தொடர்கதைகள்

உ.க.உறவே 08. Therapeutic Sex

கதை எப்படி இருக்கு?

0 / 5 Results 3 Votes 1

Your page rank:

Just ஒரு கேள்வி...

கல்யாணம் ஆன மற்றும் boyfriend இருக்கும் / உறவில் இருக்கும் Gay ஆண்களே - நீங்கள் உங்கள் partner தவிர மற்றொருவருடன் casual sex- ல் ஈடுபடும்போது குற்ற உணர்ச்சி தோன்றுமா?

View Results

Loading ... Loading ...
  1. உ.க.உறவே 01. எலிக்கும் புலிக்கும் கலவி..
  2. உ.க.உறவே 02. ராத்திரி பொழுது ரகசியம் எதற்கு..
  3. உ.க.உறவே 03. Settling down
  4. உ.க.உறவே 04. முதல் பகல்
  5. உ.க.உறவே 05. டெம்பர் டென்ஷன் ரிலீஸ்
  6. உ.க.உறவே 06. காயமும் காதலும்
  7. உ.க.உறவே 07. சாப்பாடு, தூக்கம் மற்றும் செக்ஸ்
  8. உ.க.உறவே 08. Therapeutic Sex
  9. உ.க.உறவே 09. பிரபாகர் வீட்டுக்கு முதல் முறை
  10. உ.க.உறவே 10. இடமாற்றம்
  11. உ.க.உறவே 11. சுவையானது காஃபியா கஞ்சியா?
  12. உ.க.உறவே 12. மனசெல்லாம் நீயே தான்
  13. உ.க.உறவே 13. மூழ்கும் கப்பலும் ஓடும் எலிகளும்
  14. உ.க.உறவே 14. மூழ்காத ஷிப்பே ஃப்ரெண்ட்ஷிப் தான்
  15. உ.க.உறவே 15. ஈர்ப்புன்னா செக்ஸா?
  16. உ.க.உறவே 16. காதலுக்கு உடம்பில்லை
  17. உ.க.உறவே 17. பூட்டின கதவுக்கு பின்னாடி…
  18. உ.க.உறவே 18. யாரந்த “special friend”?
  19. உ.க.உறவே 19. கோப்பெருஞ்சோழனும், பிசிராந்தையாரும்
  20. உ.க.உறவே 20. முதலாம் சந்திப்பில்..
  21. உ.க.உறவே 21. மீண்டும் லிஃப்ட்டில்
  22. உ.க.உறவே 22. காதல் நாடக மேடை
  23. உ.க.உறவே 23. பிறந்தநாள் பரிசு…
  24. உ.க.உறவே 24. பிரேக்கப் சதித்திட்டம்
  25. உ.க.உறவே 25. Love and love only (நிறைவு பகுதி)

ஜெய்க்கு கட்டுபிரித்து வீட்டுக்கு அழைத்து வந்தபோது மாலை ஆகிவிட்டது. இந்த ஏழு வாரங்களில் ஜெய்யை குழந்தை போல கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்டது அவன் பெற்றோர்கள் இல்லை… பிரபாகர் தான். ஆரம்பத்தில் அம்மாவும் அப்பாவும் ஜெய்க்கு பணிவிடை செய்ய முன்வந்தபோதெல்லாம் பிரபாகர் அவர்களிடம் இருந்து அந்த வேலைகளை இழுத்துப்போட்டுக்கொண்டு செய்ததால் காலப்போக்கில் அம்மாவும் அப்பாவும் பிரபாகரே ஜெய்யை கவனித்துக்கொள்ளட்டும் என்று விட்டுவிட்டார்கள். ஜெய்க்கும் பிரபாகருக்கும் இடையே ஏற்பட்ட உறவு பலகட்டங்களை தாண்டி உயிரோடு உயிராக கலந்திருந்தது. வெறும் உடற்கவர்ச்சி தான் இவர்களின் உறவின் அடிப்படை என்றால் எந்நேரத்துக்கோ அவர்கள் சலிப்படைந்திருக்கவேண்டும். ஆனால் ஒவ்வொரு நிமிடமும் இவர்களது உறவு பலப்பட்டுக்கொண்டே வந்தது. இன்னும் இரண்டு வாரங்களில் ஜெய் வேலைக்கு மீண்டும் செல்லலாம் என்று டாக்டர் சொல்லிவிட்டதால், இந்த வாரம் கிராமத்துக்கு சென்று தங்கள் குலதெய்வத்துக்கு படையல் வைத்துவிட்டு, இரு குடும்பங்களும் குவாலிட்டி டைம் செலவழிக்க முடிவு செய்திருந்தார்கள். பிர்பாகர் ஜெய்க்கு பிஸியோதெரபி உடற்பயிற்சிகளை செய்வதில் உதவிக்கொண்டிருந்தான்.

Random கதைகள்

கீழே உள்ள படத்தை காண “படங்களை காட்டு” பட்டனை உபயோகிக்கவும்.
Blog Image

NSFW Image

திரை படைப்புகள்

ஒரு வியாழக்கிழமை இரவு ஜெய், பிரபாகர் மற்றும் அம்மா அப்பா அனைவரும் கிராமத்துக்கு கிளம்பினார்கள்.

“மாமா! நான் கார் ஓட்டுறேன். நீங்க ரெஸ்ட் எடுத்துக்கிட்டு வாங்க…” பிரபாகர் உரிமையோடு மாமாவின் கையிலிருந்த கார் சாவியை வாங்கினான்.

சைட்டிக்க கவர்ச்சி ஆண்கள்

“இல்லை பிரபா! எனக்கு இது பழக்கம் தான். நீயும் ஜெய்யும் பின்னாடி உட்கார்ந்துக்கோங்க… நானும் அத்தையும் முன்னாடி உட்கார்ந்துக்குறோம். நான் ஓட்டுறேன்..”

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி

உங்க sex partner கூட nudes - அதாங்க... அம்மண குண்டி படம் share பண்ணிக்குவீங்களா?

View Results

Loading ... Loading ...

“மாமா! நான் பொழுதுக்கும் வீட்டுல சும்மா தானே இருந்தேன். நீங்க ஆஃபீஸ்ல இருந்து சாயங்காலம் தான் வந்தீங்க.. நான் ஓட்டுறேன். நீங்க பின்னாடி உட்கார்ந்து தூங்கிட்டே வாங்க… நான் நல்லா வண்டி ஓட்டுவேன்”

“ஆமாம்பா.. நானும் முன்னாடி பிரபா கூட உட்கார்ந்துக்கிட்டு ரெண்டு பேரும் ஏதாச்சும் பேசிக்கிட்டே வருவோம்..” – ஜெய்.

“நீங்க ரெண்டு பேரும் பேசாமலேயே இருந்திருக்கலாம்… பேச ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சீங்க.. எங்க காதுல இருந்து ரத்தம் வர்ற அளவுக்கு நொய்யு நொய்யுன்னு பேசிக்கிட்டே இருக்கீங்க… ” செல்லமாக கோபித்துக்கொண்டார் அப்பா.

வண்டி நகரத்து எல்லையை தாண்டும்போதெல்லாம் பின் இருக்கைகளில் அப்பாவும் அம்மாவும் மெல்லிய குறட்டையோடு அசதியில் தூங்க ஆரம்பித்திருந்தார்கள். ஜெய் பின் சீட்டில் திரும்பி பார்த்துவிட்டு “பாவம்… ரெண்டு பேரும் இப்படி தூங்குறாங்க… அப்பா வண்டி ஓட்ட ஆரம்பிச்சிருந்தார்னா தளர்ந்துப்போயிருப்பார்” என்று சொல்லிக்கொண்டே கியர் மீது இருந்த பிரபாகரின் கையை பிடித்துக்கொண்டான். அப்பாவும் அம்மாவும் நன்றாக தூங்குவதை உறுதிசெய்துக்கொண்டு பிரபாகரின் கையை விரல்களோடு நளினமாக எடுத்து அதன் பின்னங்கையில் தன் முத்தத்தை பதித்தான். பின்னர் அவன் கையை இறுக்க கோர்த்துக்கொண்டான்.

கீழே உள்ள படத்தை காண “படங்களை காட்டு” பட்டனை உபயோகிக்கவும்.Blog Image

அது இன்னும் நகரத்தின் தாக்கம் பெரிதாக இல்லாத அழகான கிராமம்.. பிரபாகரின் அப்பா ஏற்பாடு செய்திருந்த ஆள் அவர்களது பூர்வீக வீட்டை சுத்தமாக துடைத்து, 2-3 நாட்களுக்கு தேவையான சமையல் சாமான்களை வாங்கி போட்டிருந்தார். காலையில் இவர்கள் சென்று சேர்ந்ததும் புதிதாக கறந்த பால் கொண்டுவந்து தந்தார். அனைவரும் குளித்துவிட்டு, காஃபி கலந்து குடித்துவிட்டு கிராமத்தில் இருந்த பழங்காலத்து கோவிலுக்கு காலை பூஜைக்கு சென்றார்கள். மூலஸ்தானத்தில் சாமி சிலைக்கு பூசாரி தீபாராதனை காட்ட, ஜெய்யின் குடும்பமும், பிரபாகரின் குடும்பமும் பயபக்தியோடு சாமி கும்பிட்டார்கள். பூசாரி அனைவருக்கும் விபூதி பிரசாதம் கொடுக்க, பிரபாகர் திருநீறை எடுத்து ஜெய்யின் நெற்றியில் வைத்தான். பின்னர் கூடுதல் திருநீற்றை மெலிதாக ஊதி விலக்கிவிட்டு, அவன் புருவத்தின் மேலே தன் கையை வைத்து அவன் கண்ணில் அவை விழாமல் பார்த்துக்கொண்டான். ஜெய்க்கு நெகிழ்ச்சியாக இருந்தது.

பின்னர் இரு குடும்பங்களும் ஊருக்கு வெளியே தங்களுடைய விளை நிலத்துக்கும் ஆற்றுக்கும் நடுவே இருக்கும் குலதெய்வம் இருக்கும் கோவிலுக்கு சென்றார்கள். அது சிறிய கோவிலும், கோவிலை சுற்றி நிறைய குதிரை பொம்மைகளும், பெரிய ஐயனார் சிலைகளோடும், பெரிய காம்பவுண்ட் சுவர் கொண்டு வரையறுக்கப்பட்டிருந்தது. மூலையில் பெரிய ஆலமரம் நிறைய விழுதுகளோடும், அதன் அருகே ஆற்றுக்கு இறங்கி செல்ல படிகளோடும் அழகாக இருந்தது.

“இதென்னம்மா சினிமாவுல பஞ்சாயத்து சீன்ல வர்ற மாதிரி இருக்கு… இந்த ஊர்ல இங்கே தான் பஞ்சாயத்து பண்ணுவாங்களா?” – ஜெய் தன் அம்மாவிடம் கேட்டான்.

செல்வி “இல்லை ஜெய்! இப்போ இங்கேயும் மக்கள் கோர்ட்டு, போலீஸ் ஸ்டேஷன்னு போக ஆரம்பிச்சுட்டாங்க… ஆனா இந்த ஆலமரமும் இந்த ஆறும் எங்களுக்கு எப்பவும் சந்தோஷமான விஷயம்.. அண்ணன் ஏதாச்சும் சொல்லியிருக்காரா இதை பத்தி?”

இல்லையே என்பது போல தோளை சுருக்கி உதட்டை பிதுக்கினான் ஜெய்.

“நீங்க சின்ன பிள்ளைங்களா இருக்குறப்போ, உங்க தாத்தா பாட்டிங்க இருந்த வரைக்கும் வருஷாவருஷம் நாம குடும்பத்தோட இங்கே வந்து படையல் போடுவோம். காலையிலேயே மாட்டுவண்டி கட்டிக்கிட்டு வந்துடுவோம். அந்த ஆத்தங்கரையிலே வண்டியெல்லாம் நிறுத்திட்டு, அங்கே பக்கத்துலேயே ஆடு/கோழி வெட்டி ஆத்து தண்ணியிலேயே சுத்தம் பண்ணிட்டு, அப்புறம் இங்கே சமைக்கிற இடத்துக்கு கொண்டு வந்து தருவாங்க. நாங்க பொம்பளைங்க எல்லாம் சமைப்போம். ஆம்பளைங்க எல்லாம் அந்த ஆலமரத்தடியிலே சீட்டு விளையாடுவாங்க இல்லைன்னா அரட்டை கச்சேரி நடக்கும். சாப்பிட்டுட்டு ஒரு குட்டி தூக்கம் போட்டுட்டு சாயங்காலம் போல கிளம்பி போவோம். மொத்த குடும்பமும் ஒன்னா ஒரே இடத்துல சேர்ந்து சாப்பிட்டு அரட்டை அடிச்சு… அவ்வளவு சந்தோஷமா இருக்கும். அடுத்த தலைமுறை தலையெடுத்தப்போ எல்லாரும் வேலை வேலைன்னு பிரிஞ்சு, பிஸியா ஓடிட்டு இருந்ததால இங்க ஒன்னா கூட முடியாம போடச்சு” – செல்வி அத்தை ஆதங்கத்தோடு முடித்தார்.

ஜெய் “அத்தை! கவலைப்படாதீங்க… இனிமே நாம அடிக்கடி இந்த மாதிரி ஒன்னா சேரலாம். பழைய மாதிரி ஜாலியா என்ஜாய் பண்ணலாம்” என்று அத்தையின் தோளில் கைபோட்டு ஆறுதல் சொன்னான்.

நகரத்து பரபரப்பில் தாங்கள் இழப்பது என்ன என்று அப்போது தான் ஜெய்க்கு புரிந்தது. என்ன தான் வெளிநாட்டுக்கு ஆன்சைட் போய் சுற்றினாலும், தங்கள் கிராமத்தில் உள்ள அமைதியும், நிம்மதியும் தரும் சுகமே அலாதி தான் என்று ஜெய் உணர்ந்தான்.

ஆற்றில் பெரிதாக தண்ணீர் இல்லை… இவர்களது கணுக்காலுக்கு கொஞ்ச மேலே வரைக்கும் நனைக்கும் அளவுக்கு ஒரு சிறிய ஓடை போல ஓடிக்கொண்டிருந்தது. ஜெய்யும் பிரபாகரும் அதில் கொஞ்ச நேரம் நடந்துக்கொண்டிருந்தார்கள்.

கீழே உள்ள படத்தை காண “படங்களை காட்டு” பட்டனை உபயோகிக்கவும்.Blog Image

இதற்கிடையில் ஆலமரத்தடியில் பெரியவர்களுக்கிடையே உரையாடல் ஓடிக்கொண்டிருந்தது.

“இந்நேரத்துக்கு நம்ம சித்தர் நிலையம் திறந்திருக்குமாங்க பன்னீர்?” – அப்பா கேட்டார்.

“இன்னைக்கு வெள்ளிக்கிழமை தானே… பெரிய சித்தரே இருந்தாலும் இருப்பாரு.. போய் பார்க்கலாமே… என்ன விஷயம் மச்சான்?”

“இந்த பசங்களும் வளர்ந்துட்டாங்க… கால் கட்டு போடலாமான்னு யோசிச்சிட்டு இருக்கேன்.. எப்போ ஆரம்பிக்கலாம்னு கேட்கறதுக்கு தான்”

“ஜெய்யோட ஜாதகம் இருக்கா? பிரபாகரோட ஜாதகம் அங்கே சித்தர் நிலையத்துலேயே ஒரு காபி இருக்கும்… அடிக்கடி பாக்குறது வழக்கம்”

“என் கிட்டே ஸ்கான் பண்ணின காபி இருக்குங்க பன்னீர்… கட்டம் வரைஞ்சு தந்துடலாம்.. போதாதா?”

“பிறந்த நேரமும், கட்டமும் குடுத்தா எல்லாம் அவங்களே பாத்துக்குவாங்க..”

“டேய் பசங்களா! கிளம்பலாமா?” தூரத்தில் ஆற்று தண்ணீரில் கைகள் கோர்த்துக்கொண்டு நடைபழகிக்கொண்டிருந்த ஜெய்ய்யையும் பிரபாகரையும் நோக்கி அப்பா குரல் கொடுத்தார். பன்னீர் மாமா பக்கம் திரும்பி “அநியாயத்துக்கு ஒத்துமையா இருக்காங்க….” என்று சிரித்தார். அவர் சொன்னதில் பெருமிதம் தொனித்தது.

சித்தர் வயதானாலும் கண்ணாடி போட வேண்டிய அவசியம் இல்லாத கண்களோடு இரு ஜாதக கட்டங்களையும் பார்த்தவாறே சொன்னார் – “ரெண்டு ஜாதகமும் அவ்வளவு பொருத்தமா இருக்கு… கல்யாணம் பண்ணி வைச்சா சாவுல கூட பிரிக்கமுடியாத அளவுக்கு ஒத்துமையா இருப்பாங்க” என்று சிரித்தார்.

“எங்களுக்கு அந்த குடுப்பினை இல்லையே சாமி! ரெண்டுத்துல எந்த ஒன்னாச்சும் பொட்டப்புள்ளையா இருந்திருந்தா ஜாதகம் கூட பார்க்காம கட்டி வச்சிருப்போம்… அதுக்கு தான் வழியில்லாம போச்சே.. இவங்களுக்கு கல்யாணப்பேச்சை ஆரம்பிக்கலாம்னு நினைக்கிறோம். எப்போ காலம் கைகூடும்”

பிரபாகரும் ஜெய்யும் தாங்கள் வந்த காரை நல்ல இடமாக பார்த்து நிறுத்திவிட்டு சித்தர் நிலையத்தின் உள்ளே நுழைந்தார்கள்.

“ஒரு 1 வருஷத்துக்கு எந்த முக்கியமான முடிவும் எடுக்காதீங்க… அது வரைக்கும் ரெண்டு பசங்களோட ஜாதகத்துலயும் அவங்களை உலுக்கிப்போடுற அளவுக்கு சில நிகழ்வுகள் இருக்கும். ஜெய்க்கு சமீபத்துல கை உடைஞ்சதும் அதனால தான்.. ஆனா பயப்படவேண்டாம்.. எல்லாம் வருஷ கடைசியிலே சுபமா முடியும்… பிரபாகருக்கு இந்த சிக்கலோட, இடமாற்றத்துக்கான வாய்ப்புகள் நிறைய இருக்கு. இந்த கஷ்டமான காலகட்டத்துல அவங்களை தனியா விட்டுடாதீங்க… எப்பவும் உங்க கண் பார்வையிலேயே வச்சுக்கோங்க”

பிரபாகரின் முகம் சுருங்கிப்போனது எல்லாரும் கவனிக்கும்படியாக இருந்தது.

இரவு சாப்பாடு முடிந்து அனைவரும் திண்னையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். தெருவுக்கும் வீட்டு திண்ணைக்கும் இடையே ஒரு பெரிய தோட்டம் இருந்தது. பராமரிக்க ஆளில்லாததால் புல் மண்டியிருந்தது. பராமரிப்பு தேவைப்படாததால் பெரிய வேப்பமரம் நல்ல பசுமையாக தழைத்தோங்கியிருந்தது. வீட்டின் முன்பு நெற்றி திலகம் போல ஒரு 80 வாட்ஸ் பல்பு மின்னிக்கொண்டிருந்தது. இரண்டு கயிற்று கட்டில்கள் புல்வெளியில் போடப்பட்டு அதில் மெத்தை தலையாணை இருந்தது.

பெரியவர்கள் எல்லாம் படுக்கப்போய்விட, ஜெய்யும் பிரபாகரும் வாசலில் ஆளுக்கொரு கயிற்றுக்கட்டிலில் தூங்க ஆயத்தமானார்கள்.

பிரபாகர் அமைதியாக மல்லாக்க படுத்து வானத்தை பார்த்துக்கொண்டிருந்தான். ஜெய் அவன் கட்டிலில் வந்து உட்கார்ந்து மென்மையாக பிரபாகரின் மார்பில் கைவைத்தான். பிரபாகர் ஜெய்யை பார்த்து மெலிதாக புன்னகைத்தான்.

“ஏன் பிரபா அமைதியா இருக்கே?”

“ஒன்னும் இல்லைடா”

“இல்லை… என்னவோ இருக்கு… அந்த சித்தர் நிலையத்துக்கு போனதுல இருந்து நீ ஒரு மாதிரியா இருக்கே.. அந்த சித்தர் சொன்னதுல பயந்துபோயிட்டியா?”

“ம்ம்… அவர் எனக்கு சொன்னது எல்லாமே இது வரைக்கும் சரியா நடந்திருக்கு. அதனால தான் மனசு சங்கடமா இருக்கு… தூங்கி எழுந்தா மனசு சரியாயிடும்..”

ஜெய் பிரபாகரின் கன்னத்தை தடவியவாறு சொன்னான் “நீ இதெல்லாம் நம்புறியா? சரி! அப்படியே நம்புனாலும் அவர் எல்லாம் நல்லபடியா முடியும்னு தானே சொன்னார். அது உனக்கு நிம்மதி தரலையா?”

“இருக்கு… ஆனா என்னவோ தெரியலை… மனசுக்கு பாரமா இருக்கு..”

“ஒன்னு மட்டும் ஞாபகம் வச்சுக்கோ… சில விஷயங்களை நம்மளால கட்டுப்படுத்த முடியாது. அந்த மாதிரி சமயங்கள்ல நாம ஜஸ்ட் வளைஞ்சு கொடுத்து பொறுமையா நின்னுட்டு இருந்தாலே போதும்… நல்ல நேரம் வர்றப்போ எழுந்துக்கலாம்… சரியா?” செல்லமாக பிரபாகரின் கன்னத்தில் தட்டினான் ஜெய்.

“சரி! நீ நல்லா தூங்கு…. நான் கொஞ்ச நேரம் உன் நெஞ்சுல சாஞ்சுக்குறேனே..” சொல்லிவிட்டு ஜெய் பிரபாகரின் நெஞ்சில் தலைவைத்து, அவன் இடுப்பை சுற்றி கட்டிக்கொண்டு அதே கட்டிலில் படுத்துக்கொண்டான். பிரபாகர் நகர்ந்து இடம் கொடுக்க, ஜெய் வசதியாக அந்த குறுகிய கட்டிலில் நெருக்கி படுத்துக்கொண்டு, பிரபாகரின் தொடை மீது ஜெய் கால் போட்டுக்கொண்டான்.

கீழே உள்ள படத்தை காண “படங்களை காட்டு” பட்டனை உபயோகிக்கவும்.Blog Image

கொஞ்ச நேரம் கழித்து “பிரபா! உன்னோட சட்டையை கழற்றேன்… எனக்கு உன்னோட வெத்து மார்புல மூஞ்சிய புதைச்சுக்கனும்… உன்னோட உடம்பை feel பண்ணனும்” – ஜெய் சிணுங்கலாக சொன்னான்.

பிரபாகர் பதில் எதுவும் சொல்லாமல் எழுந்து உட்கார்ந்து தன்னுடைய டி-ஷர்ட்டை கழற்றி கீழே போட்டுவிட்டு மீண்டும் கட்டிலில் படுக்க, ஜெய் அவனது சூடான மார்பில் தன் கன்னத்தை வைத்துக்கொண்டான். பிரபாகரின் இதய துடிப்பு கொஞ்சம் வேகமாகவே இருந்தது ஜெய்யின் காதில் விழுந்தது.

ஜெய் பிரபாகரின் செழுத்த நெஞ்சில் முத்தமிட்டான். பிரபாகர் பலவீனமாக ஜெய்யை தடுக்க முயற்சிக்க, ஜெய்க்கு அது இன்னும் கூடுதல் உத்வேகத்தை கொடுத்தது. ஜெய் நகர்ந்து அடுத்த பக்கத்து மார்பை எச்சில் வைத்தான்.

“வேண்டாம்டா குட்டி!..” முனகலாக சொன்னான் பிரபாகர்.

“பிரபா! I want to make love with you..”

“இப்போவேவா?”

பிரபாகரின் இப்போதைய கலக்கமான மன நிலையில் இருந்து அவனை மீட்க, இப்போது ஜெய்யிடம் உள்ள ஒரே மற்றும் எளிமையான ஆயுதம் – உடலுறவு மட்டுமே. Sex can be Therapeutic too. இப்போது ஜெய்க்கும் பிரபாகருக்கும் இடையே நடக்கப்போகும் செக்ஸில் காமத்துக்கு இடமில்லை… மனதுக்கும் அதன் உற்சாகத்துக்கும் மட்டுமே முக்கியத்துவம்.

“ஆமாம்டா.. இப்போவே இங்கேயே பண்ணனும்… என்று சொல்லிவிட்டு ஜெய் பிரபாகரின் மீது முழுசாக படுத்து அவன் உதட்டை கவ்வி தீவிரமாக கிஸ்ஸடித்துக் கொண்டிருந்தபோது தெருவில் யாரோ சைக்கிள் பெல்லை அடித்துக்கொண்டு சென்றார்கள்.

கீழே உள்ள படத்தை காண “படங்களை காட்டு” பட்டனை உபயோகிக்கவும்.
Blog Image

NSFW Image

ஜெய் தலையை தூக்கி திரும்பிபார்த்தான். வேண்டுமென்றே காம்பவுண்ட் சுவற்றை தாண்டி யாரும் எட்டிப்பார்த்தால் ஒழிய இவர்களது அந்தரங்கம் தெரியாது. இருந்தாலும் இப்போதைக்கு இருட்டு இருந்தால் பரவாயில்லை என்று தோன்றியது. ஜெய் கோபத்தோடு திண்ணைக்கு மேலே எரிந்துக்கொண்டிருந்த பல்பை பார்க்க, பிரபாகர் அவனது எண்ண ஓட்டத்தை அறிந்தவனாக “குட்டி! இந்த லைட்டோட ஸ்விட்ச் வீட்டுக்குள்ளே இருக்கு.. பெரியவங்களை எழுப்பி தான் உள்ளே போய் ஆஃப் பண்ண முடியும்” என்றான்.

அப்போ இதை கல்லால அடிச்சு உடைச்சிடட்டுமா?” – ஜெய் பொய்யான கோபத்தோடு கேட்க,

“ஏன்? பல்பு உடையுற சத்தத்தை கேட்டுட்டு பெரியவங்க பதறி அடிச்சுட்டு வர்றதுக்கா? சரியான பறக்காவெட்டிடா நீ” என்று சொல்லி ஜெய்யை முத்தமிட்டுவிட்டு, அவனை நகர்த்திவிட்டு கட்டிலில் இருந்து இறங்கினான். நேரே திண்னையின் மேலே ஏறி, தன்னுடைய கழற்றிய டி-ஷர்ட்டை கொண்டு அந்த சூடான பல்பை கழற்றி பத்திரமாக திண்ணை மேலே வைத்தான். இரவின் இருட்டு படர, அதை பாதி நிலா தன் ஒளியை கொண்டு ஈடுகட்ட முயற்சிக்க, பிரபாகர் கட்டிலை நோக்கி நடந்தான்.

சட்டையை கழற்றிவிட்டு வெற்று மார்பாக உட்கார்ந்திருந்த ஜெய்யை கட்டிலில் மல்லாக்க தள்ளி பரபரவென்று அவனது லுங்கியை உருவி விசிறினான். அது கொஞ்ச தூரம் தள்ளி புல்லில் விரிந்து விழுந்தது. இன்ப அதிர்ச்சியில் ஜெய் சுதாரிக்கும் முன்பு, பிரபாகரின் கைகள் ஜெய்யின் இடுப்பிலிருந்த ஜட்டியை லாவகமாக முட்டிவரை இறக்கியது. ஜெய் காலை தூக்கிக்காட்ட, அந்த ஜட்டியையும் கழற்றிப்போட்டுவிட்டு, கீழே விழுந்த ஜெய்யின் லுங்கி மற்றும் ஜட்டிக்கு துணையாக தன்னுடைய லுங்கியையும் ஜட்டியையும் கழற்றிப்போட்டுவிட்டு, ஜெய்யின் கால் இடுக்கில் தன் முகத்தை புதைத்து கிச்சுகிச்சு செய்தான்.

கீழே உள்ள படத்தை காண “படங்களை காட்டு” பட்டனை உபயோகிக்கவும்.
Blog Image

NSFW Image

“ஏய் பிரபா! கூசுதுடா..” என்ற கிசுகிசுப்பான ஜெய்யின் சிரிப்பு பிரபாகரை இன்னும் அதிகம் உற்சாகப்படுத்தியது. பின்னர் ஜெய்யின் பிறந்தமேனியை தன் நிர்வாணமான உடம்பை கொண்டு முடினான். ஜெய்யை சத்தம் வரவிடாமல் அவனது உதட்டை தன் வாயால் அடைத்து வன்முறை புரிந்தான். அந்த பின்னிரவு வரை ஜெய்யின் உடம்பின் மீது பிரபாகரின் ஆதிக்கம் அமர்க்களமாக கொடிகட்டி பறந்தது. கயிற்றுக்கட்டிலில் ஜெய்க்கு உடைந்த கைக்கு வாகாக இல்லாமல் இருந்தபோதும், பிரபாகரை மீண்டும் துறுதுறுப்பாக மீட்டெடுக்க அந்த அசௌகரியத்தை பொறுத்துக்கொண்டான் ஜெய்.

கீழே உள்ள படத்தை காண “படங்களை காட்டு” பட்டனை உபயோகிக்கவும்.
Blog Image

NSFW Image

கடைசியில் பிரபாகரும் அயர்ந்தான். “தெரபி” செக்ஸ் முடிந்ததும் இருவரும் அவர்களுக்கு பிடிக்காத ஒரு காரியத்தை செய்யவேண்டியிருந்தது. அது அவசரம் அவசரமாக உடை மாட்டிக்கொண்டு, தள்ளிப்படுப்பது தான். இடம் பொருள் ஏவல் காரணமாக இருவரும் வேறு வழியின்றி தங்களுடைய லுங்கி, டி-ஷர்ட்டை அணிந்துக்கொண்டு விலகி சென்று தத்தமது கயிற்று கட்டிலில் மீதி இரவை தனியாக தூங்கி கழித்தனர்.

கதை எப்படி இருக்கு?

0 / 5 Results 3 Votes 1

Your page rank:

Picture of the day


உ.க.உறவே 08. Therapeutic Sex
மேலும் காட்ட

இதோ.. நீங்க தொடர்கதை படிக்கிறதால கேட்குறேன்.

இதுவரை வந்த தொடர்கதைகளில் உங்களுக்கு பிடித்த கதை / கதைகள்?

தொடர்கதை பிடித்ததற்கு காரணம்? (பல காரணங்கள் தேர்வு செய்யலாம்)

தொடர்கதைகள் படிப்பதில் எரிச்சலான விஷயம்?

அதிகபட்சம் எத்தனை அத்தியாயங்கள் இருக்கலாம்?


அனைத்து பதிவுகளையும் ஒரே table-ல் காண, இங்கே click செய்யவும்.

காதல்ரசிகன்

காதலுக்கும் காமத்துக்கும் பால் (Gender) தேவையில்லை என்று கருதும் கூட்டத்தில் ஒருத்தன். அழகு எங்கிருந்தாலும், யாரிடமிருந்தாலும் ரசிக்கும் கலாரசிகன். அன்பு எங்கிருந்து கிடைத்தாலும் பால் நோக்காமல் கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் கொண்டவன். கட்டிலில் கட்டியவளோடு புணர்ந்தாலும் நான் ஓரினச்சேர்கையாளனும் கூட என்று சொல்லிக்கொள்வதில் வெட்கமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Free Sitemap Generator

Adblock Detected

Please disable the adblocker for this site (not only the page) to render the in-line related posts blocks effectively and reload the page.