ஜெய் மரக்காணம் பகுதியில் கடற்கரையை ஒட்டிய தெருவில் உள்ள தனது பூர்வீக வீட்டை பெரிதாக கட்டிக்கொண்டிருந்தான். அவன் அப்பா அம்மா கீழ் பகுதியில் வசிக்க, ஜெய்க்கு என்று மாடியை விரிவாக்கம் செய்துக்கொண்டிருந்தார்கள். அவர்களது எண்ணம் ஜெய்க்கு திருமணம் ஆனபிறகு அவன் தன் மனைவியோடு வரும்போது அவர்களுக்கு தனிமை கொடுக்கும் விதமாக மாடியில் விட்டுவிடலாம் என்று. ஆனால் ஜெய்க்கு கல்யாணத்தில் ஆர்வம் இல்லை. ஜெய் அழகானவன், அன்பானவன், அக்கறையும் கட்டுப்பாடானவன் என்றபோதும் அவன் கல்யாணத்தில் பிடி கொடுக்காததற்கு காரணம் அவனுக்கு பெண்கள் மீது ஈடுபாடு இல்லை என்பதே. அவன் தனக்கு என்று ஒரு நல்ல துணை கிடைக்கும் வரை தன்னுடைய வேலை மற்றும் தொழிலில் கவனம் செலுத்திக்கொண்டிருக்கிறான்.
அந்த வார இறுதியில் ஜெய் வீட்டுக்கு வந்தபோது மாடி போர்ஷனில், அலங்கார விளக்குகள் பொருத்துவதும், ஃபால்ஸ் சீலிங்க் மாட்டுவது என ஏற்பாடு செய்யப்பட்டது. அவர்களுக்கு தெரிந்த பட்டாபி தான் அந்த வேலையை செய்ய காண்டிராக்ட் எடுத்திருந்தார். ஜெய்க்கு அலுப்பாக இருந்தது. ஆனாலும் அவன் தந்தை பட்டாபி எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார் என்பதால் ஜெய் எதுவும் செய்யவேண்டாம் என்றும், அவர்கள் ஏதாவது ஏடாகூடமாக செய்யாமல் இருக்க வெறுமனே உட்கார்ந்துக்கொண்டு பார்வையிட்டால் போதும் என்று சொன்னார். ஜெய்யும் மாடி ஹாலில் சோஃபாவில் காலை நீட்டி சரிந்துக்கொண்டு டிவி பார்த்தவாறு ஆட்கள் மீது ஒரு கண்ணை வைத்துக்கொண்டிருந்தான். அவன் கவனத்தை ஒரு இளைஞன் கவர்ந்தான்.
அவனுக்கு கிட்டத்தட்ட 22-23 வயது இருக்கும். கை வைத்த பனியனில் அவனது உடம்பு நல்ல பூசின மாதிரி தெரிந்தது. தொப்பை இல்லை ஆனால் எலும்பனும் இல்லை. ஜெய் அவனை அவ்வப்போது ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டிருந்தான். வந்திருந்த ஆட்களிலேயே அவன் தான் நன்றாக துறுதுறுவென்று வேலை செய்துக்கொண்டிருந்தான். மற்றவர்கள் அவனை வைத்து வேலை வாங்கிக்கொண்டிருந்தார்கள் ஆனால் பட்டாபி வரும்போது அவன் செய்த வேலைகளை அவர்கள் செய்வது போல நடித்துக்கொண்டிருந்தார்கள். ஜெய்க்கு அதனால் அந்த பையன் மேலே இப்போது அனுதாபம் கலந்த ஆர்வம் பிறந்தது.
வந்திருந்த ஒருவர் அவனை அழைத்து மேலே மாட்டியிருந்த ஹோல்டரை கழற்றி தரச்சொன்னார். அவனும் கழற்றி கொடுத்தான். ஆனால் அதை கீழே இருந்தவர் கவனகுறைவாக வாங்கியதால் அது கீழே பெரும் சத்தத்தோடு விழுந்தது. என்னவென்று பட்டாபி உள்ளே ஓடிவந்தார். உடனே கீழே இருந்தவர் பிளேட்டை திருப்பிப்போட்டு மணிகண்டன் (மேலே இருந்தவன்) தன் கையில் கொடுப்பதற்கு பதிலாக கீழே போட்டுவிட்டதாக சொன்னார். பட்டாபி மணிகண்டனை பார்த்த் “*** தாயோளி… பரிதாபம் பார்த்து வேலைக்கு கூட்டிட்டு வந்தா சாதி புத்தியை காமிச்சிட்டியே” என்று அசிங்கமாக திட்டினார். மணிகண்டன் கண்ணில் கண்ணீர் தளும்ப நின்றான்.
ஜெய்க்கு கோபம் வந்தது. “பட்டாபி! முதல்ல என்ன நடந்துச்சுன்னு தெரிஞ்சுகிட்டு பேசுங்க… ரெண்டாவது இந்த வீட்டுல வேலை செய்யுறவங்களுக்கு உரிய மரியாதை தர்றதுன்னா மட்டும் வேலை செய்யுங்க.. கடைசியா இப்படி ஜாதியெல்லாம் இழுத்து அசிங்கமா பேசினா நடக்குறதே வேற” என்று கர்ஜித்தான். பட்டாபி வெலவெலத்து போய்விட்டார். சட்டென்று அந்த அறையிலிருந்து வெளியே செல்ல, மணிகண்டன் ஜெய்யை நன்றியுடன் பார்த்துவிட்டு மீண்டும் தன் வேலையை தொடர்ந்தான்.
மாலையில் ஜெய்யின் அப்பா அவனிடம் பட்டாபியிடம் கத்தியதற்காக அவனை கடிந்துக்கொண்டார். பட்டாபி இருவரிடமும் “வேலைக்காரங்க முன்னாடி தம்பி என்னை திட்டினால் மற்றவர்கள் எப்படி மதிப்பார்கள்? இது எங்க வேலை வாங்குற வழக்கம். இதுல தலையிடாதீங்க” என்றார்.
ஜெய் “நீங்க எவ்வளவு திறமையானவரா இருந்துக்கோங்க… ஆனா மனுஷங்களை மனுஷங்களா மதிக்கிறவங்க மட்டும் என் வீட்டோட சம்பந்தப்பட்டா போதும்.. இன்னொரு தடவை இந்த வீட்டுல நீங்க யாராச்சும், யார்கிட்டேயாச்சும் மரியாதை குறைவாக நடந்துக்கிட்டா இந்த வேலையை நீங்க செய்யவேண்டாம்னு சொல்லிடுவேன்” என்றான்.
பட்டாபிக்கு முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும் அளவுக்கு கோபத்தில் சிவந்தார். இருந்தாலும் ஒன்றும் சொல்லாமல் கிளம்பிவிட்டார். அடுத்த நாள் யாரும் மணிகண்டனிடம் பேசவே இல்லை. எல்லோரும் சொல்லிவைத்தது போல அவனை ஒதுக்கி வைப்பதை ஜெய் பார்த்தான். எல்லோரும் டீ வந்ததும் எடுத்துக்கொண்டு ஓரமாக ஒதுங்கிக்கொண்டனர். மணிகண்டன் மட்டும் தனியாக நின்று குடித்தான். ஜெய் தானும் ஒரு டீ டம்ப்ளர் எடுத்துக்கொண்டு அவனிடம் சென்று பேச்சுக்கொடுத்தவாறு கம்பெனி கொடுத்தான்.
பேச்சுவாக்கில் மணிகண்டன் எலக்ட்ரிகல் எஞ்சினியரிங்கில் டிப்ளமோ படித்துள்ளதாகவும், அரசாங்க தேர்வுக்கு முயற்சி செய்துக்கொண்டிருப்பதாகவும் சொன்னான். குடும்ப சூழல் காரணமாக படித்து முடித்ததும் வேலை தேட முடியாததால் இடைவெளி விழுந்துவிட்டதாகவும், அதன் காரணமாக தன்னை ஃப்ரெஷராகவும் எடுத்துக்கொள்ளமாட்டேன் என்கிறார்கள் அதே சமயம் எக்ஸ்பீரியன்ஸ் வகையிலும் எடுத்துக்கொள்ளமாட்டார்கள் என்பதால் எழுதிய அரசாங்க தேர்வு முடிவுகள் வரும்வரைக்கும் இப்படி காண்டிராக்டர்கள் அழைத்தால் வேலைக்கு சென்று வருவதாக சொன்னான். ஜெய்யும் பேச்சுவாக்கில் அவனது சப்ஜெக்ட் அறிவை தனக்கு தெரிந்தவரை எடைபோட்டான். நல்ல அறிவாளி என்றே தோன்றியது. அதனால் அவனுக்கு தன்னால் இயன்றவரைக்கும் உதவவேண்டும் என்று நினைத்துக்கொண்டான்.
அடுத்தடுத்த நாட்களில் ஜெய்க்கும் மணிகண்டனுக்கும் ஒரு அழகான நட்பு உருவாகியிருந்தது. ஜெய் இயல்பாக மணிகண்டனின் தோளில் கைபோட்டும், பேச்சுவாக்கில் தானாக கைகோர்த்துக்கொள்ளும் அளவுக்கு நெருக்கம் உண்டாகியிருந்தது. வேலை முடிந்ததும் ஒருசிலர் ஜெய்யிடம் தலையை சொரிந்தார்கள். ஆனால் மணிகண்டன், டிப்ஸோ இல்லை அடுத்த வேலைக்கோ கோரிக்கை எதுவும் வைக்காமல், சுயமரியாதையுடன் அவன் கண்ணை பார்த்து “All the best” சொல்லி, கைகுலுக்கி விடைபெற்றுக்கொண்டு நடந்து சென்றது ஜெய்க்கு அவன் மீதிருந்த ஈடுபாட்டை இன்னும் அதிகமாக்கியது.


![அவன் கஞ்சிக்கு ஏங்கினேன் [சுட்டகதை]](https://images.gilmastories.com/albums/featured/76.featured.webp)





