என் பெயர் மூர்த்தி. அப்போது எனக்கு 13 வயது இருக்கும். எட்டாம் வகுப்பு படித்து கொண்டு இருந்தேன். என் கூட படிக்கும் மாடசாமி எனக்கு நண்பன் ஆனான். மாடசாமிக்கு படிப்பு சரியாக வராமல் ஒவ்வொரு வகுப்பிலும் பெயில் ஆகி எட்டாம் வகுப்பிலும் பெயில் ஆகி இருந்தான். அப்போது அவனுக்கு 16 அல்லது 17 வயசு இருக்கும் என்று நினைக்கிறேன்.
எங்க வகுப்பிலேயே அவனுக்கு மட்டும் தான் மீசை முளைத்து இருக்கும். அவனை கண்டால் என் கூட படிப்பவங்க எல்லாம் பயப்படுவாங்க. என் வீடும், அவன் வீடும் ஒரே தெருவில் இருந்ததால் எட்டாம் வகுப்பில் எனக்கு மட்டும் நண்பன் ஆகி இருந்தான்.