கனவு கண்ணன் என் கனகராஜ் அண்ணன்…

கனவு கண்ணன் என் கனகராஜ் அண்ணன்…

நகரத்தின் பரபரபான போக்குவரத்தில் சிக்கி சின்னாபின்னமாகி வீட்டுக்கு வந்து சேர்ந்தபோது வழக்கம் போல வீட்டு LCD TV-யில் 140 கிலோவுக்கு உடம்பு ஊதிய ஒரு முன்னாள் கதாநாயகி “அவள் எப்படி வாழ்ந்துடுறான்னு நானும் பாக்குறேன்…” என்று அடிக்குரலில் கர்ஜித்துக்கொண்டிருந்தாள். இருக்குற தலைவலியிலே இது வேறயா என்று நினைத்துக்கொண்டு அமைதியாக சோஃபாவில் உட்கார்ந்து ஷூ-வை கழற்றியபோது டீப்பாயில் அந்த கல்யாண பத்திரிகை கண்ணில் பட்டது. எடுத்து பார்த்ததும் என் கண்கள் சந்தோஷத்தில் விரிந்தது. பிரித்து படித்தபடி “எப்பம்மா வந்துச்சு?” என்று உரக்க கேட்க, போனால் போகுது என்று டிவியில் இருந்து பார்வையை திருப்பாமலேயே “இன்னைக்கு கனகராஜும் அவங்க அம்மாவும் வந்திருந்தாங்க…” என்றார். பாய்ந்து அம்மாவிடம் இருந்து TV Remote-டை பிடுங்கி mute-ல் போட்டுவிட்டு “என்ன சொன்னாங்க??” என்று கேட்க, டிவியை மீட்கவேண்டும் என்று அவசரம் அவசரமாக பதில் சொன்னார் – “அடுத்த வாரம் மலைக்கோவில்ல சிம்பிளா கல்யானம் வச்சுக்கிட்டு ரொம்ப நெருங்கினவங்களுக்கு மட்டும் reception மாதிரி விருந்து வச்சிருக்காங்க… போன தடவை மாதிரி இந்த தடவையும் நடந்துடக்கூடாதுன்னு பயப்படுறாங்க” என்றார்.

TV Remote-டை அம்மாவிடம் தூக்கிப்போட்டுவிட்டு கல்யாண பத்திரிகையை தூக்கிக்கொண்டு அறைக்கு போனேன். என் மனமெங்கும் ஒரு சொல்ல முடியாத பூரிப்பு நிறைவதை என் முகத்தில் பொங்கிய சிரிப்பும், பளபளப்பும் வெளிக்காட்டியது. கனகராஜ் அண்ணனின் கல்யாண செய்தியை பார்த்துவிட்டு எனக்கே கல்யாணம் நிச்சயம் ஆனது போல ஒரு சந்தோஷம். அவரை முதன் முதலில் பார்த்தது எனக்கு மின்னலடித்தது.

அப்போது எனக்கு 16-17 வயதிருக்கும்… சாலையில் என்னை கடந்து செல்லும் அழகான ஆண்களை மீண்டும் திரும்பிப்பார்க்கும் அளவுக்கு பாலீர்ப்பு திடமாக உருவாகிக்கொண்டிருந்த பருவமும் கூட… அந்த காலக்கட்டத்தில் என்றைக்கு நான் யதேச்சையாக சோனி டிவி-யில் “Tezaab” படம் பார்த்தேனோ அன்று முதல் எனக்கு அனில் கபூர் மீது ஒரு அலாதி பிரியம். அதில் “ஏக் தோ தீன்…” என்று பாடி ஆடிய மாதுரி தீக்ஷித்தை நினைத்து நாடே கையடித்ததாக கேள்விப்பட்டிருந்தாலும், அதில் microseconds-க்கு மட்டுமே வரும் அனில் தந்த உதட்டு முத்தத்தையும், நீச்சல் குளக்காட்சியில் தெரிந்த அனில்கபூரின் நீண்ட கால்களையும், அதனிடையே தெரிந்த பெரிய உப்பலையும் நினைத்து என் ரத்தத்தை விந்தாக லிட்டர் கணக்கில் அடித்து ஊற்றியிருக்கிறேன். சில வருடங்கள் கழித்து எங்கள் பக்கத்து வீட்டுக்கு குடிவந்த குடும்பத்தில் கனகராஜ் அண்ணனை பார்த்ததும் எனக்கு பிரமிப்பு… காரணம் அச்சு அசலாக அவர் அனில் கபூர் மாதிரி இருந்தது தான். அதே தூக்கி வாரிய தலைமுடி, தனித்துவமான தாடை, எடுப்பான உதடுகள், அளவான மீசை… கனகராஜ அண்ணன் மட்டும் கறுப்பாக இல்லாமல், அனில்கபூர் போல சிகப்பாக இருந்திருந்தால் அவர் நிச்சயம் அனிலுடைய “Body Double”-ஆக நடிக்க போயிருக்கலாம் என்னும் அளவுக்கு உருவ ஒற்றுமை. அதனால் எனக்கு கனகராஜ் அண்ணன் மீது ஒரு உடற்கவர்ச்சி ஏற்பட்டது இயல்பே.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts

ஆனால் அவரை பொறுத்தவரைக்கும் நான் ஒரு குட்டிப்பையன். எங்களுக்குள் கிட்டத்தட்ட 10 வருஷத்து வயது வித்தியாசம் இருக்கும். காலேஜ் போன நேரம் போக மற்ற சமயமெல்லாம் காரணமே இல்லாமல் அவரோடு சுற்றிக்கொண்டிருப்பேன். உன் வயசு பசங்க கூட சேர மாட்டியா என்று வீட்டில் என்னை திட்டுமளவுக்கு கனகராஜ் அண்ணனின் நிழலாக இருந்தேன். அவரை அண்ணா அண்ணா என்று மூச்சுக்கு முன்னூறு தடவை கூப்பிட்டாலும் என் அடிமனசில் அவர் மீது ஏதோ கவர்ச்சி தான் இருந்தது. எப்போதும் அவர் மீது ஒட்டிக்கொண்டும், உரசிக்கொண்டும், கையை கோர்த்துக்கொண்டும், அரக்கிக்கொண்டும் தான் இருப்பேன். அவர் அலுத்துக்கொண்டாலும் அதை எதிர்த்ததில்லை. ஒருவேளை கனகராஜ் அண்ணா கிராமத்தில் வளர்ந்தவராதலால் எனது தொடுதலில் அவருக்கு விகல்பம் தெரியவில்லை போல… அந்த சமயத்தில் அவருக்கு கல்யாணம் நிச்சயம் ஆனது.

எனக்கு என்னவென்று புரியவில்லை… ஒருபக்கம் சந்தோஷமாக இருந்தாலும் மறுபக்கம் துக்கமாக இருந்தது. பெண் பார்த்துவிட்டு வந்தபிறகு அவர் நிறைய நேரங்களை அந்த பெண்ணுடன் தொலைபேசியில் பேசுவதிலேயே செலவழித்ததால் அவர் கூடவே உடலளவில் இருந்த நான் அவர் நினைவில் இருக்கிறேனா என்ற ஆதங்கமும், கோபமுமாக அவ்வப்போது வெளிப்பட்டது. அவரிடம் எரிந்து விழுந்த சமயங்களும் உண்டு… ஆனால் கனகராஜ் அண்ணா என்னிடம் நிதானமாக, சிரித்தபடி தான் பதில் சொல்வார். ஒரு நாள் திடீரென்று யாரும் எதிர்பார்க்காத வகையில் அந்த கல்யாண சம்பந்தம் நிச்சயதார்த்தத்தோடு நின்றுபோனது. எனக்கு அந்த பெண் மீது பொறாமையும் கோபமும் இருந்தால் கூட என்னாலும் அந்த உறவு முறிவை ஏற்கமுடியவில்லை. ஆளாளுக்கு அவரிடம் (சிலர் அக்கறையோடும் சிலர் சில்மிஷத்தோடும்) துக்கம் விசாரிக்க, பாவம் கனகராஜ் அண்ணா…. தேவதாஸ் போல ஆனார்.

மழமழவென்று கிளீன் ஷேவ் செய்யப்பட்ட முகத்தோடும், வாய் மூடாத சிரிப்போடும் அவரை பார்த்து பழகிய எனக்கு அவரது தாடிவைத்த, கண்ணில் வலியோடும் கொஞ்சம் அழுக்காகவும் அவரை பார்க்கவே சங்கடமாக இருந்தது. கனகராஜ் அண்ணா ஒன்றுமே பேசவில்லை என்றாலும் நான் அவரோடேயே Hutch நாய்க்குட்டி போல இருந்தேன். சமயத்தில் தொடர்ந்து 2-3 சிகரெட்டுகள் ஊதித்தள்ளினார். அடுத்த சிகரெட் எடுக்கும்போது நான் இருமினால் பாக்கெட்டின் உள்ளே வைத்துவிட்டு என்னை பார்த்து விரக்தியாக சிரிப்பார். அதை பார்த்த எனக்கு என்னால் அவருக்கு சிறிய வகையில் ஆறுதல் தரமுடியும் என்று தோன்றியது.

ஒரு நாள் ராத்திரி “கார்த்தி… உனக்கு படிக்கிற வேலையெல்லாம் முடிஞ்சுதா?” என்று கேட்டார்.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி

உங்க gay partner அடுத்த sex session-ல உங்களோட சூத்துல ஓக்கனும்னு அடம் பிடிக்கிறார். ஆனா நீங்க இன்னும் anal virgin...

View Results

Loading ... Loading ...

“ஏங்கண்ணா? அதெல்லாம் ஒன்னும் இல்லை…” என்றேன்.

“அப்பா கிட்டே வண்டி வாங்கிட்டு வர்றியா? கொஞ்சம் வெளியே போகனும்…”

“எடுத்துட்டு வர்றேங்கண்ணா? எங்கே போகனும்?”

“எனக்கு தண்ணியடிச்சு பாக்கனும் போல இருக்கு…. எல்லாரும் சொல்றாங்களே… கஷ்டம் வர்ற சமயத்துல தண்ணியடிச்சா ஒன்னுமே தெரியாதுன்னும்… அப்படியே சொர்க்கத்துல மிதக்குற மாதிரி இருக்கும்னும்… இன்னைக்கு Try பண்ணி பாக்கலாம்னு இருக்கேன்… என்னால மப்புல வண்டி ஓட்டமுடியுமா தெரியலை… அது தான் உன்னை துணைக்கு கூப்பிடுறேன்” முனகலான குரலில் சொன்னார்.

எனக்கு அதை கேட்டதும் அதிர்ச்சியாக இருந்தது. காரணம் அவரது கூட்டத்தில் வீட்டிலேயே தண்ணியடிப்பது இயல்பான விஷயமாக இருந்தாலும் அவர் அந்த கருமத்தை ஒரு நாள் கூட தொட்டதில்லை. விட்டுல வச்சு தண்ணியடிச்சு சின்ன பசங்களுக்கும் அது தப்பில்லங்குற மாதிரி மனசுல பதியவைக்குறாங்க-ன்னு திட்டுவார். ஆனால் அப்படிப்பட்ட கனகராஜ் அண்ணனே இன்று தண்ணியடிக்க போகவேண்டும் என்று சொன்னபோது அதிர்ச்சி அடையாமல் என்ன செய்ய?

இரவு வெளிச்சம் குறைவாக இருந்த அந்த புளியமர சாலையில் நான் வண்டி ஓட்ட, கனகராஜ் அண்ணன் என் முதுகில் சாய்ந்தவாறு அமைதியாக வந்தார். நான் ஆற்றுப்பாலத்தின் அருகே இருந்த நடைபாலத்தில் வண்டியை நிறுத்த, “என்னடா? இங்கேயே நிறுத்திட்டே?” என்று கேட்டார். பொதுவாக தண்ணியடிக்கும் பசங்களும், காதலர்களும், கிராக்கிகளை தள்ளிக்கொண்டு வந்து கை அல்லது வாய்ப்போடும் ஏடாகூடமான இடம் அது. ஆனால் அன்று யாரும் இல்லாமல் வெறிச்சோடியிருந்தது.

“இல்லைங்கண்ணா… கொஞ்ச நேரம் உட்காரலாம். தண்ணியடிக்கிறது தப்புன்னு நீங்க அடிக்கடி சொல்லுவீங்க… ஆனா நீங்களே இன்னைக்கு தண்ணியடிக்கனும்னு சொல்றீங்க… கொஞ்ச நேரம் இங்கே உட்கார்ந்து பேசிட்டு இருக்கலாம்… அதுக்கப்புறமும் உங்களுக்கு தண்ணியடிச்சே ஆகனும்னு தோணுச்சுன்னா நாம டாஸ்மாக்குக்கு போகலாம்… எப்படியும் 12 மணி வரைக்கு தொறந்து வச்சிருப்பானுங்க..”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Free Sitemap Generator
Scroll to Top