தொடர்கதைகள்

P G 07. கோடை (கானல்) காதல்

  1. P G 01. Proposal
  2. P G 02. கிணத்துத்தண்ணி
  3. P G 03. உடம்பு வலி
  4. P G 04. காதல் கம்மிநாட்டி…
  5. P G 05. கற்று தெரிவது காமக்கலை….
  6. P G 06. பலவந்தம்
  7. P G 07. கோடை (கானல்) காதல்
  8. P G 08. அப்புறம்
  9. P G 09. எந்நாளும் நம் குடும்பம்
  10. P G 10. ஆப் (App) வைத்த ஆப்பு
  11. P G 11. பிரளயம்
  12. P G 12. பிரிவு
  13. P G 13. புயலுக்கு பின் அமைதி – இந்தப்பக்கம்
  14. P G 14. ஜோஷுவா – சமீரை இமை போல காக்க…
  15. P G 15. ஒரு மெல்லிய கோடு…
  16. P G 16. புயலுக்கு பின் அமைதி – அந்த பக்கம்
  17. PG 17. மீண்டும் மீண்டு(ம்) வா…
  18. PG 18. நெஞ்சமெல்லாம் நேசம்…
  19. PG 19. (மன)நிறைவு

“கொடை ரோடு” ரயில்வே நிலையத்துக்கு காலை சற்று தாமதமாகவே ரயில் வந்து சேர்ந்த்து. ரவியும் அவினாஷும் எழுந்து தங்கள் Backpack-ஐ தயாராக வைத்திருந்தார்கள். IRCTC Canteen-ல் இருந்து தரப்பட்ட coffee என்று சொல்லப்பட்ட திராவகத்தை குடித்ததால் வயிறு கலகலவென்று கக்கா போய் பசிக்க ஆரம்பித்திருந்தது. ரயில் நிறுத்தவும் திமுதிமுவென்று இறங்கிய கூட்டத்தில் ரவியும் அவினாஷும் கலந்தனர். ஸ்டேஷனில் இருந்து வெளியே வந்தபோது Trekking Operator-ன் பிரதிநிதி பிடித்திருந்த பதாகையை பார்த்து இவர்கள் அவனை அனுகவும், இவர்களை போல மேலும் சிலர் அங்கு கும்பல் சேர்ந்தார்கள். பின்னர் சில நிமிடங்களில் அனைவரும் Tempo Traveller-ல் ஏற்றப்பட்டு மலை அடிவாரத்தை நோக்கி பயனித்தார்கள்.

அந்த Tempo Traveller-ன் இரண்டு பேர் அமரும் இருக்கையில் உட்கார்ந்திருந்த ரவி ஜன்னலுக்கு வெளியே இயற்கை காட்சிகளை ரசித்துக்கொண்டிருக்க, அவினாஷ் ரவியின் biceps-ஐ கட்டிக்கொண்டு அவன் தோளில் தலையை சாய்த்திருந்தான். ரவி அவினாஷை கன்னத்தில் தடவ, அவினாஷ் தலையை நிமிர்த்தி ரவியை பார்த்தான்.

“பசிக்குதாடா?” ரவி.

... Slide-க்கு கீழே பதிவு தொடர்கிறது

ஜில் ஜில் படங்கள்

பதிவு தொடர்கிறது...

“ப்ஸ்…” அவினாஷ் அழகாக கண்ணை சுருக்கி தோளை குலுக்கி இல்லை என்பது போல சிரித்தபடி சொன்னான்.

“அப்புறம் ஏன் இப்படி சாய்ஞ்சிருக்கே? sceneries எல்லாம் எவ்வளவு அழகா இருக்கு… பார்த்து ரசி! நீ ஜன்னல் சீட்டுக்கு மாறிக்கிறியா?”

“அந்த sceneries எல்லாம் எப்போ வேணும்னாலும் பார்க்கலாம்… ஆனா உங்க கூட இருக்குற இந்த நிமிஷங்கள் திரும்ப கிடைக்குமான்னு தெரியலை.. அதனால அதை உள்வாங்கி enjoy பண்ணிக்கிறேனே..”

“சீ! கிறுக்கு… நாம எப்பவும் ஒன்னா தான் இருக்கப்போறோம்.” ரவி அவினாஷின் தலையில் மென்மையாக முத்தம் வைத்தான்.

“ஒன்னா இருக்கலாம் அண்ணா… ஆனா நாம மட்டும் இப்படி வெளியே வரமுடியாதே… அண்ணி, குழந்தை எல்லாம் இருக்கும்போது நான் உங்களை இப்படி public-ஆ கட்டிக்க முடியுமா? I am aware of the limitations in our relationship but I am not complaining… நான் கொஞ்ச நேரம் உங்க வாசம் பிடிச்சுக்குறேன்” ரவி தன் கையை அவினாஷின் தோளை சுற்றி போட்டுக்கொள்ள, அவன் ரவியின் நெஞ்சாங்கூட்டில் கோழிக்குஞ்சாக ஒடுங்கினான். அவினாஷ் தன் கையை ரவியின் இடுப்பை சுற்றி இறுக்கி கட்டிக்கொண்டு நெருங்கி உட்கார்ந்தான். எவ்வளவு நெருக்கம் என்றால் அந்த இரண்டு பேர் இருக்கையில் இவர்கள் இருவரை தவிர மூன்றாவது ஆள் தாராளமாக உட்கார்ந்துக்கொள்ளும் அளவுக்கு.. 🙂

அவினாஷ் வெளியே ஜன்னல் வழியாக இயற்கை காட்சிகளை ரசித்துக்கொண்டே தன்னிச்சையாக ரவியின் மேலே இரு சட்டை பட்டன்களை கழற்றிவிட்டு தன் கையை உள்ளே செலுத்தி அவனது நெஞ்சை தடவிக்கொண்டு இருந்தான். ரவியும் அதை பொருட்படுத்தும் நிலையில் இல்லை. திடீரென்று ரவிக்கு தங்களை யாரோ குறுகுறுவென்று பார்ப்பது போல உள்ளுணர்வு சொல்ல, சட்டென்று நிமிர்ந்து பக்கத்து சீட்டை பார்த்தான். அதில் அமர்ந்திருந்த ஜோடி இவர்களை போல உலகத்தை மறந்த நிலையில் இருந்தனர்.

“என்னாச்சுங்கண்ணா?” அவினாஷ் ரவியிடம் கேட்டான்.

“ஒன்னுமில்லடா… ரவி அவினாஷை மீண்டும் தோளோடு இறுக்கிக்கொண்டான். ஆனாலும் ரவியின் பார்வை சுற்றும் முற்றும் அலைந்துக்கொண்டிருந்தது. சிறிது நேரம் கழித்து மீண்டும் தான் கவனிக்கப்படுவதாக தோன்ற, சட்டென்று திரும்பினான். பின் சீட்டில் ஒரு ஆள் அவசரம் அவசரமாக தன் சீட்டில் சரியாக உட்கார்ந்தான்.

வழியில் ஒரு இடத்தில் சாப்பாட்டுக்காக வண்டி நிறுத்தப்பட அனைவரும் சாப்பிட இறங்கினார்கள். ரவியும் அவினாஷும் உட்கார்ந்து இருந்த table-ன் பக்கத்தில் அந்த ஆள் உட்கார்ந்திருந்தான். அவன் கவனம் ரவி மற்றும் அவினாஷ் மீது இருப்பதை உணர ரவிக்கு ரொம்ப நேரம் பிடிக்கவில்லை. சாப்பிட்டதும் கை கழுவிவிட்டு வெளியே வந்தபோது அந்த ஆளும் பின்னாடியே வந்தான். ரவி அவனிடம் ஒரு Mentos வில்லையை நீட்டினான். அந்த ஆள் தயங்கியபடியே எடுத்துக்கொண்டான்.

“சொல்லுங்க ப்ரோ! நான் உங்க கவனத்தை கவர்ந்துட்டேன் போல… பஸ்ல இயற்கை அழகை ரசிக்காம எங்களையே பார்த்துட்டு இருந்தீங்க…” ரவி நேரடியாக விஷயத்துக்கு வந்தான்.

“நீங்க ரெண்டு பேரும் ஹோமோவா?” அவனும் நேராக கேட்டான்.

“நாங்க Gay couple. நீங்க சொன்ன மாதிரி Gay-வும் Homosexuality-ல தான் வரும். அதை தமிழ்ல தன்பாலீர்ப்பு-ன்னு சொல்வாங்க. ஆம்பளையும் ஆம்பளையும் காதலிச்சா அவங்களை Gays-ன்னும், பொம்பளைங்களும் பொம்பளைங்களும் காதலிச்சா அவங்களை Lesbians-ன்னும் சொல்வாங்க. இது தவிர ஒரே சமயத்துல ஆம்பளையையும் பொம்பளையையும் காதலிக்க முடியுறவங்களை Bisexuals-ன்னும், ஆம்பளையா இருந்து பொம்பளையாவும், பொம்பளையா இருந்த ஆம்பளையா மாறினவங்களை Transgenders-ன்னும் சொல்வாங்க. நாங்க எல்லாம LGBT-ங்குற வகையிலே வருவோம். நானும் என் partner-ம் honeymoon மாதிரி ஒரு pleasure trip-க்கு வந்திருக்கோம்”

“எப்படிங்க நீங்கல்லாம் வெட்கமே இல்லாம இப்படி public-ஆ வெளியே சொல்லிக்கிறிங்க? உங்களை மாதிரி ஆளுங்களால தான் நம்ம கலாச்சாரமே கெட்டுப்போயிடுச்சு… உங்களுக்கு ஏங்க பொம்பளைங்க புடிக்கலை?”

“நீங்க ஏன் ஆம்பளையா பொறந்தீங்க?”

“அது அது வந்து… அது என் கையிலே இல்லையே. கடவுளா பார்த்து படைச்சது” அவன் லேசாக திணறினான்.

“நாங்களும் அப்படி தான். நாங்க விரும்பி ஆம்பளை தான் வேணும், பொம்பளைங்க மேலே ஈர்ப்பு கூடாதுன்னு முடிவு பண்றதில்லைங்க… சின்ன வயசிலே இருந்தே எங்களுக்கு பொண்ணுங்க மேலே ஈடுபாடு இல்லாம பசங்களை பார்த்தா ஒரு கவர்ச்சி வரும். இப்போ சில வருஷங்களா தான் இது பத்தின awareness வந்து இது பத்தி பரவலா பேசப்பட ஆரம்பிச்சிருக்கு.”

“ஆமாம்… எல்லாம் Globalisation-ன்னு சொல்லிட்டு நாம மேற்கத்திய கலாச்சாரத்தை பின்பற்ற ஆரம்பிச்சோமோ அப்போல இருந்து இந்த கருமம் தொற்றுநோய் மாதிரி பரவிட்டு இருக்கு… குறிப்பா உங்களை மாதிரி IT ஆளுங்களால தான்..”

“அப்போ நம்ம கடவுள்ங்க விஷ்ணுவும், சிவனும் எந்த IT Company-லே வேலை செஞ்சாங்க? அவங்க ரெண்டு பேரும் எந்த வெள்ளைக்காரனை பார்த்து ஒன்னா சேர்ந்து ஐயப்பனை பெத்தாங்க?”

“அது… விஷ்ணு பொண்ணு வேஷத்துல வந்து சிவன் கூட படுத்ததால தான் புள்ள பொறந்துச்சு… அது எப்படி உங்க ஹோமோ கணக்குல வரும்?”

“அது Queer-ங்குற cross dressing வகையிலே வரும். ஆம்பளையா இருந்தாலும் பொம்பளைங்க dress-ஐ எடுத்து போட்டுக்கிட்டு தன்னை பொம்பளைன்னு நினைச்சுக்கிறதும், அதன் காரணமா தன்பால்-ஓட ஈர்ப்பு ஏற்படுறதும் இன்னொரு வகை…”

“அங்கே தொட்டு இங்கே தொட்டு கடைசியிலே சாமி மேலேயும் கை வைக்கிறீங்களா?”

“இல்லைங்க… இது நம்ம புராண காலத்திலேயும் இருந்திருக்குறதால தான் கதைகள்ல சொல்லப்பட்டிருக்கு. அதனால இது புது விஷயம் இல்லைன்னு சொல்ல வந்தேன். அது மட்டுமில்லாம sexuality-ங்குறது தனிமனுஷ சுதந்திரம். நீங்க ஏன் அடுத்தவங்களோட படுக்கை அறையிலே எட்டிப்பாக்குறீங்க? சுப்ரீம் கோர்ட்டே இதை decriminalise பண்ணியாச்சு. ஆனா உங்களை மாதிரி ஆளுங்க இதை இன்னும் பிடிச்சு தொங்கிட்டு இருக்கீங்க…?”

“உங்களை மாதிரி ஆளுங்களால தான் நாட்டுல எய்ட்ஸ் பரவுது… போற போக்கப்பார்த்தா ஆம்பளைங்களுக்கு கூட உங்கள மாதிர் ஆளுங்க கிட்டே இருந்து பாதுகாப்பு தேவைப்படும் போல..”

“அப்போ நாட்டுல பொண்ணுங்களை மட்டுமில்லாம குழந்தைகளை கூட கற்பழிக்கிறாங்களே heterosexuals அது கலாச்சார சீரழிவுல வராதா? Gays-ன்னா தன் பால் மேலே ஈர்க்கப்படுறவங்க. அது காதலா இருக்கலாம், casual sex-ஆ இருக்கலாம்… இதையே தான் heterosexuals-ம் பண்றாங்க. ஆனா அதை புனிதம்னு சொல்ற சமுதாயம் அதிலேயும் இருக்குற கற்பழிப்பு, casual sex, கள்ள உறவு எல்லாத்தையும் கண்டுக்காம எங்களுக்குள்ளே இருக்குற ஈர்ப்பை வெறும் sexual-ஆ பாக்குறது தான் பிரச்சனை. நாங்க பாக்குற ஆளுங்க எல்லார் கூடவும் படுக்குறது இல்லை. எல்லா ஆம்பளைங்க மேலேயும் பாய்ஞ்சு கற்பழிக்கிறது இல்லை.”

அந்த ஆள் மேற்கொண்டு பேசவில்லை. அவன் ரவி சொன்னதை எல்லாம் ஆமோதித்தானா இல்லை இவனிடம் என்ன பேசுவது என்று நினைத்தானோ தெரியவில்லை.

“Bro! இது simple-ஆ சொல்லனும்னா Veg, Non Veg மாதிரி. சுத்த சைவம் சாப்பிடுறவங்களுக்கு கறி சாப்பிடுறவனை பார்த்தா வர்ற அருவெறுப்பு மாதிரி தான் உங்க நினைப்பும். அதுக்காக அசைவம் சாப்பிடுறவங்க எல்லாம் கெட்டவங்க இல்லைன்னு உங்களுக்கும் தெரியும். சைவம் சாப்பிடுறவங்க எல்லாரும் புனிதர்கள் இல்லைன்னு நீங்களே ஒத்துக்குவீங்க. என்னைக்காச்சும் சைவம் சாப்பிடுறவன் அசைவம் சாப்பிட்டா இதுக்கா மத்தவங்களை வெறுத்தோம்னு தோணும்… அதுக்காக எல்லாரும் Gays ஆகனும்னு சொல்ல வரலை. இத வச்சு அடுத்தவங்களை judge பண்ணாம இருந்தாலே போதும்னு சொல்றேன்”

Tempo traveller-ல் இருந்து cleaner சத்தம் போட்டு அனைவரையும் அழைக்க, அந்த ஆள் ரவியிடம் புன்னகைத்துவிட்டு வண்டியில் ஏற முண்டியடித்தான். ரவியும் அவினாஷும் கைகளை கோர்த்துக்கொண்டு வண்டியை நோக்கி நடந்தார்கள்.

1 2 3Next page

காதல்ரசிகன்

காதலுக்கும் காமத்துக்கும் பால் (Gender) தேவையில்லை என்று கருதும் கூட்டத்தில் ஒருத்தன். அழகு எங்கிருந்தாலும், யாரிடமிருந்தாலும் ரசிக்கும் கலாரசிகன். அன்பு எங்கிருந்து கிடைத்தாலும் பால் நோக்காமல் கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் கொண்டவன். கட்டிலில் கட்டியவளோடு புணர்ந்தாலும் நான் ஓரினச்சேர்கையாளனும் கூட என்று சொல்லிக்கொள்வதில் வெட்கமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Free Sitemap Generator
error: Alert: Content is protected !!