின்னு நம்மளையே சுத்திட்டு வர்றான், மிட்டு கூட அவ்வளவு நேரம் செலவழிக்கிறான்… இவ்வளவு ஏன்? உன் தங்கச்சிக்கு அவனை பாக்கலாம்னு ஊரெல்லாம் சொல்லிக்கிட்டு திரியுறே… அவனை நம்ம குடும்பத்து மனுஷனா பார்க்க தோணலை இல்லை? ஆனா அவனை இன்னும் மூணாம் மனுஷனாவே நெனச்சிட்டு இருக்கே. பாவம் இது தெரியாம அவனும் என் கூட சேர்ந்து லீவு போட்டிருக்கான். அவனை பொறுத்தவரைக்கும் அவன் இந்த வீட்டு மனுஷன்.. ஆனா உன்னை பொறுத்தவரைக்கும் அவன் வெறும் Paying Guest.. சரி விடு! வீட்டுல இருக்குற எல்லாரும் வெளியே போகும்போது ஒரு member-ஐ மட்டும் கூட்டிட்டு போகமாட்டேன்னு சொல்லனுமான்னு யோசிக்குற basic courtesy கூட இல்லை?” வாக்கியங்களை முடிக்கும் போது தானாகவே ரவியின் குரல் உச்சஸ்தாயிக்கு எகிறியிருந்தது. பெருமூச்சு வாங்கினான்.

“நான் தான் அப்பா கிட்டே சொல்ல மறந்துட்டேன்…” அப்பாவை விட்டுக்கொடுக்கத பொறுப்பான மகளாக பேசினாள் ரூபா. “ஆனா என்ன தான் friend-ஆ இருந்தாலும் அவனுக்குன்னு ஒரு limit இருக்குல்ல? நீங்க அவனுக்கு ரொம்ப இடம் குடுக்குறீங்க… கொஞ்சம் practical-ஆ யோசிங்க.. நாளைக்கே அவனுக்கு வேற ஊருக்கு போயிடலாம் இல்லை வேற வேலை கிடைக்கலாம், வசதியான பெரிய வீட்டுக்கு போகலாம். அப்படியெல்லாம் இல்லைன்னாலும் கல்யாணம் ஆனா இங்கேயே இருப்பானா இல்லை மிட்டு கொஞ்சம் வளர்ந்ததும் நம்ம வீட்டுக்குள்ளே இன்னொரு ஆம்பளைய வச்சிக்கமுடியுமா? எப்படியோ என்னைக்கா இருந்தாலும் அவன் வேற இடத்துக்கு போகப்போறவன். நீங்க அவன் மேலே இவ்வளவு emotional-ஆ attach ஆகுறது நல்லது இல்லைங்க. கடைசி வரைக்கும் உங்க கூட இருக்கப்போறது எங்க அப்பா அம்மா, உங்க அப்பா அம்மா, நானும் மிட்டுவும் தான். அவனுக்காக நம்ம குடும்பத்தை பகைச்சுக்காதீங்க” ரூபாவும் எதிராக நின்றாள்.

“தாயே! Simple. போனா இந்த வீட்டு address-ல இருக்குற எல்லாரும் – i.e ஆறு பேரும் போகனும். இல்லைன்னா மாயவரம் address-ல இருக்குற நீங்க நாலு பேரும் மட்டும் போயிட்டு வந்துடுங்க. எனக்கு இந்த விஷயத்துல இதுக்கு மேலே என்ன சொல்றதுன்னு தெரியலை… சரி! சாப்பாட்டை தட்டுல போட்டு எடுத்துட்டு வா” ரவி “அவ்வளவு தான்” என்பது போல laptop-ல் பார்வையை செலுத்தி வேலையை தொடர, ரூபா கோபத்தில் பல்லை கடித்தபடி வெளியேறினாள்.

அந்த Tavera வண்டி இவர்கள் ஆறு பேரோடு டிரைவரையும் சேர்த்து National Hiwhways-ல் வழுக்கிகொண்டு மிதமான வேகத்தில் போனது. டிரைவருக்கு அருகே ரவியும், நடுவில் ரூபாவும் அவள் பெற்றோரும், பின்பக்கத்து சீட்டில் மிட்டுவும் அவினஷுமாக அமர்ந்திருந்தனர். மிட்டுவும் அவினாஷும் விளையாடிக் கொண்டிருந்த குதூகல சத்தம் வண்டியை நிரப்பியது. ரவி stereo-வின் சத்தத்தை குறைத்துவிட்டு இவர்களது சத்தத்தை மிகவும் அனுபவித்தான். அவ்வப்போது ரவியும் அவர்களது விளையாட்டில் கலந்துக்கொண்டு நேரம் போனதே தெரியாமல் பயணித்துக் கொண்டிருந்தார்கள். இவற்றை பார்த்து ரூபாவும் மனம் இளகினாள். இவ்வளவு அன்பாக இருக்கும் இந்த பையனை நான் ஏன் குடும்பத்தினராக ஏற்றுக்கொள்ளவில்லை என்று தன்னை தானே திட்டிக்கொண்டாள். கிளம்பும் வரைக்கும் ரவியின் மீதிருந்த கோபத்தின் காரணமாக அவினாஷிடம் கடுமையாக நடந்துக்கொண்டதற்காக மனதுக்குள்ளேயே மன்னிப்பு கேட்டுக்கொண்டாள்.

கோவிலில் ஏழுமலையானை தரிசித்துவிட்டு வெளியே வந்ததும் ரவி கையில் இருந்த துளசியை பிய்த்து மிட்டுவுக்கும், ரூபாவுக்கும் ஊட்டிவிட்டுவிட்டு அவினாஷை பார்க்க, அவன் துள்ளிக்குதித்து முன்னே வந்து ரவியிடம் இருந்து அந்த துளசி இலைகளை வாயில் வாங்கிக்கொண்டபோது அவன் கண்ணில் ஒரு பரவசம் பரவியதை ரவியால் மட்டுமே உணரமுடிந்தது. ரூபாவும் தன் கையில் இருந்த துளசியை அவினாஷுக்கு ஊட்டி தன்னுடைய மன்னிப்பை Nonverbal-ஆக கேட்டாள். மிட்டு அனைவரிடமும் இருந்து குட்டி பிரசாத லட்டுக்களை ஆட்டையப்போட, அங்கே பரவிய சிரிப்பு அவ்வளவு infectious-ஆக இருந்தது.

கதை எப்படி இருக்கு?

0 / 5 Results 0 Votes 0

Your page rank:

Picture of the day


P G 09. எந்நாளும் நம் குடும்பம்
Previous page 1 2
மேலும் காட்ட

இதோ.. நீங்க தொடர்கதை படிக்கிறதால கேட்குறேன்.

இதுவரை வந்த தொடர்கதைகளில் உங்களுக்கு பிடித்த கதை / கதைகள்?

தொடர்கதை பிடித்ததற்கு காரணம்? (பல காரணங்கள் தேர்வு செய்யலாம்)

தொடர்கதைகள் படிப்பதில் எரிச்சலான விஷயம்?

அதிகபட்சம் எத்தனை அத்தியாயங்கள் இருக்கலாம்?


அனைத்து பதிவுகளையும் ஒரே table-ல் காண, இங்கே click செய்யவும்.

காதல்ரசிகன்

காதலுக்கும் காமத்துக்கும் பால் (Gender) தேவையில்லை என்று கருதும் கூட்டத்தில் ஒருத்தன். அழகு எங்கிருந்தாலும், யாரிடமிருந்தாலும் ரசிக்கும் கலாரசிகன். அன்பு எங்கிருந்து கிடைத்தாலும் பால் நோக்காமல் கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் கொண்டவன். கட்டிலில் கட்டியவளோடு புணர்ந்தாலும் நான் ஓரினச்சேர்கையாளனும் கூட என்று சொல்லிக்கொள்வதில் வெட்கமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Free Sitemap Generator

Adblock Detected

Please disable the adblocker for this site (not only the page) to render the in-line related posts blocks effectively and reload the page.