தொடர்கதைகள்

உ.க.உறவே 06. காயமும் காதலும்

கதை எப்படி இருக்கு?

0 / 5 Results 0 Votes 0

Your page rank:

Just ஒரு கேள்வி...

இங்கே கதைகளுக்கு கொடுக்கப்படும் featured image மற்றும் பெயர்கள் படிக்கும் போது உங்கள் கற்பனையை influence செய்கிறதா?

View Results

Loading ... Loading ...
  1. உ.க.உறவே 01. எலிக்கும் புலிக்கும் கலவி..
  2. உ.க.உறவே 02. ராத்திரி பொழுது ரகசியம் எதற்கு..
  3. உ.க.உறவே 03. Settling down
  4. உ.க.உறவே 04. முதல் பகல்
  5. உ.க.உறவே 05. டெம்பர் டென்ஷன் ரிலீஸ்
  6. உ.க.உறவே 06. காயமும் காதலும்
  7. உ.க.உறவே 07. சாப்பாடு, தூக்கம் மற்றும் செக்ஸ்
  8. உ.க.உறவே 08. Therapeutic Sex
  9. உ.க.உறவே 09. பிரபாகர் வீட்டுக்கு முதல் முறை
  10. உ.க.உறவே 10. இடமாற்றம்
  11. உ.க.உறவே 11. சுவையானது காஃபியா கஞ்சியா?
  12. உ.க.உறவே 12. மனசெல்லாம் நீயே தான்
  13. உ.க.உறவே 13. மூழ்கும் கப்பலும் ஓடும் எலிகளும்
  14. உ.க.உறவே 14. மூழ்காத ஷிப்பே ஃப்ரெண்ட்ஷிப் தான்
  15. உ.க.உறவே 15. ஈர்ப்புன்னா செக்ஸா?
  16. உ.க.உறவே 16. காதலுக்கு உடம்பில்லை
  17. உ.க.உறவே 17. பூட்டின கதவுக்கு பின்னாடி…
  18. உ.க.உறவே 18. யாரந்த “special friend”?
  19. உ.க.உறவே 19. கோப்பெருஞ்சோழனும், பிசிராந்தையாரும்
  20. உ.க.உறவே 20. முதலாம் சந்திப்பில்..
  21. உ.க.உறவே 21. மீண்டும் லிஃப்ட்டில்
  22. உ.க.உறவே 22. காதல் நாடக மேடை
  23. உ.க.உறவே 23. பிறந்தநாள் பரிசு…
  24. உ.க.உறவே 24. பிரேக்கப் சதித்திட்டம்
  25. உ.க.உறவே 25. Love and love only (நிறைவு பகுதி)

பிரபாகர் ஜெய்யின் வீட்டோடு கலந்து கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆகியிருந்தது. அதே நேரம் ஜெய் பிரபாகரின் எதிரி நாடகமும் வெற்றிகரமாகவே ஓடிக்கொண்டிருந்தது. யாருக்கும் சந்தேகம் வந்ததாக தெரியவில்லை. எனினும் போகும் வரை போகட்டும் என்று இருவரும் ‘சமாதான’ முயற்சிகள் எதையும் மேற்கொள்ளவில்லை. அப்போது தான் அந்த நிகழ்ச்சி நடந்தது.

Random கதைகள்

கீழே உள்ள படத்தை காண “படங்களை காட்டு” பட்டனை உபயோகிக்கவும்.
Blog Image

NSFW Image

திரை படைப்புகள்

ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியம்… வானிலை அறிக்கை எதுவும் முன்னறிவிப்பு கொடுக்காமலேயே வானம் திடீரென்று மூடிக்கொள்ள ஆரம்பித்தது. ஜெய்யின் வீட்டில் அனைவரும் டி.வியிலும், மொபைலிலும் மூழ்கிக்கிடந்ததால் இந்த வானிலை மாற்றத்தை கவனிக்கவில்லை. பிரபாகர் மதிய நேர தூக்கத்தை தவிர்க்க, தலைக்கு நல்லெண்ணெய் தடவிக்கொண்டு குளிக்க கிளம்பினான். அவன் குளியலறைக்குள் போனபிறகு தான் அம்மா மழை தூற ஆரம்பித்திருப்பதை கவனித்தார்.

ஜெய்! மழை தூறுது பாரு.. மாடியிலே காயப்போட்டிருக்குற துணியை கொஞ்சம் சீக்கிரம் எடுத்துடேன்… மாவு அரைச்சுட்டு இருக்குறதால கையெல்லாம் அரிசி மாவா இருக்கு… கொஞ்சம் ஓடுடா..” என்று பதற்றமாக சொன்னார்.

சைட்டிக்க கவர்ச்சி ஆண்கள்

ஜெய் முனகிக்கொண்டே மாடிக்கு ஓடினான். இவர்களது உரையாடல் குளித்துக்கொண்டிருந்த பிரபாகரின் காதிலும் விழுந்தது. “சே! கொஞ்ச நேரம் முன்னாடியோ இல்லை கழித்தோ குளிக்க போயிருந்தால் இவர்களுக்கு உதவியிருக்கலாம்” என்று தன்னை நொந்துக்கொண்டான். திடீரென்று தடாலென்று சத்தம் கேட்க, அம்மா “என்னடா சத்தம்?” என்று குரல் கொடுப்பதும் பிரபாகரின் காதில் விழுந்தது. மேலே இருந்து எதுவும் பதில் வரவில்லை. ஜெய்! என்னான்னு கேட்குறேன் இல்ல?” என்று அம்மா மீண்டும் கேட்க, பிரபாகரின் உள்ளுணர்வு ஏதோ தவறாக நடந்திருக்கிறது என்று எச்சரித்தது. பிரபாகர் அவசரம் அவசரமாக துண்டை இடுப்பில் சுற்றிக்கொண்டு பாத்ரூமிலிருந்து வெளியே ஓடினான். மாடிப்படியில் தாவி தாவி ஏறியபோது ஜெய் மாடிப்படிகளில் சறுக்கி தலைகீழாக விழுந்துகிடந்தான்.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி

Bus journey-ல உங்க பக்கத்துல உட்கார்ந்திருக்குற ஆண் உங்க கிட்டே பேசுற விதத்துல அவர் கூட ஜாலி பண்ண ஆசைப்படுறது நல்லா தெரியுது. ஆனா அவர் first step எடுக்கலை... என்ன பண்ணுவீங்க?

View Results

Loading ... Loading ...

பிரபாகர் ஜெய்யை வாரி அள்ளிக்கொண்டு, படியில் கவனமாக இறங்கினான். மீண்டும் வழுக்கிவிடக்கூடாது என்ற டென்ஷன் ஒருபக்கம், இடுப்பில் சுற்றியுள்ள துண்டு கழன்றுவிடக்கூடாதே என்ற பதற்றம் மறுபக்கம்… பிரபாகர் ஜெய்யை தூக்கிக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தபோது அம்மா பதற்றத்தோடு எதிரே வந்தார்..

“என்னாடா ஆச்சு? ஜெய்…” அவர் குரலில் அழுகை பீறிட ஆரம்பித்தது.

பிரபாகர் ஜெய்யை சோஃபாவில் கவனமாக கிடத்திவிட்டு ஜெய்யின் வலதுகையை மெதுவாக பிடித்தான். ஜெய் வலியில் உச்சஸ்தாயியில் கதறினான். பிரபாகர் ஜெய்யின் கையை கவனமாக அவனது நெஞ்சில் சாய்த்துவைத்துவிட்டு, அம்மாவின் பக்கம் திரும்பி “அத்தை! Fracture-ன்னு நினைக்கிறேன்…பக்கத்து வீட்டில் கார் கேட்குறீங்களா? நான் அதுக்குள்ள டிரஸ் போட்டுட்டு வந்துடுறேன்” என்றான்.

அம்மா வெளியே ஓட்டமும் நடையுமாக இறங்க, பிரபாகர் அவசரகதியில் கைக்கு கிடைத்த உடையை போட்டுக்கொண்டு, ஹாலுக்கு வந்து ஜெய்யின் கன்னத்தில் தடவியவாறே “குட்டி! கொஞ்சம் பொறுத்துக்கோடா… இப்போ ஹாஸ்பிடல் போயிடலாம்” என்று சொல்லிக்கொண்டு அவனை அலாக்காக தூக்கினான். அவன் பக்கத்து வீட்டுக்கு போகவும், அம்மா கார் சாவியோடு வரவும் சரியாக இருந்தது.

ஜெய்க்கு வலதுகையில் மாவுக்கட்டு போட்டு கொஞ்சம் ஓய்வுக்கு பிறகு வீட்டுக்கு திரும்ப இரவு எட்டு மணி ஆகிவிட்டது. ஜெய்க்கு வலி தெரியாமல் இருக்க sedatives கொடுத்திருந்ததால் மயக்கத்தில் இருந்தான். அம்மா “என்ன இந்த நேரத்துல இப்படி நடக்குது?” என்று புலம்பிக்கொண்டே உள்ளே சமையலறைக்கு போனார். “அத்தை! நீங்க ஜெய் பக்கத்துல உட்காருங்க, நான் போய் ராத்திரி சாப்பாடு வாங்கிட்டு வர்றேன்” என்றான்.

இரவு சாப்பாடு வாங்கி கொண்டுவந்துவிட்டு, தன்னுடைய மொபைலை எடுத்து தன்னுடைய மேனேஜருக்கு அழைத்தான் “சந்தீப்! ஒரு Family emergency.. என்னோட கஸினுக்கு ஆக்ஸிடென்ட் ஆயிடுச்சு… மாமா வீட்டுல இல்லை.. அதனால நான் தான் கூட இருந்து பார்த்துக்கனும்… எனக்கு ஒரு வாரம் Work from Home வேணும்”.

எதிர்பக்கம் சாதகமான பதில் வரவில்லை என்பது பிரபாகரின் முகபாவத்தில் தெரிந்தது.

“சந்தீப்! இந்த சூழ்நிலையில் நான் ஆஃபீஸ்ல இருந்து வேலை செய்யுற நிலைமையிலே இல்லை. நாளைக்கு காலையிலே 9 மணிக்கு நம்ம ODC-ல இருப்பேன். நீ Project laptop குடுத்தின்னா நான் வீட்டுக்கு வந்துட்டு ஒரு வாரம் WFH பண்றேன். இல்லைன்னா நீ என்னை புராஜெக்ட இருந்து தூக்குவியோ இல்லை HR-கிட்டே job abandonment-ன்னு சொல்லி என்னை terminate பண்ணுவியோ தெரியாது… அது உன் இஷ்டம். ஆனா நான் என்னோட கஸின் பக்கத்துல இருக்கவேண்டியது தான் எனக்கு priority” என்று பிரபாகர் உரத்த குரலில் எச்சரித்தான்.

“பிரபா! நான் பாத்துக்குறேன்.. மாமா 2-3 நாள்ல வந்துடுவாரு… அதுவரைக்கும் சமாளிச்சுக்கலாம். ஏன் இப்போ ஆஃபீஸ்ல பகைச்சுக்குறே?” அம்மா பதறினார்.

“இல்லைங்க அத்தை! நான் இப்போ Critical resource… என்னை தூக்கிட்டா புராஜெக்ட் தள்ளாடிடும்… அது தெரிஞ்சு தான் நான் demand பண்றேன்.. கவலைபடாதீங்க” என்று அவர் தோளில் கைபோட்டு ஆறுதல் சொன்னான்.

அடுத்த நாள் பிரபாகர் ஜெய்யின் வண்டியை எடுத்துக்கொண்டு தன்னுடைய ஆஃபீஸுக்கு சென்று புராஜெக்ட் லேப்டாப்பை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தபோது காலை பத்து மணி ஆகியிருந்தது. வீட்டுக்குள் நுழைந்தபோது அம்மா ஜெய்யின் பக்கத்தில் உட்கார்ந்துக்கொண்டு, அவன் கன்னத்தை தட்டி “ஜெய்! எழுந்துருடா… சாப்பிட்டுட்டு தூங்குடா” என்று சொல்லிக்கொண்டிருந்தார்.

“என்னங்க அத்தை?” என்று கேட்டபடி அறைக்குள் நுழைந்தான் பிரபாகர்.

“நேத்து சாயங்காலத்துல இருந்து தூங்கிட்டே இருக்கான். இன்னும் கண்ணு முழிக்கவே இல்லை… சாப்பிட்டுட்டு தூங்கட்டுமேன்னு எழுப்பிட்டே இருக்கேன் ஆனா அசையவே மாட்டேங்குறான்..” என்று கிட்டத்த்டட்ட அழாத குறையாக சொன்னார்.

பிரபாகர் லேப்டாப்பை கட்டில் மேலே வைத்துவிட்டு, ஜெய்யின் அருகில் உட்கார்ந்து அவன் தலையை மெதுவாக கோதியபடி “ஜெய்ப்பா… எழுந்துக்கலாமா?” என்று கேட்டான்.

“ம்ம்…” குரல் கொடுத்த ஜெய்யின் உடம்பில் அசைவு தெரிந்தது.

காலையிலிருந்து கரடியாக தான் கத்திக்கொண்டிருந்தாலும் தன்னுடைய குரலுக்கு செவிசாய்க்காது, இப்போது பிரபாகர் அழைத்ததும் அவனுக்கு பதில் சொல்கிறானே என்று அம்மாவுக்கு பயங்கர ஆச்சரியம்.

பிரபாகர் ஜெய்யின் நெற்றியை தடவிக்கொடுத்துட்டு அவன் கன்னத்தை தட்ட, ஜெய் கண் விழித்தான்.

“இங்கே பாரு… அத்தை ரொம்ப நேரமா உன்னை எழுப்ப முயற்சி பண்ணிட்டு இருக்காங்க… நீ எழுந்து சாப்பிட்டுட்டேன்னா அவங்க மத்த வேலை பார்க்க போவாங்க இல்லை?”

“ம்ம்… எனக்கு வேண்டாம்.. வாயெல்லாம் கசக்குது”

“மருந்து எஃபெக்ட்… அப்படி தான் இருக்கும். பிரஷ் பண்ணிக்கோ… பால் குடிச்சிட்டு அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சு சாப்பிடலாம்”

“சரிடா!”

பிரபாகர் அம்மாவின் பக்கம் திரும்பி, “அத்தை! நீங்க அவனுக்கு ஹார்லிக்ஸ் கலந்து எடுத்து வாங்க… நான் அதுக்குள்ள அவனுக்கு பிரஷ் பண்ணிவிடறேன்” என்று சொல்லிவிட்டு அவருடைய பதிலுக்கு எதிர்பாராமல் பாத்ரூமுக்கு சென்றான்.

அம்மா ஹார்லிக்ஸ் கலந்து எடுத்துக்கொண்டு வரும்போது ஜெய் பிரபாகர் கையில் இருந்த Mug-கில் வாய் கொப்பளித்துக்கொண்டிருந்தான். அவன் பிரஷ் செய்ததன் அடையாளமாக பேஸ்ட் நுரையோடு பிரஷ் ஜெய்யின் கையில் இருந்தது. பிரபாகர் அதை வாங்கி Mug-கினுள் போட்டு அவற்றை டேபிளில் வைத்துவிட்டு மெல்லிய ஈர துண்டால் ஜெய்யின் முகத்தை துடைத்துவிட்டான். அம்மா ஹார்லிக்ஸோடு அங்கே நடப்பவற்றை ஆச்சரியமாக பார்த்துக்கொண்டிருக்க, பிரபாகர் அவர் கையிலிருந்து டம்ளரை வாங்கி ஜெய்க்கு ஊட்டிவிட்டான். ஜெய் சமர்த்தாக முரண்டு பிடிக்காமல் ஒரே மூச்சில் பால் டம்ளரை காலி செய்தான். அம்மா ஜெய் குடித்த டம்ளரை வாங்கிக்கொண்டு வெளியே போக, பிரபாகரும் ஹாலுக்கு போக எழுந்தான். ஓரடி தண்டும்போது அவனது இடது கை இழுக்கப்பட்டது.

ஜெய் அவன் கையை பிடித்துக்கொண்டு “என்னை விட்டுட்டு போறியா?” என்று கேட்டான். ஏற்கனவே களைப்பில் அவன் முகம் வெகுவாக வாடியிருந்தது. தூக்கமும், உடல் வலியும் அவனது குரலை இன்னும் பலவீனமாக்கி இருந்தது. அவன் அப்படி கேட்டது பிரபாகரின் நெஞ்சத்தை சுருக்கென்று தைத்தது.

பிரபாகர் திரும்பி வந்து ஜெய்யின் தோளில் தட்டிக்கொடுத்து “இல்லைடா.. நான் போய் ஈஸிடேபிள் எடுத்துட்டு வந்துடுறேன். உன் பக்கத்துல உட்கார்ந்து தான் வேலை பார்க்கப்போறேன்… இந்த வாரம் நான் Work from home வாங்கியிருக்கேன்… உன் கூடவே தான் இருக்கப்போறேன்” என்று சொல்லிவிட்டு ஜெய்யின் முகமெங்கும் முத்தமிட்டான். கடைசியாக ஜெய்யின் உதட்டில் சின்னதாக ஒரு கடி கடித்துவிட்டு மெல்லிய புன்னகையுடன் ஹாலுக்கு வந்தான்.

கீழே உள்ள படத்தை காண “படங்களை காட்டு” பட்டனை உபயோகிக்கவும்.
Blog Image

NSFW Image

அடுத்த 2 நாட்கள் இருவருக்குமே கடினமானதாக இருந்தது. பிரபாகருக்கு development CR வேலைகள் வந்து குவிந்ததால் அவனுக்கு ஆஃபீஸ் வேலைகளை பார்க்கவே நேரம் சரியாக இருந்தது. ஜெய் முழித்திருக்கும்போது அவனுக்கு பணிவிடைகள் செய்துவிட்டு, அவனோடு சிரித்து கலகலப்பாக்கிவிட்டு, அவன் தூங்கிய பிறகு ஆஃபீஸ் வேலையில் மூழ்கினான்.

“பிரபா! உடம்பெல்லாம் கசகசன்னு இருக்கு… ரெண்டு நாளா சரியா டாய்லெட் போகவே இல்லை… எல்லாம் சேர்ந்து ஒரு மாதிரி இருக்குடா..”

“சரி! ஸ்டூல்ஸ் போறியா? அதுக்கப்புறம் நான் சுடு தண்ணி வச்சு உனக்கு உடம்பு துடைச்சுவிடுறேன்…”

“இல்லை… எனக்கு குளிக்கனும்”

“சரி! கொஞ்ச நேரம் குடு… உன்னை பாத்ரூம்ல வச்சு குளிப்பாட்டுறேன்”

பிரபாகர் ஜெய்யை பாத்ரூமுக்கு அழைத்துச்சென்று அவனது உடைகளை அவிழ்த்துவிட்டு, ஜெய்யை பொறுமையாக டாய்லெட் சீட்டில் உட்காரவைத்துவிட்டு வெளியே வந்தான். வார்டுரோபை திறந்து ஜெய்க்கு துவைத்த உள்ளாடைகளும், லுங்கியும் எடுத்துக்கொண்டு மீண்டும் குளியலறைக்கு சென்று, ஜெய்யை எழுப்பி ஷவரின் கீழே நிறக்வைத்து தண்ணீர் திறந்துவிட்டான். ஜெய்யின் மலத்துவாரத்தை சுத்தம் செய்துவிட்டு, கையில் போடப்பட்ட மாவு கட்டு நனையாமல் அவன் மீது தண்ணீர் படும்படி நிறுத்தினான். நிறைய தடவை ஜெய்யின் சட்டையில் மேல் பட்டன்கள் பிரிந்து ரோமம் நிறைந்த மார்பு தெரிந்தாலோ, மடித்து கட்டிய லுங்கியில் ஜட்டி தெரிந்தாலோ பிரபாகருக்கு அவ்வளவு கிளுகிளுப்பாக இருக்கும். எத்தனையோ முறை இந்த உடம்பை நிர்வாணமாக அனுபவித்திருந்தும் இன்று ஜெய்யை பகல் வெளிச்சத்தில் நிர்வாணமாக்கி குளிப்பாட்டும்போது அங்கே காமத்துக்கு பதிலாக வாஞ்சை தான் தோன்றியது. பிரபாகர் ஜெய்யின் உடம்பெங்கும் சோப் நுரைக்க நுரைக்க தடவிவிட்டு, நல்ல சூடான தண்ணீரை ஊற்றியபோது அது ஜெய்யின் உடம்பிலிருந்த அழுக்கோடு சேர்த்து சோர்வையும் களைந்தது.

கீழே உள்ள படத்தை காண “படங்களை காட்டு” பட்டனை உபயோகிக்கவும்.
Blog Image

NSFW Image

“குட்டி! வெளிய போகலாமா? மாவு கட்டுக்குள்ள ஈரம் போயிடுச்சுன்னா இன்னும் பெரிய பிரச்சனையாயிடும்.”

“ம்ம்.. ” பிரபாகர் பெரிய தூவாலை துண்டை எடுத்து ஜெய்யின் உடம்பெங்கும் தண்ணீரை ஒற்றி எடுத்தான். பின்னர் அவன் கால்களிடையே உட்கார்ந்து ஜட்டி மாட்டிவிட்டான்.

ஜெய்யை வெளியே அழைத்துவந்து சோஃபாவில் சரித்து உட்காரவைத்து டி.வி போட்டுவிட்டு, ரிமோட்டை ஜெய்யின் கையில் கொடுத்துவிட்டு பாத்ரூமுக்கு சென்று ஜெய்யின் கழற்றிய உடைகளை எடுத்துக்கொண்டு போய் லாண்டரி பாஸ்கெட்டில் போட்டான்.

திரும்பியபோது எதிரில் அம்மா நின்றிருந்தார். “பிரபா! நீ குளிச்சியா இல்லை அவன் குளிச்சானா?”

“ஏங்க அத்தை?”

“இல்லை… குளிச்சவன் துணி அப்படியே காஞ்சு இருக்கு… குளிப்பாடுனவன் துணி எல்லாம் நனைஞ்சிருக்கு… அவன் முட்டக்கட்டையாவா குளிச்சான்?”

பிரபாகர் வெட்கத்தோடு “அத்தை! என்ன தான் நீங்க பெத்த பையன்னாலும் அவனும் வயசுக்கு வந்த ஆம்பளை தானே. உங்க முன்னாடி டிரஸ் இல்லாம நிக்க அவனுக்கு சங்கடமா இருக்கும். ஆனா நானும் அவனும் கிட்டத்தட்ட ஒரே வயசு. அதனால் என் கிட்டே அவனுக்கு வெட்கமோ சங்கடமோ இருக்காது… அதனால தான் நான் Work from home போட்டுட்டு வீட்டுல இருக்கேன்” என்றான்.

அத்தை அவனை வழித்து சுற்றிப்போட்டு தலையில் போட்டுக்கொண்டார். “செல்லம்… இந்த சமயத்துல உன்னோட உதவி எவ்வளவு பெருசு தெரியுமா? அது சரி.. நீங்க ரெண்டு பேரும் பேசிக்காம இருக்குறதால இதை செய்யுறதால உனக்கு சங்கடம் இல்லையே?”

“அத்தை… இதுல உதவி எங்கே இருக்கு… நம்ம வீட்டு மனுஷங்களுக்கு செய்யறது தான் உதவியா? அப்புறம்.. அவன் பேசுவான்னு நான் காத்திட்டு இருந்தேன்… ஒருவேளை நான் வந்து பேசனும்னு அவன் காத்திட்டு இருக்கானோ என்னவோ… இந்த சமயத்தில ஈகோ பார்க்க முடியாதே… பேசினேன்.. அவனும் பேசுனான்… முடிஞ்சுபோச்சு” என்று தோளை குலுக்கினான்.

அந்த வாரம் முழுவதும் பிரபாகர் ஒவ்வொரு கணமும் ஜெய்க்கு அவசியங்களை பார்த்து பார்த்து கவனமாக செய்தான். வீட்டில் இறுக்கம் தளர்ந்து மெதுவாக இயல்பு நிலை எட்டிப்பார்க்க தொடங்கியது.

கதை எப்படி இருக்கு?

0 / 5 Results 0 Votes 0

Your page rank:

Picture of the day


உ.க.உறவே 06. காயமும் காதலும்
மேலும் காட்ட

இதோ.. நீங்க தொடர்கதை படிக்கிறதால கேட்குறேன்.

இதுவரை வந்த தொடர்கதைகளில் உங்களுக்கு பிடித்த கதை / கதைகள்?

தொடர்கதை பிடித்ததற்கு காரணம்? (பல காரணங்கள் தேர்வு செய்யலாம்)

தொடர்கதைகள் படிப்பதில் எரிச்சலான விஷயம்?

அதிகபட்சம் எத்தனை அத்தியாயங்கள் இருக்கலாம்?


அனைத்து பதிவுகளையும் ஒரே table-ல் காண, இங்கே click செய்யவும்.

காதல்ரசிகன்

காதலுக்கும் காமத்துக்கும் பால் (Gender) தேவையில்லை என்று கருதும் கூட்டத்தில் ஒருத்தன். அழகு எங்கிருந்தாலும், யாரிடமிருந்தாலும் ரசிக்கும் கலாரசிகன். அன்பு எங்கிருந்து கிடைத்தாலும் பால் நோக்காமல் கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் கொண்டவன். கட்டிலில் கட்டியவளோடு புணர்ந்தாலும் நான் ஓரினச்சேர்கையாளனும் கூட என்று சொல்லிக்கொள்வதில் வெட்கமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Free Sitemap Generator

Adblock Detected

Please disable the adblocker for this site (not only the page) to render the in-line related posts blocks effectively and reload the page.