அருண் அந்த கம்பெனியின் தலைமை அலுவலகத்தில் விற்பனை மேலாளரின் தனி உதவியாளராக சேர்ந்தான். மாநிலம் முழுதும் உள்ள நரகங்களின் விற்பனை அலுவலர்கள் மாலை வீட்டுக்கு செல்லும் முன்பு தங்கள் அன்றைய விற்பனை கணக்குகளை தலைமை அலுவலகத்துக்கு அனுப்பிவிடுவார்கள். அப்புறம் அருண் அந்த எண்களை எல்லாம் தொகுத்து ரிபோர்ட் அடித்து அடுத்த நாள் காலை மேலாளர்கள் வந்தவுடன் இந்த ரிபோர்ட்டை பார்த்துவிட்டு அதன் அடிப்படையில் மீட்டிங் போட்டு விற்பனையில் ஏற்பட்ட சுணக்கங்களையும், வழிமுறைகளையும் ஆய்வு செய்வார்கள். அதனால் அருணுடைய உண்மையான வேலையே மாலை 6:30 மணிக்கு தான் தொடங்கும். சில சமயம் மற்ற ஊர்களில் இருந்து விற்பனை அறிக்கை வர தாமதமானால் இரவு 10:00 மணி வரை கூட ஆஃபீஸில் வேலை செய்யவேண்டி இருக்கும். அப்படி தான் அன்றும் அருண் கோவையிலிருந்து வரவேண்டிய அறிக்கைக்காக காத்திருந்தான். 7:30 மணி வரை பொறுத்துவிட்டு, விற்பனை பிரதிகளின் தொடர்பு எண்கள் கொண்ட எக்ஸல் ஷீட்டை திறந்து கோவை விற்பனை பிரதிநிதி ராஜேஷின் எண்ணை தேடினான். தன்னுடைய எக்ஸ்டென்ஷனிலிருந்து ராஜேஷுக்கு அழைத்தபோது ரிங் ஆகிக்கொண்டே இருந்தது தவிர பதிலில்லை. அருண் செம கடுப்பாகிவிட்டு, மீண்டும் 8:00 மணிக்கு அழைத்தபோது ராஜேஷ் லைனில் கிடைத்தான்.
“சாரி ஜி! ஒரு சின்ன விபத்து… நீங்க முன்னாடி கூப்பிடப்போ நான் க்ளினிக்-ல இருந்தேன்.. அதனால எடுக்க முடியலை. உங்க ரிபோர்ட்டுக்கு தேவையான் ஃபிகர்ஸை அடிக்க சொல்லி இங்கே பிரவுசிங் செண்டரோட ஜாப் டைப்பிங்க்-ல குடுத்திருக்கேன். இன்னும் 15 நிமிஷத்துல அனுப்பிடுவாங்க” என்று சொன்னான்.
அருணுக்கு அவன் பேசியது விற்பனை பிரதிநிதிகளின் வழக்கமான் பொய் போல தோன்றியது. ஆனாலும் எரிச்சலை வெளிக்காட்டிக்கொள்ளாமல் “சரி… காத்துட்டு இருக்கேன்” என்று சம்பிரதாயமாக சொல்லிவிட்டு வைத்தான். அதே போல அடுத்த கால் மணி நேரத்தில் விற்பனை எண்கள் வந்துவிட, அருண் ரிப்போர்ட் தயார் செய்துவிட்டு வீட்டுக்கு கிளம்ப 10:00 மணி ஆனது.
| மேலே படிக்கிறதுக்கு முன்னாடி... |
|---|
அடுத்த நாள் நன்பகலில் அருணின் மேலாளர் அவனை அழைத்து, கோவையில் உள்ள விற்பனை பிரதிநிதிக்கு விபத்து ஏற்பட்டிருப்பதால் சில நாட்கள் வேலைக்கு வரமாட்டான் என்றும், அதுவரை மற்றொரு உதவியாளர் அனுப்புவார் என்றும், அந்த உதவியாளர் வேலைக்கு புதுசு என்பதால் அருண் எதிர்பார்க்கும் மாதிரி ஃபிகர்கள் இல்லை என்றால் அருணையே சரி செய்து ரிப்போர்ட் அடிக்க சொன்னார். அருணுக்கு உண்மை சொன்னவன் மீது சந்தேகப்பட்டுவிட்டோமே என்று குற்றவுணர்ச்சி தோன்றியது. அடுத்தடுத்த நாட்களில் அவனுக்கு கிடைத்த அறிக்கைகள் எல்லாம் அதை தொகுத்தவர்களின் முதிர்ச்சியின்மையை காட்டியது. ராஜேஷ் எவ்வளவு மெனக்கெட்டு தனக்கு “அப்படியே உபயோகிக்க”க்கூடிய ரிப்போர்ட்டை அனுப்பிவந்திருக்கிறான் என்று தோன்றியபோது ராஜேஷ் மீது மதிப்பு தோன்றியது.
ஒரு நாள் மாலை மனசு கேட்காமல் அருண் ராஜேஷின் மொபைலுக்கு அழைத்தான். ராஜேஷ் தான் எடுத்தான்… எடுத்த எடுப்பிலேயே “சார்! ரிப்போர்ட் எல்லாம் சரியா கிடைக்குதா? நான் அந்த புது பையன் கிட்டே அப்பப்போ செக் பண்ணிக்கிட்டு இருக்கேன்” என்றான்.
அருண் “ராஜேஷ்… நான் ஆஃபீஸ் விஷயமா உங்களை கூப்பிடலை.. உங்களுக்கு உடம்புக்கு எப்படி இருக்குன்னு விசாரிக்க தான் கூப்பிட்டேன். நீங்க அன்னைக்கு கடைசியா பேசினப்போ நீங்க உங்க தப்பை சமாளிக்கிறீங்கன்னு நினைச்சுட்டேன்… எனக்கு இன்னும் உறுத்தலாவே இருக்கு… மன்னிச்சிடுங்க” என்றான்.
ராஜேஷ் “ஐயோ.. என்னங்க சார் இது! ஃப்ரீயா விடுங்க” என்று சொன்னான்.
| மேலே படிக்கிறதுக்கு முன்னாடி... |
|---|
பின்னர் தினமும் அருண் ராஜேஷை அழைத்து அவன் உடல்நலத்தை விசாரித்தான்… நாளடைவில் தினசரி அழைப்புகள் தினமும் இரு முறை அழைப்புகளாக மாறின… பின்னர் தினமும் தவறாமல் “குட் மார்னிங்” மற்றும் “குட் நைட்” குறும்செய்திகளோடு இருவரின் நாட்களும் ஆரம்பித்து முடிந்தன. ராஜேஷுக்கு பூர்வீகமே கோவை தான் என்றும், அங்கேயே பிறந்து வளர்ந்தவன் என்றும் கல்யாணம் ஆகவில்லை, தன் தாய் தந்தையோடு இருக்கிறான், அவன் குடும்பம் நடுத்தர குடும்பம், ராஜேஷுக்கு சில வருடங்கள் கழித்து சொந்தமாக ஏஜன்ஸி எடுத்து நடத்தவேண்டும் என்கிற ஆசை உண்டு, ராஜேஷுக்கு இன்னும் காதலி/கள் இல்லை, கல்யாணத்தில் பெரிய ஈடுபாடு இல்லை என்றும் தெரிந்துக்கொண்டான். ஒருவரை பற்றி ஆசை கூடும்போது அவர்களை பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வமும் கூடும்.. இப்போது அருணுக்கு ராஜேஷ் மீது ஆர்வம் கூடியது..
ராஜேஷ் தினமும் தெருத்தெருவாக சுற்றவேண்டிய வேலை என்பதால் நினைத்தபோது அருணால் கூப்பிடமுடிவதில்லை. ராஜேஷும் தானாக கூப்பிடுவதில்லை… வேலை காரணமாக இருக்கலாம் என்று அருண் சமாதானப்படுத்திக்கொண்டான். ஆனால் இரவு 10:00 மணிக்கு மேல் அருண் கூப்பிடும்போது குறைந்தது ஒரு மணி நேரமாவது இருவரும் அன்று நடந்தது அனைத்தையும் பேசுவார்கள். ஆரம்பத்தில் ஆஃபீஸ் கிசுகிசுக்களில் ஆரம்பித்த அவர்கள் பேச்சு, பின்னர் நாளடைவில் சினிமா, அரசியல், வாழ்க்கைமுறைகள், கற்பு என எல்லாவற்றையும் பேச ஆரம்பித்தது. இருவரும் கிட்டத்தட்ட ஒரே பக்கமே ஆதரிப்பது போல இருக்கும்.
ஒரு நாள் அருணிடம் ராஜேஷ் தான் அடுத்த நாள் திருப்பூர் செல்வதாகவும், அருணின் சைஸ் சொன்னால் அவனுக்கேற்ற உடைகள் எடுத்துவருவதாக சொன்னான்.
அருண் உடனே “சாதாரணமா 6 இஞ்சு… வளர்ந்தா 8 இஞ்சு” என்று சொன்னான்.
அடுத்த பக்கம் திடீரென்று மௌனம். ராஜேஷ் “நான் சட்டை சைஸ் கேட்டேன்” என்றான்.
அதற்கு அருண் “அப்படி தெளிவா கேட்கனும்…” என்று சொல்லி சிரிக்க, ராஜேஷ் “என் கிட்டே யாரும் வேற சைஸ் எல்லாம் சொன்னது இல்லை..” என்று பட்டென்று சொன்னான்.
அருணுக்கு முகம் வாடிப்போனது. வாண்டடா போய் சிக்கிக்கிட்டோமே என்றும், ராஜேஷ் தவறாக எடுத்துக்கொண்டால் என்ன செய்வது என்று வருந்தினான்.
பின்னர் கொஞ்ச நேரம் இருவரும் பொதுவாக பேசிவிட்டு ஃபோனை வைக்கும் போது ராஜேஷ சொன்னான் “என்னோடதை நான் இன்னும் அளந்ததில்லை… வேணும்னா நாம பாக்கும்போது நீயே என் சைஸை அளந்து சொல்லு… குட் நைட்” என்று சொல்லிவிட்டு ஃபோனை கட் செய்ய, அன்றைய “குட் நைட்” தூக்கமில்லா இரவாக கழிந்தது அருணுக்கு.
அடுத்த நாள் அலுவலகம் சென்றபோது அவன் மேலாளர் இன்னும் இரண்டு வாரத்தில் நாடு முழுவதிலும் இருந்து எல்லா விற்பனை பிரதிநிதிகளும் கலந்துகொள்ளும் கூட்டம் நடத்த நிர்வாகம் முடிவு செய்திருப்பதாகவும், அதற்கு ஏற்பாடு செய்யும் பொறுப்பை அருணிடம் கொடுப்பதாகவும் சொன்னார். அருணுக்கு அந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்வதில் உள்ள கடின உழைப்பைவிட, அதில் பங்குகொள்ள ராஜேஷ் வருவான் என்ற சந்தோஷம் தான் அதிகம் இருந்தது. அந்த உற்சாகத்திலேயே பம்பரமாக சுற்றி சுற்றி வேலை பார்த்தான்.
அவ்வப்போது ராஜேஷ் வருகிறானா? என்று அவனிடம் கேட்டபடியே இருந்தான். ராஜேஷிடம் நீ எப்போ திரும்பிப்போவாய் என்று கேட்டான். அதற்கு அன்றிரவே தன்னுடைய கோவை மேலாளருடன் திரும்பவேண்டியிருக்கும் என்று சொன்னான். அருணுக்கு ராஜேஷுடன் செலவழிக்கும் நேரம் ரொம்ப குறைவாக இருப்பதாக தோன்றியது.
கடைசியில் அந்த நாளும் வந்தது… அருண் தன்னிடம் இருப்பதிலேயே நல்ல உடையை அணிந்துக்கொண்டு, காலையிலேயே அலுவலகத்துக்கு சென்றான். மீட்டிங் ரூமின் புரொஜெக்டரிலிருந்து, எல்லாருடைய டேபிளில் வைக்கவேண்டிய தண்ணீர் பாட்டில் வரை எல்லாத்தையும் கவனிக்கவேண்டிய பொறுப்பு அருண் தலையில் விடிந்திருந்தது. அருண் நின்று மூச்சுவிட முடியாத அளவுக்கு சுறுசுறுப்பாக வேலை பார்த்தான். மீட்டிங்கிற்கு வெளியூரிலிருந்து ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர். அருண் கிட்டத்தட்ட எல்லாவற்றையும் மறந்து “எந்திரன்” போல வேலை செய்துக்கொண்டிருந்தான்.
“ஹாய்!” என்ற குரல் கேட்டு மனிதனாக திரும்ப வந்தபோது, எதிரில் அவன் அழகான புன்னகையுடன் நின்றுக்கொண்டிருந்தான்.
“ராஜேஷ்???” என்று ஆச்சரியத்தில் கண்கள் விரிய அருண் அவனை நோக்கி கை நீட்டினான்.
“ஆமாம் ஜி… வந்தப்போவே பார்த்தேன்… நீங்க ரொம்ப பிஸியா இருந்தீங்க.. ஏதாவது உதவி வேணுமா?” என்று கேட்டபடி முழுக்கை சட்டையை முட்டிக்கு சுருட்டினான்.
“இல்லைங்க… நான் சமாளிச்சுக்குறேன்.. எல்லாம் முடிஞ்சுது..”
“ஆர் யூ ஸ்யூர்?”
“ம்ம்… உங்க மீட்டிங் ஆரம்பிக்கப்போகுது… கிளம்புங்க”
“ஓ.கே… அப்புறம் பாக்கலாம்”









