| கதைச்சுருக்கம்... |
|---|
| தன் அலுவலகத்தில் வேலை செய்யும் கார்த்தியை தனஞ்செயா அவ்வப்போது கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் Gay என்று குத்திக்காட்டி பேச, ஒரு நாள் அதை கார்த்தி எதிர்க்கும் போது.... அவர்கள் உறவு என்ன ஆனது? |
சேரும் இடத்தை போல போகும் பயணமும் சுவாரசியமே...
அன்றைய பரபரப்பான மதியம் மெல்ல மெல்ல சோம்பலான மாலையாக மாறிக்கொண்டிருக்கும் நான்கு மணி இருக்கும்… நான் ஒரு கையில் காஃபி கப்பும் மறு கையில் சிகரெட்டுமாக எங்கள் கேண்ட்டீனை ஒட்டிய தூணின் நிழல் மறைவில் சுவற்றில் சாய்ந்தபடி புகையை இழுத்து விட்டுக் கொண்டிருந்தேன். என் பார்வை தரையில் வெறித்திருக்க, இயந்திரத்தனமாக நான் புகையை இழுத்து வெளியேற்றிக்கொண்டிருக்க, என் மனம் மட்டும் எங்கோ வானத்தில் பறந்து கொண்டிருந்தது. அது தந்த இனிமையான நினைவுகள் காரணமாக என்னையும் அறியாமல் என் உதட்டில் இருந்து புன்னகை வெளியேறியது.
//* கொஞ்சம் personal பதிவு…. வெறும் sex act மட்டும் வேண்டுமென்றால் நேரே 3-வது பக்கத்துக்கு செல்லவும் *//
“சீச்சீ… இந்த பழம் புளிக்குங்குற கதை தான் ஞாபகத்துக்கு வருது…. நீ கூட தான் அந்த gang-ல தனஞ்செயாவை ஜொள்ளு விட்டுட்டு இருந்தே… அவன் உன்னோட advancements-ஐ கண்டுக்கலைன்னதும் அவனை பத்தி குறை சொல்றதை பார்த்தா அப்படி தான் தோணுது…” அடுத்தவள் முதலாமவளின் குறைக்கு பதிலடி கொடுத்தாள். “ஆள் பார்க்க கும்முன்னு இருக்கான்… சும்மா கடலை போட்டோமா அப்புறம் நம்ம பொழப்ப பார்த்தோமான்னு இருக்கனும்… அதை விட்டுட்டு அவன் முன்னாடி நீ குணிஞ்சு cleavage காமிச்சு, அவன் உனக்கு துப்பட்டா போட்டு மறைச்சதும் இப்போ தனஞ்செயாவை பார்த்தா எரிச்சலா வருதாக்கும்…” என்றதும் என்னை அறியாமல் மீண்டும் ஒரு புன்னகை.
அவள் சொல்லும் தனஞ்செயா என்னுடைய team-ல் சேர்ந்த உடனேயே ஏனோ காரணமே இல்லாமல் அவன் பின்னாடி என் மனதும் சென்றது. ஆள் பார்ப்பதற்கு சும்மா பொதி மாடு போல கும்மென்று இருப்பது மட்டும் காரணமல்ல… அவனது அழகான புன்னகையும், அடர்ந்த தாடியும் கலைந்த முடியும் அவனுக்கு கொடுத்த திமிர் பிடித்த look-ம் கூட காரணமாக இருக்கலாம்… அதற்கேற்ப அவன் எப்போதும் தன்னை சுற்றி பொண்ணுங்க கூட்டம் இருப்பதாக பார்த்துக் கொண்டதும் அவன் மீது எனக்கு ஈடுபாடு வர வைத்திருக்கலாம். ஆனால் என்னுடைய உள் மனது மட்டும் “கண்ணால் காண்பதும் பொய்… தீர விசாரிப்பதே மெய்” என்று என் ஆசைக்கு தூபம் போட்டு கொண்டு இருந்தது. என்னுடைய team members என்னுடைய நல்ல நண்பர்கள் கூட… அதனால் நான் ஒரு கல்யாணமான closet gay என்பதை அவர்களுக்கு பூடகமாக வெளிப்படுத்திய பிறகும் அனைவரும் என்னிடம் அன்பாகவும், இயல்பாகவும் இருந்தார்கள்.எங்கள் team-க்கு புதிதாக வந்திருக்கும் தனஞ்செயா மட்டும் ஏனோ கழுவும் நீரில் நழுவும் மீனாக என்னிடம் பேச்சு கொடுப்பதை தவிர்த்து வந்தான். ஒருவேளை அவன் விலகி போவது தான் எனக்கு அவன் மீது கூடுதல் ஈர்ப்பு வர வைக்கிறதா என்றும் தெரியவில்லை. ஆனால் அவன் அவ்வப்போது மறைமுகமாக என்னை குத்திக் காட்டுவதை போல பேசுவது என்னை காயப்படுத்தி கொண்டிருந்தது.
சில நாட்களுக்கு முன்பு ஒரு மதிய சாப்பாட்டு வேளையில் அனைவரும் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டிருந்த சமயத்தில் விஷ்வா “மச்சான், Netflix-ல Heartstoppers-ன்னு ஒரு gay series வந்திருக்கு பார்த்தியா? செம feel good-ஆ இருந்துச்சு” என்று என்னிடம் கேட்டான். நான் “பார்த்தேன்டா… natural-ஆ இருக்குங்குறதை விட நல்லா இருக்குன்னு சொல்லலாம்… ஆனா webseries-ங்குறதால gays-ங்களோட உண்மையான பிரச்சனைகளான bullying, comeout-ஐ எல்லாம் ரொம்ப மேம்போக்கா காமிச்சிருக்காங்க… சொல்லப்போனா Gay-ஆ இருக்குறது ரொம்ப cool-ங்குற மாதிரி காமிச்சிருந்தாங்க… ஆனா இந்த மாதிரி விஷயத்தை பொதுவெளியிலே பேசுறதே பெரிய விஷயங்குறதால எடுத்த content-ல எனக்கு பெருசா உறுத்தல் இல்லை” என்று பதிலளித்தேன்.“இப்படி series எடுத்து இவனுங்க நம்ம கலாச்சாரத்தையே கெடுக்குறாங்க… கார்த்தி சொன்ன மாதிரி இந்த series எல்லாம் gay-ஆ இருக்குறது தான் cool-ன்னு பசங்களை ஏமாத்தி அவனுங்களை எல்லாம் ஹோமோவாக்கி அலையவிட்டுட்டு, இப்போ ஊருக்குள்ளாற ஆம்பளைங்களுக்கு கூட பாதுகாப்பு இல்லாம போச்சு… விஷ்வா இன்னைக்கு feel good-ஆ நல்லா இருக்குன்னு சொல்றார். நாளைக்கு அவருக்கு இன்னொரு ஆம்பளையை ஊம்புனா எப்படி இருக்கும்னு தேடி போக தோணும்… நம்மளோட கலாச்சாரம் எங்கே போயிட்டு இருக்கு?” என்று தனஞ்செயா ஆவேசமாக பேச, என் நண்பர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தார்கள். தன்னை குறிப்பிட்டு பேசியதால் விஷ்வா கோபமாக பதிலளிக்க முயற்சிக்க, நான் விஷ்வாவை மேலே பேசாமல் இருக்குமாறு பார்வையாலேயே அடக்கினேன்.
இரவு 9:00 – 9:30 மணி இருக்கும்… என் நண்பர்கள் அனைவரும் தனஞ்செயாவின் இந்திரா நகர் வீட்டில் குழுமி இருந்தோம். நான் தனஞ்செயாவின் வீட்டுக்கு வரமாட்டேன் என்று எவ்வளவோ மறுத்தும் என் நண்பர்கள் “ஒரே இடத்துல வேலை செய்யுறோம்… இப்படி ஒதுங்கிப்போனா நாளை பின்னே அது அலுவலகத்தில் வேலை செய்வதை பாதிக்கும்… அதனால கொஞ்சம் விட்டுக்கொடுத்து போ” என்று என்னை அவன் வீட்டுக்கு வர வற்புறுத்தினார்கள். அது மட்டுமல்ல… என் மனைவியும் குழந்தைகளும் பள்ளி விடுமுறை காரணமாக சொந்த ஊருக்கு போயிருப்பதால் நான் தனியாக வீட்டில் என்ன செய்யப்போகிறேன் என்று என்னை மல்லுக்கட்டி இழுந்து வந்தார்கள். இரவு சாப்பாடு வரும் வரைக்கும் எல்லாம் நன்றாக போய்க்கொண்டிருந்தது. KTV-ல் “வேட்டையாடு விளையாடு” படம் ஓடிக்கொண்டிருந்தது.கடைசியில் கமலஹாஸன் டேனியல் பாலாஜியிடம் “நீங்க என்ன ஹோமோவாடா? ஒரே மாதிரி பச்சை குத்தியிருக்கீங்க?”…. “உன் பொண்டாட்டியை நான் சுட்டுட்டேன்” என்று கோபத்துடன் கத்த, தனஞ்செயா என்னை ஓரக்கண்ணால் பார்த்தபடி “இவன் மாதிரி ஆளுங்களை எல்லாம் இப்படி தான் பொட்டு பொட்டுன்னு சுட்டு தள்ளனும்…. இவனுங்களால ஊர் உலகம் எல்லாம் கெட்டு போகுது” என்று சொல்ல, எனக்கு ஜிவ்வென்று கோபம் வந்தது. நான் சட்டென்று எழுந்தேன்.
என் நண்பர்களுக்கு என்ன நடக்கிறது என்று புரியும் முன்பு நான் என்னுடைய helmet-ஐ எடுத்துக்கொண்டு வாசலை நோக்கி நடந்தேன். தனஞ்செயா என்னை தடுக்க முயற்சிக்கவில்லை… ஆனால் அறைக்குள்ளே நண்பர்களைன் மனைவிகளுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்த தனஞ்செயாவின் மனைவி ராதா சலசலப்பை கேட்டு உள்ளே இருந்து வெளியே வந்தாள்.“ஏங்கண்ணா? கிளம்புறீங்களா? சாப்பாடு தயாரா இருக்கு… நீங்க எல்லாம் பேசிட்டு இருக்கீங்களேன்னு கொஞ்ச நேரம் கழிச்சு எடுத்து வைக்கலாம்னு இருந்தேன்… ஒரு அஞ்சு நிமிஷம்.. சாப்பிட்டு போகலாம்” என்று என்னிடம் இருந்து helmet-ஐ வாங்க முயற்சிக்க, எனது கோபம் சட்டென்று தணிந்தது.
“இல்லைம்மா… திடீர்னு ஒரு urgent வேலை வந்திருக்கு. அதனால தான்…. நீங்க எல்லாம் enjoy பண்ணுங்க” என்று போலியாக சிரிக்க, தனஞ்செயா வந்து “சாப்பிட்டுட்டு போங்க கார்த்தி” என்று சொன்னதில் அது வெறும் சம்பிரதாயத்துக்காக சொல்லப்படுவது என்பது அப்பட்டமாக தெரிந்தது. நான் வறட்டு புன்னகை ஒன்றை உதிர்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தேன்.









Very nice one as usual!
நன்றி K!… ஆனால் usual என்பதற்கு ஒரே கதையையே திரும்ப திரும்ப எழுதுவதாக அர்த்தமா?
No, I intended to say that this is also at its best as like the other stories mate!