Sugar Daddy 10. In the Heart beat

Sugar Daddy 10. In the Heart beat

இது Sugar Daddy தொடர்கதையின் 10-வது அத்தியாயம்.

முன் கதை சுருக்கம்...
நரேன் விக்கியிடம் ஒரு பெண்ணை கல்யாணம் செய்து குழந்தை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்த விக்கி-நரேன் நடுவே மீண்டும் மனஸ்தாபம் உருவாகிறது. இம்முறை இருவரும் மனநல மருத்துவரிடம் counselling-க்கு செல்கிறார்கள். விக்கி அவருடைய அறிவுரையை நிராகரித்து தன் வாழ்க்கையை தன் விருப்பப்படி வாழ உரிமை இருப்பதாக சீறுகிறான். குழம்பிப்போன psychiatrist விக்கியையும் நரேனையும் இனி சந்திக்க வேண்டாம் என்று அறிவுரை சொல்லி அனுப்புகிறார். நம் காதலர்கள் இம்முறையேனும் முழுசாக பிரிந்தார்களா?

நரேனும் விக்னேஷும் Psychiatrist-ன் முன்பு spur of the moment-ல் இனி தாங்கள் மற்றவர்களிடம் வலிய போய் பேசுவதில்லை என்று உறுதியளித்திருந்தாலும் அங்கிருந்து வெளியேறும்போதே ஒருவேளை தாங்கள் தங்கள் சக்திக்கு மீறிய முடிவு எடுத்துவிட்டோமோ என்று பதைபதைக்க ஆரம்பித்திருந்தார்கள். இருந்தாலும் மற்றவர்களுடைய முடிவுக்கான காரணத்தில் நியாயம் இருப்பதாக கருதியதால் எடுத்த முடிவை பின்பற்றவேண்டும் என்று மனதை தேற்றிக்கொண்டார்கள். Psychiatrist-ன் Counselling Centre-ல் இருந்து வீடு திரும்பும் வரை இருவரும் பேசிக்கொள்ளவே இல்லை. காரில் இருந்து இறங்கியபிறகு நரேன் “Thanks! விக்கி” என்று சொல்லிவிட்டு அவன் கண்களை நேரில் பார்ப்பதை தவிர்க்க முயன்றாலும் அவரது மனதில் ஒரு போராட்டம் நடத்துவது அந்த கண்களில் அப்பட்டமாக தெரிந்தது. விக்கியும் “சரிங்க மாமா” என்பதோடு நிறுத்திக்கொண்டான்.

வீடு திரும்பிய நரேனுக்கு ஹாலில் நுழைந்தவுடனே கண்ணில் பட்ட சோஃபா அவரை உடனே துக்கத்தில் ஆழ்த்தியது. அதே சோஃபாவில் தான் விக்னேஷுக்கும் தனக்கும் முதல் முதலில் கலவி ஏற்பட்டது… எத்தனை நாட்கள் இந்த சோஃபாவில் உட்காராமல் என் மடியில் உட்கார்ந்து என்னை அப்படி கொஞ்சினான்… பலமுறை கட்டிலில் புணர்ந்ததை விட இந்த சோஃபாவில் உடலுறவு கொள்வது எவ்வளவு இனிமையாக இருந்தது… இனிய நினைவுகள் கொடுமையாக மாறினால் அது அநியாயத்துக்கு கோரமாக மாறிவிடுகிறதே… இனிமேல் அவன் இல்லாமல் வாழ பழகிக்கொள்ளவேண்டும் என்று நினைத்து பெருமூச்சு விட்டுக்கொண்டே சோஃபாவில் சரிந்தார்.

கிச்சனில் இருந்து அருந்ததி ஈரமான கையை தன் முந்தானையில் துடைத்துக்கொண்டே வெளியே வந்தார் – “டாக்டர் என்னாங்க சொன்னார்?”

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts

“ஹாங்!” நரேன் திருதிருவென விழித்தார்.

“விக்கியை Urologist கிட்டே கூட்டிட்டு போனீங்களே என்ன சொன்னார்?”

“ஓ! அதுவா… முதல் கட்ட மருந்து prescribe பண்ண்யிருக்கார். சில வாரங்கள் அதை strict-ஆ follow பண்ண சொல்லியிருக்கார்…. அப்புறம் வந்து பார்க்க சொல்லி advise பண்ணியிருக்கார்”

“அது சரி! அவனை குணப்படுத்திடலாம்ல?” அருந்ததியின் கண்களில் ஒரு ஆர்வம், ஏக்கம்…

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி

உங்க gay sex partner உங்களை தவிர மத்தவங்க கூடவும் sex வச்சுக்கிறாங்கன்னு தெரிஞ்சும் நீங்க அவர் மேலே possessive ஆகியிருக்கீங்களா?

View Results

Loading ... Loading ...

“ஆயிடும்… இனிமே உனக்கு நான், எனக்கு நீ… இவ்ளோ தான் நம்ம உலகம்”

“என்னங்க என்னென்னவோ பேசுறீங்க…. விக்கியும் நம்ம வீட்டு பையன் மாதிரி தானே”

“ஆமாம்…” நரேன் அருந்ததியின் முகத்தை வெறித்து பார்த்தார்.

“நீங்க ஏதோ சரியில்லை… சாப்பாடு ஆயிடுச்சு… சாப்பிட்டுட்டு கொஞ்ச நேரம் தூங்கி எழுந்திருங்க… எல்லாம் சரியாயிடும்” அருந்ததி எழுந்து கிச்சனுக்கு நடக்க, நரேன் அவரை பார்த்த பார்வையில் இன்று வித்தியாசம் தெரிந்தது.

“இத்தனை வருஷம் என்னோடு குடும்பம் நடத்தி என்னோட புள்ளையை பெத்துக்குடுத்து எங்களுக்காகவே வாழுறவ… இவளை தாண்டி இது என்ன திடீர்னு புது உறவு தேவைப்படுது? நான் என்னான்னு விக்கி மீதான காதலை நியாயப்படுத்திக்குறது?”

“சாப்பாடு எடுத்து வச்சுட்டேன்… கை கழுவிட்டு வர்றீங்களா?” அருந்ததியின் குரல் நரேனை மீண்டும் வீட்டுக்குள் இழுத்துவிட்டு வந்தது.

“தோ வர்றேம்மா…” நரேன் எழுந்து சென்றார்.

நரேன் கட்டிலில் படுத்துக்கொண்டு விட்டத்தை பார்த்தபடி யோசித்துக்கொண்டிருந்தார் “இந்த உடம்பையும் மனசையும் தனித்தனியா வைக்கிற வரைக்கும் பிரச்சனை இல்லாம இருந்துச்சு… பிரகாஷ் வந்தான் போனான்… பெருசா ஒன்னும் பாதிக்கலை… ஆனா என்னைக்கு விக்கி மேலே வயசு வித்தியாசம் பார்க்காம காதல் வந்துச்சோ அப்போ தான் எல்லா குழப்பங்களும் ஆரம்பிச்சுது…”

“ஆனா விக்கி எதிர்பாக்குறது என்ன? அவனோட அன்புக்கான அங்கீகாரத்தை தானே… நானும் தானே அவனை மாதிரியே காதல்ல விழுந்திருக்கேன்…. அவன் என்ன ஊர் உலகத்தை கூட்டி அவங்க முன்னாடி சொல்ல சொன்னானா இல்லை அருந்ததி கூட முந்தானையிலே பங்கு கேட்குறானா? நானும் உன்னை காதலிக்கிறேன் விக்கி-ன்னு சொல்றதுக்கு எனக்கு ஏன் அப்படி வலிக்குது?” நரேனின் மனம் அலைபாய்ந்தது.

“சீ! நீ பாட்டுக்கு அவன் கிட்டே உன் காதலை ஒத்துக்கிட்டு அந்த பையனும் உன்னையே புருஷன்னு உன் கூட உன்னோட வயசான காலத்துல உனக்கு பீ மூத்திரம் அள்ளி போட்டுட்டு இருக்கனுமா? நீ பொட்டுன்னு போயிடுவே… அவன் அடுத்து வேற ஆளை தேடுவானா? அவனோட காதலோட intensity-ஐ பார்த்தா அவன் உன் நினைப்பாவே கடைசி வரைக்கும் தனியா இருந்துக்குவான். உன்னோட சுயநலத்துக்காக அவனோட வாழ்க்கையை கெடுத்து வைக்காதே… Stay away from him for his good!” நரேனின் யதார்த்தவாத மனசாட்சி அவரை கொட்டியது.

“ஏங்க! என்ன ஆச்சு? நீங்க விக்கிய டாக்டர் கிட்டே கூட்டிட்டு போய் வந்ததுல இருந்து சரியே இல்லை… உண்மையிலேயே என்ன தான் சொன்னாங்க? சொல்லுங்க” அருந்ததி அவர் பக்கத்தில் உட்கார்ந்து நரேனின் தலையை கோதியபடி கேட்க, சட்டென்று நரேன் திரும்பி அருந்ததியின் மடியில் தலையை வைத்து அவருடைய தடிமனான இடுப்போடு கையை சுற்றிக்கொண்டார்.

“ஏங்க… என்ன இப்படி பண்றீங்க? என்ன பிரச்சனை என் கிட்டே சொல்லுங்க? நீங்க என்னவோ மறைக்குறீங்க… நாண் விக்கியை கூப்பிடுறேன்” அருந்ததி பதற்றமடைந்தார்.

“அதெல்லாம் ஒன்னும் இல்லை… அவனுக்கு call பண்ணாத. என்னை கொஞ்ச நேரம் இப்படியே வச்சுக்கோ. அது போதும்” நரேன் அருந்ததி கவனிக்காதபடிக்கு சாமர்த்தியமாக தன் கண்ணீரை அருந்ததியின் புடவையில் துடைத்துக்கொண்டார்.

“ஒரு நிமிஷம் இருங்க… வீட்டு கதவ தாழ் போட்டுட்டு வர்றேன்.” அருந்ததி எழுந்து போனார். சொன்னது மாதிரியே கதவை அடைத்துவிட்டு நரேனின் பக்கத்தில் உட்காந்துக்கொள்ள, நரேன் அருந்ததியின் மடியில் தலை வைத்து கண்ணை மூடினார். அருந்ததி அவருக்கு தலை கோதியபடியே கந்தர் சஷ்டி கவசத்தை முனுமுனுத்துக்கொண்டிருந்தார். முழுசாக சொல்லி முடிக்கையில் நரேன் தூக்கத்தில் ஆழ்ந்துவிட்டதை பார்த்து மெல்லிய புன்னகையோடு அவர் தலைக்கு அடியில் ஒரு தலையணையை வைத்துவிட்டு மெதுவாக எழுந்தார். நரேனின் நடவடிக்கை அருந்ததியின் மனதில் ஒரு கலக்கத்தை ஏற்படுத்திருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Free Sitemap Generator
Scroll to Top