ஓரினச்சேர்க்கை

காதல் என்பது எதுவரை?

கதை எப்படி இருக்கு?

0 / 5 Results 0 Votes 0

Your page rank:

Just ஒரு கேள்வி...

கல்யாணம் ஆன மற்றும் boyfriend இருக்கும் / உறவில் இருக்கும் Gay ஆண்களே - நீங்கள் உங்கள் partner தவிர மற்றொருவருடன் casual sex- ல் ஈடுபடும்போது குற்ற உணர்ச்சி தோன்றுமா?

View Results

Loading ... Loading ...

சமீபத்தில் நான் படித்த ஒரு நண்பரின் பதிவில் இடப்பட்ட உண்மை சம்பவம். இது கிட்டத்தட்ட எல்லா ஓரினச்சேர்க்கையாளர்களுக்கும் நிகழ்ந்திருக்கக்கூடிய ஒரு அனுபவம். காரணம் – ஓரினச்சேர்க்கையாளர்கள் பொதுவாக மென்மையானவர்கள் அதே சமயம் அதீத அன்பை ஏற்கமறுப்பவர்கள் என்பது எனது observation. நானும் அப்படி தான். இந்த கதையில் வந்த அன்பு மற்றும் நியால் ஆகியோரின் கதாபாத்திரங்களை நானும் ஏற்றிருக்கிறேன். அதனாலேயே இந்த கதையை உங்களுக்கும் அளிக்கிறேன்.

பதிவு முகவரி: http://orinakadhal.blogspot.in/2011/12/blog-post.html

Random கதைகள்

முன்குறிப்பு: சற்று நீண்ட கதை. மற்ற கதைகளைப் போல இது செக்ஸ் கதையல்ல.

என்னுடைய ஊரிலிருந்து இரண்டு பேருந்துகளில் பயணம் செய்து சென்று சேரும் தொலைவில் இருந்தது என்னுடைய கல்லூரி. நான் தினமும் கல்லூரிக்கு எங்கள் கிராமத்திலிருந்து டவுணுக்கு காலை 6.45 மணிக்கு செல்லும் பேருந்தில் சென்று, பின்னர் அங்கிருந்து இன்னொரு பேருந்தில் செல்வேன். என்னோடு கூட யாரும் அந்த கல்லூரியில் படிக்கவில்லை என்றாலும் டவுண் வரைக்கும் பேசிக்கொண்டு செல்ல நண்பர்கள் நிறைய உண்டு, ஒரே இருக்கையில் அமர்ந்து பயணிக்க நெருங்கிய நண்பனும் உண்டு. நாளடைவில் அந்த பேருந்தில் முதல் நிறுத்தம் தொடங்கி பக்கத்து ஊருக்கு செல்லும் வரையிலும் யார் யார் வருவார்கள் என்பது எல்லாம் எங்களுக்கு தெரிந்திருந்தது.

திரை படைப்புகள்

பக்கத்து ஊரிலிருந்து பெயர் தெரியாத அழகான பையன் ஒருவன் என்றாவது ஒருநாள் எங்கள் பேருந்தில் வருவான். என்றாவது என்றால் எங்கள் பேருந்து என்றைக்கெல்லாம் வழக்கத்திற்கு மாறாக சில நிமிடங்கள் தாமதமாக செல்கிறதோ அன்றெல்லாம் வருவான். மேலும், டவுனிலிருந்து எனது கல்லூரிக்கு செல்லும் குறிப்பிட்ட அந்த பேருந்தில் தான் அவனும் சில நேரங்களில் வருவான். என்னுடைய கல்லூரி தாண்டி தான் அவனது கல்லூரியும் இருந்தது. இவ்வாறு அவ்வப்போது அவன் என்னுடைய கவனத்தில் இருந்துக் கொண்டிருந்தான். மட்டுமல்லாது, அவன் என்னை விட கொஞ்சம் அழகாக வேறு இருந்ததால் அவனை பேருந்தில் வரும் போதெல்லாம் அவனுக்கும், யாருக்கும் தெரியாமல் சைட் அடித்தேன். ஆனால் அப்படி சைட் அடிப்பதும், அவனை அனுபவிக்க வேண்டும் என்று நினைப்பதும் அந்த நேரத்தில் மட்டும் தானே தவிர அது மனதளவில் எனக்கு ஒரு பெரிய விசயமாக இருக்கவில்லை.

இப்படியே கல்லூரியில் மூன்று வருடங்கள் கழிந்திருந்தது. அப்போது நான் பொறியியல் இறுதியாண்டு ப்ராஜெக்ட் விசியமாக மதியத்திற்கு மேல் நண்பர்களோடு டவுனில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்றுக் கொண்டிருந்தேன். அவனை முதல் தடவையாக அங்கு பார்த்தது எனக்கு ரொம்பவே ஆச்சரியமாக இருந்தது. அவனும் அதே சென்டரில் தான் ப்ராஜெக்ட் செய்தான். கடவுள் அநியாயத்திற்கு நல்லவன், அதனால் தான் அவனை அடிக்கடி பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தான் போலும். அதன் பிறகு அவனது பெயர் நியால் என்று தெரிந்துக்கொண்டேன். பக்கத்து ஊர் என்றாலும் நான் நியாலிடம் ஒருபோதும் பேசியதில்லை. நாட்கள் செல்ல செல்ல கம்ப்யூட்டர் சென்டரில் அவன் கூடவே நடந்து வரும் நண்பர்களிடம் கூட பேசுவேன், ஆனாலும் அவனிடம் மட்டும் பேசுவதில்லை. அவனும் அப்படியே தான் என்னிடம் நடந்து கொண்டான். எங்காவது பார்த்தாலும் ஒருவருக்கொருவர் முகம் பார்த்து சிரிப்பதுமில்லை, அருகில் நேருக்கு நேர் பார்த்து கொள்வதுமில்லை.

சைட்டிக்க கவர்ச்சி ஆண்கள்

நான் ஏன் நியாலிடம் இப்படி நடந்துக் கொண்டேன் என்று இங்கே சொல்லியாக  வேண்டும். சென்டரில் நண்பர்களோடு பேசும் அவனது பேச்சும், சிரிப்பும், குணமும் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அவன் எப்போதாவது தான் பேசுவான் என்று நான் நினைப்பேன். அழகாக சிரிப்பான், ஆனால் அந்த சிரிப்பை குறைவாக சிரிப்பான். நான் அவனை பார்த்தாலும் என் முகம் பார்க்காமல் சென்றுவிடும் வித்தியாசமான  குணமும் அவனிடம் எனக்கு பிடிக்கவில்லை. ஆனால் உண்மையில் எனக்கு அவனது அழகு மட்டும் ரொம்ப பிடித்திருந்தது, அதாவது அவனது உடல் அழகு. நடுத்தர உயரத்திற்கும் கொஞ்சம் குறைவான உயரம், அந்த உயரத்திற்கு ஏற்ற ஒல்லியான கட்டு திட்டான உடல் தேகம், தூங்கி விழுவது மாதிரியான கவர்ச்சிக் கண்கள், பார்த்துக்கொண்டே இருக்கலாம் மாதிரியான முகம் என்று நியால் அழகாக இருப்பான். “இவன் மட்டும் நம்மை போல ஓரின ஈர்ப்பு உள்ளவனாக இருந்தால் எப்படி இருக்கும்” என்று சில நாட்கள் கட்டிலில் புரண்டு கனவு காணுவதுமுண்டு. நியால் என்னை போல இல்லை என்ற காரணமே நான் அவனை அதிகம் நினைக்காமல் புறந்தள்ள போதுமானதாக இருந்தது.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி

குறிப்பிட்ட Porn Stars-களுக்காக (உதாரணம் நடிகர் Manuel Ferrara, நடிகை Sunny Leone) அவர்களது வீடியோக்களை சேகரித்து பார்ப்பது உண்டா?

View Results

Loading ... Loading ...

கல்லூரி காலமும் முடிவுக்கு வந்தது. நிறைய கம்பனிகளுக்கு இணையதளங்களில் பதிவு செய்யவும், அதை தொடர்ந்து அடிக்கடி மெயில் செக் செய்யவும் டவுண் வரவேண்டியிருந்தது. ப்ரொவ்சிங் சென்டர் என்றாலே ஏதாவது செக்ஸ் படங்கள் பார்த்துவிட முடியாத என்று தோன்றும் வயது அது. அந்த நேரத்தில் தான் தன்பால் ஈர்ப்பு உடையவர்களுக்கான இணையதளம் ஒன்றை கண்டுபிடித்து அதில் ரிஜிஸ்டரும் செய்தேன். ஒருசில தினங்களில் சிலரிடமிருந்து மெசேஜ் வர ஆரபித்தது. பின்னர் இதற்காகவே தினமும் டவுண் சென்றுக் கொண்டிருந்தேன். அந்த இணைய பக்கத்தை நோண்ட நோண்ட சில விசியங்களையும் தெரிந்துக்கொண்டு நானே பல நண்பர்களுக்கு மெசேஜ் அனுப்பினேன். பலரிடமும் இருந்து தினமும் பதில் மெசேஜ்கள் வர அது அதிக சுவாரசியமாக இருந்தது.

ஒருநாள் நான் ஒருவருக்கு மெசேஜ் அனுப்பியதும், ஆன்லைனில் இருந்திருப்பார் போலும் உடனே அந்த நண்பரிடமிருந்து பதில் மெசேஜ் வந்தது. கொஞ்ச நேரமாக பேசிக்கொண்டிருந்தோம், நல்ல மாதிரியாக பேசியதால் திடிரென அந்த பக்கத்திலிருந்து உண்மையான பெயர் வயது ஊர் எல்லாம் கேட்டு மெசேஜ் வந்தது. குறுகிய நேரத்திலே ஒரு நல்ல நட்பை உணர்ந்ததால் நன்றாக பேசுகிறாரே என்று நானும் பெயரை மட்டும் மாற்றி விட்டு உண்மையான வயதையும் பக்கத்து ஊர் பெயரையும் அனுப்பினேன். அவ்வளவு தான். கரண்ட் கட் ஆகியதோ அல்லது என்ன ஆனதோ… அதன் பிறகு அவரிடமிருந்து பதில் எதுவும் வரவில்லை. அந்த மாதிரி தளத்தில் இது வாடிக்கையான ஒன்று தான் என்றாலும் நன்றாக பேசிக்கொண்டிருந்து திடிரென பதில் வராதது எனக்கு கொஞ்சம் வருத்தமாகவே  இருந்தது. ஆனால் பல நண்பர்களும் மெசேஜ் அனுப்புவதும், பலரும் அது போல நடந்துக்கொள்வதும் நாளடைவில் இது பழகிவிட்டிருந்தது.

ஒருநாள், புதிய நண்பர் ஒருவர் என்னை பார்க்க வேண்டும் என்று தொலைபேசியில் பிடிவாதம் பிடிக்க, சில நாட்கள் அவரது அபரிமிதமான அன்பு மழையில் நனைந்துக் கொண்டிருந்ததால் நானும் அவரை பார்க்க சம்மதம் சொல்லி இறுதியில் டவுனில் இருக்கும் பூங்காவில் சந்திப்பதாக முடிவானது. நான் ப்ரொவ்சிங் சென்டரிலிருந்து நேரடியாக பூங்காவிற்கு நண்பர் சொன்ன நேரத்திற்கு முன்னதாகவே சென்றிருந்தேன். அது மாலை நேரம். கொஞ்சம் இருட்டியிருந்தது. நிறைய ஆண்கள் அங்கும் இங்குமாக இருந்தார்கள். ஒருவித நெருடலோடு தனியாக ஒரு இடத்தில் சென்று அமர்ந்திருந்தேன். தெரிந்தவர்கள் யாரும் பார்த்துவிடக் கூடாது என்பதில் கவனமாய் இருந்ததால் பூங்காவின் நுழைவாயில் தெரியும்படி அமர்ந்துக்கொண்டு அங்கேயே பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் தூரத்தில் ஒருவர் நடந்தது வந்து கொண்டிருந்ததை பார்த்து அந்த நடையும், உடல் அமைப்பும் எனக்கு பழக்கப்பட்ட ஒருவர் வருவது போலவே இருந்தது. சற்று கூர்மையாக கவனித்துப் பார்த்தால் அது நியால்.

நான் ஒரு ஓரமாக அமர்ந்து கொண்டிருந்த  அந்த மறைவான இடம் வழியாகவே அவனும் வந்து கொண்டிருந்தான். எனக்கு குழப்பமாக இருந்தது. இவன் எதற்கு இந்த நேரத்தில் இங்கு வருகிறான்? பனைமரத்தின் அடியில் நின்று பாலா குடிப்பார்கள்! இந்த நேரத்தில் இங்கு வருகிறான் என்றால் இவனும் நம்மை போல தானா? அவனுக்கு தெரியாமல் எழுந்து மறைந்து விடவா? அல்லது அப்படியே இருந்துக் கொண்டு அவனை எதிர்கொள்ளவா? அல்லது கண்டுக்கொள்ளாமல் இருந்து விடவா? என்று மனம் பல கேள்விகளை அந்த சில வினாடி பொழுதிலேயே கேட்டு துளைத்தது. அவன் என்னை அதுவரையிலும் பார்க்கவில்லை, ஆனால் என்னை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருந்தான். “ஆனது ஆகட்டும்” என்று அதே இடத்தில் அவன் பார்வையில் படும்படியாக இருந்துக் கொண்டு அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவன் சற்று தொலைவிலேயே என்னை பார்த்து விட்டான்.

என்னை பார்த்தவன் என்ன நினைத்தானோ? சட்டென்று பாதை மாறிச்  சென்றான். என்னவோ தெரியவில்லை, என்னை பார்த்தால் அவன் அப்படி தான் செல்வான் என்று நான் ஏற்கனவே எதிர்பார்த்திருந்தேன். ஆனாலும் எனக்கு நியால் மீது சந்தேகம் அதிகமானது. சந்தேகம் மட்டுமல்ல, அவன் மீதான ஆசையும், அவன் என்னை போலவே இருக்க மாட்டானா! என்கிற ஆவலும் சேர்ந்து என் இதய துடிப்பை அதிகப்படுத்தின. தொண்டையில் சுவாசம் முட்டியது. நியால் சென்ற இடத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். சற்று தூரத்தில் சென்று மறைந்து விட்டான். கொஞ்ச நேரத்தில் நான் காத்திருந்த நண்பரும் வந்து சேர்ந்தார். அவர் எப்படி இருந்தார் என்று கூட நான் கவனிக்கவில்லை.

என் எண்ணம் முழுவதும் நியால் மீதே இருந்தது. இரவெல்லாம் அவனை பற்றிய பழைய நினைவுகளே ஓடிக்கொண்டிருந்தது. சட்டென்று, ஒருநாள் ஊர் பெயரை சொல்லியதும் ஒருவர் என்னுடைய மெசேஜ்களுக்கு பதில் அனுப்பாமல் இருந்த அந்த சம்பவம் மூளையில் உரைத்தது. ஒருவேளை அது அவனாக இருக்குமோ என்று மனம் பைத்தியகாரதனமாக ஏங்கியது. எல்லாவற்றையும் ஒன்றுக்குள் ஒன்று போட்டு குழப்பி என் விருப்பபடி அது அவனாக இருக்க வேண்டும் என்று ஒரு முடிவுக்கு வந்தேன். கடவுளே! அது அவனாகவே இருக்க வேண்டும் என்று மனம்கடவுளை கெஞ்சியது. காலையிலேயே டவுனுக்கு சென்று அந்த ப்ரோபைலை மீண்டும் பார்க்க வேண்டும் என்று நிலைக்கொள்ளாமல் தவித்தேன்.

காலையில் முதல் வேலையாக டவுனுக்கு சென்றேன். இரவு திட்டமிட்டது போல புதிதாக ஒரு அக்கௌன்ட் ஆரம்பித்து சில நண்பர்களுக்கு ரிகுஸ்ட் அனுப்பி கூடவே அந்த ப்ரோபைலுக்கும் ரிகுஸ்ட்வும், மெசேஜ்யும் அனுப்பினேன். அடுத்த நாள் அந்த ப்ரோபைலிலிருந்து பதில் வந்தது. இணைய தளங்களில் அதுவரையிலும் கிடைத்த அனுபவத்தை வைத்து எதிர்தரப்பில் உள்ளவரிடம் ஓரளவிற்கு நல்ல அவிபிராயம் தோன்றும் அளவிற்கு பேசினேன். “இத்தனை நாள் இருந்தோம். இன்னும் கொஞ்ச நாள் காத்திருந்து மெதுவாகவே அந்த நபரை சந்திக்கலாம்” என்று மனதுக்குள் முடிவு செய்து அவரசம் காட்டாமல் பழகினேன். ஆனாலும் அது நியால் தானா? என்று தெரிந்துக்கொள்வதில் என்னால் ஒரு கட்டத்திற்கு மேல் பொருமையாக இருக்க முடியவில்லை. உடனே தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆசையும், எதிர்ப்பார்ப்பும் கூடிக்கொண்டே சென்றது.

இதற்கிடையே கல்லூரி நண்பர்கள் இருவரோடு நானும் சேர்ந்து வேலை தேடி பெங்களூர் செல்ல ஏற்பாடாகியிருந்தது. அதனால், நியால் என்று சந்தேகப்படும் அந்த நபரிடம் என் நிலைமையை சொல்லி “ஒருவருக்கொருவர் சும்மா ஒருமுறை சந்திக்கலாமே” என்று முதல்முறையாக நான் கேட்க உடனே அந்த நபரும் ஒப்புக்கொண்டார். அன்றே மொபைல் எண்களை பரிமாறினோம், இரண்டு நாட்கள் இடைவெளியே இல்லாமல் மெசேஜ் அனுப்பி பேசிக் கொண்டிருந்தோம். நியாலுடைய பேச்சும், சிரிப்பும் நான் சிலமுறை கவனித்திருந்ததால் என்னிடம் மெசேஜ்யில் பேசிக்கொண்டிருக்கும் அந்த நபர் நியால் அல்ல என்று புரிந்துக்கொண்டேன். இருப்பினும், மூளை புரிந்துக்கொண்டதை அந்த நபரை பார்க்கும் வரை மனம் விடாது என்பதால் அவரை சந்திக்க நாள் கேட்டேன். அடுத்த நாளே சந்திக்கலாம் என்று முடிவானது.

ஏற்கனவே பேசியிருந்தபடி அன்று  மாலையில் டவுன் பேருந்து நிலையத்தில் அந்த நபர் சொன்ன இடத்திற்கு சற்று தொலைவில் நின்றுக் கொண்டிருந்தேன். பக்கத்தில் வந்துவிட்டேன் என்று மெசேஜ் மட்டும் வந்துக்கொண்டிருந்தது. ஆனாலும், கொஞ்ச நேரமாகியும் அவர் வந்து சேரவில்லை. அதனால் நான் மொபைல் போனில் கால் செய்தேன். ரிங் போய்க்கொண்டிருந்தது. உடலிலும், மனதிலும் ஒருவித பதட்டம், காரணம் தொலைபேசியில் அழைப்பது அது தான்  முதல்முறை. நீண்ட ரிங் சென்ற பிறகு கால் கட் செய்யப்பட்டு “வந்துவிட்டேன். எங்கே இருக்கிறாய்?” என்று உடனே மெசேஜ் வந்தது. பதில் அனுப்பினேன்.

சில வினாடிகளில், என் பின்னால் “ம்ஹ்ம்” என்று ஒரு உறுமல் சப்தம் கேட்க…. சட்டென்று திரும்பி பார்த்தேன். இடது கையின் பெருவிரலை தவிர்த்து நான்கு விரல்களை பேன்ட் பாக்கட்டுக்குள் விட்டுக்கொண்டு, வலது கையில் மொபைலை சுழற்றியபடி பதட்டத்தை காட்டக்கூடாது என்கிற மாதிரி முகத்தை சற்று கூலாக வைத்துகொண்டு ஒருவன் நின்றுக் கொண்டிருந்தான். சில வினாடிகள் நான் ஸ்தம்பித்து விட்டேன். கை வெலவெலத்து போனது. எங்கிருந்து வந்தது எனக்கு அவ்வளவு பயம் என்று தெரியவில்லை… அது பயமா? இல்லை. அந்த உணர்வுக்கு அர்த்தம் பயமில்லை. பயமில்லை என்றால் பிறகு வேறென்ன? ஆனால் நிச்சயமாக அந்த உணர்வை விவரிக்க என்னிடம் வார்த்தை இல்லை. பிறகென்ன! அங்கு வந்து நின்றது வேறுயாருமல்ல. நியால்.

நீயா? என்று அவனும் என்னிடம் கேட்கவில்லை. நீதானா? என்று நானும் அவனிடம் கேட்கவில்லை. வெட்கம்…. நீண்ட மௌனம்… சூழ்நிலையை உணர்ந்து “எங்க போகலாம்” என்று கேட்டான். சற்று தொலைவில் இருந்த காபி பார் நோக்கி நடக்க ஆரம்பித்தோம். அவனுக்கு எப்படி என்று தெரியவில்லை, ஆனால் நான் நடக்க நடக்க அதிக வெட்கமாக உணர்ந்தேன். காபி பாரில் இருவரும் எதிரெதிர் அமர்ந்தோம். எதையோ நினைத்து நினைத்து ஒருவருக்கொருவர் சிரித்தோம். வேலைகள் பற்றி பேசினோம்.

“நீ என்று தெரிந்து தான் பேசினேன்” என்று சொன்னேன்.

“உன்னை பார்க்க தான் வருகிறேன் என்று தெரிந்து தான் வந்தேன்” என்றுச் சொல்லி  என் வாயை அடைக்கச் செய்தான்.

“உனக்கு எப்படி நான் தான் என்று தெரியும்” என்று நான் கேட்க, அதே கேள்வியை அவனும் என்னிடம் திருப்பி கேட்க….. நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக சகஜ நிலைக்கு திரும்பினோம்.

கிட்டத்தட்ட 4 வருடங்களாக எனக்கு அவன் மீதிருந்த தீராத ஆசை, நூற்றுக்கும் அதிகமான இரவுகளின் கனவுகளில் அவனோடு கூடியதான மோகம்… எல்லாமே அவனோடு நேருக்கு நேராக பேசிக்கொண்டிருந்த பொழுதில் என்னிடமிருந்து காணாமல் போயிருந்தது. அவனிடம் ஒரு நல்ல நட்பை உணர்ந்தேன். வீட்டிற்க்கு இருவரும் ஒரே பேருந்தில் கிளம்பினோம். என் ஆசைகளில் ஒன்றான, அவனோடு ஒரே இருக்கையில் அமர்ந்து பயணம் செய்ய வேண்டுமென்பதும் கூட அன்று நிறைவேறியது. நான் இதை மனதில் தான் நினைத்தேன், அதையே அவன் பேருந்திலிருந்து இறங்கும் போது என்னிடம் சொல்லிவிட்டு இறங்கினான். இனம் புரியாத மகிழ்ச்சியாக இருந்தது…

அதன் பிறகு மெசேஜ் அனுப்புவதெல்லாம் எப்போதாவது தான். நான்கு வருட கதைகளை எல்லாம் போனில் தான் பேசிக்கொண்டேயிருந்தோம். என்னை அவனுக்கு பிடிக்காதாம். நான் அதிகமாக பேசித்திரிவதால் தான் என்னிடம் கம்ப்யூட்டர் சென்டரில் கூட பேச வேண்டும் என்று அவனுக்கு தோன்றவில்லையாம். என்னுடைய் அழகு அவனை தொல்லை செய்ததாம், நான் ஓரின ஈர்ப்பு உடையவன் அல்ல என்றால்…. அதனால் தான் என்னை கண்டுக்கொள்ளாமல் இருந்தானாம். இப்படி நான் நினைத்தவற்றை எல்லாம் அவன் வார்த்தைகளாக பேசினான். என்னை விட பெரிய ஈகோ பிடித்தவன். அதே நேரம் ரொம்பவும் பொசசிவ் ஆனவன். அவனின் அன்பால் நான் எனது கல்லூரி நண்பர்களோடு பெங்களுரு போகயிருந்த திட்டத்தையே மாற்றினேன். வீட்டில் என்னவெல்லாமோ சொல்லி சமாளித்தேன்.

நியாலின் அன்பு எனக்கு முழுமையாக கிடைத்தது. அவன் மீதான பழைய மோகம் அதிகரிக்க தொடங்கியது. “பார்க்க வேண்டும் வா” என்றதும் உடனே அவன் வீட்டிற்க்கு பைக்யில் சென்று விடுவேன். அவனுடைய அறையில் அவனோடு தனிமையாக இருப்பதில் தான் எத்தனை சுகம். ஒரேநாளில் கிட்டத்தட்ட நான்கு ஐந்து முறை “வா பார்க்க வேண்டும்” என்று கூப்பிடுவான். கூப்பிட்ட குரலுக்கு மறுப்பேச்சி பேசாமல் உடனே சென்று விடுவேன். “சும்மா எத்தன நாள் தான் பேசிக்கொண்டிருப்பது? நான் எப்போ உன்னை….” என்று வீட்டிற்கு செல்லும் போதெல்லாம் விளையாட்டாக கேட்க ஆரம்பித்தேன். அவனுக்கும் ஆசை தான். ஆனால் செக்ஸ் செய்து விட்டால் அன்பும், ஆசையும் குறைந்துவிடும், அதனால் இப்படியே இருப்போம் என்று பிலாசபி பேசினான்.

அவன் வாய் தான் அப்படி சொல்லுமே தவிர அவன் முகம் என் ஆசைகளையே பிரதிபலிக்கும். இருந்தாலும், நான் அவன் விருப்பத்திற்கே விட்டு பிடித்தேன். ஏனென்றால், என்மீது எனக்கு நம்பிக்கை இருக்கவில்லை. அவன் சொன்னது போல, ஆசைதீர அவனை அனுபவித்து விட்டால் பிறகு அடுத்த ஆளை தேட ஆரம்பித்து விடுவேன். அவனும் கூட அப்படி ஆகிவிடக் கூடும். அதனால் அவன் சொன்னதும் நியாயமாகத் தான் இருந்தது…

இங்கே இன்னொரு விசயமும் சொல்ல வேண்டும். பொதுவாக எல்லா ஓரினசேர்க்கை ஆணுக்கும் தன்னை இன்னொருவர் அனுபவிக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கும். அதே போல அவர்களின் ஆணுறுப்பை வாயில் சுவைக்க வேண்டும் என்கிற ஆசையும் இருக்கும். ஆனால் ஒருவருக்கு தன்னோடு செக்ஸ் செய்யும் இணையை (partner) பிடிக்கவில்லை என்றால் “நான் இதுவரையிலும் வாயில் வாங்கியதே இல்லை, எனக்கு அது பிடிக்காது” என்று கூசாமல் பொய் சொல்லுவோம். இதே வசனத்தை நானும் சொல்லியிருக்கிறேன். என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். அழகு என்பது அவரவர் மனம் சார்ந்தது. எனக்கு பிடிக்கும் ஒருவரை இன்னொருவருக்கு பிடிக்காமல் போகலாம். ஆனால் இது மாதிரியான எந்த குழப்பங்களும் எனக்கு நியாலிடமும், நியாலுக்கு என்னிடமும் இருக்கவில்லை. இருவரும் ஒருவரைவொருவர் விரும்பினோம். ஒருவருகொருவருடனான அழகால் ஆசைப்பட்டு, சந்தர்ப்பவசத்தால் ஒன்று சேர்ந்து, மனதால் ஒரே உயிராய் வாழ்ந்துக் கொண்டிருந்தோம். எங்களுடைய பயம் எல்லாம் செக்ஸ் செய்தால் பிரிந்து விடுவோமோ என்பது மட்டும் தான். ஆனால் அந்த செக்ஸ்காக தான் இந்த நட்பே என்பதை மறந்திருந்தோம். காதல் மிக தித்திப்பானது, மோகம் தீரும் வரை.

ஆனாலும் எத்தனை நாளைக்குத் தான் இந்த கட்டுப்பாடுகள் எல்லாம் செல்லுபடியாகும்? இரண்டே நாள் தான். மூன்றாவது நாள் சந்திப்பில்…. அவனுடைய அனுமதி இல்லாமலே அவனது உடலை சீண்ட ஆரம்பித்தேன். சில நேரங்களில் எதிர்ப்பு  எதுவும் சொல்லாமல் இருந்தான். எனக்கு கூட எங்கே ஆரம்பிப்பது என்று தெரியவில்லை, அவன் முகம் பார்த்து செக்ஸ் செய்யும் துணிவையும் வலிந்து பெற வேண்டியிருந்தது. ஆனாலும் தைரியத்தை வருவித்துக்கொண்டு ஒருமுறை பல்வேறு சீண்டல்களுக்கு இடையே மெதுவாக அவனது ஆணுறுப்பை பிடித்தேன். திடிரென்று சுயநினைவு திரும்பியவனாய் “வீட்டில் ஆள் இருக்கிறார்கள்” அந்த இடத்திலிருந்து சமாளித்து விலகினான். எனக்கும் ஒருமாதிரி ஆகிவிட்டது. ஒருவழியாக ஏதோ உளறி சமாளித்துவிட்டு எனது வீட்டிற்க்கு சென்று விட்டேன். நட்பை இழந்து விடுவோமோ என்று கூட பயந்தேன். இனிமேல் அப்படி நடக்காது என்று அவனிடம் சொல்லவேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அவன், கால் செய்யாமல் “நைட் வீட்டுக்கு வரியா” என்று மெசேஜ் அனுப்பினான். அப்போதே சென்று அவனை கடித்து சாப்பிட வேண்டும் போல உடல் தகித்தது.

“இன்னிக்கு நைட் பிரெண்ட் வீட்டுல படுத்துடுவேன்” என்று வீட்டில் சொல்லிவிட்டு நியால் வீட்டிற்கு சென்றேன். அன்றிலிருந்து அடிக்கடி இதே வசனத்தை வீட்டில் சொல்லிவிட்டு நியால் வீட்டுக்கு செல்ல ஆரம்பித்தேன். வெளிச்சத்தில் செய்ய துணியாத மனசு இருட்டில் வெட்கத்தை எல்லாம் மூட்டைக்கட்ட வைத்து விடுகிறது. அன்று உச்சி முதல் பாதம் வரை உள்ள நாடி நரம்புகள் எல்லாம் வழக்கத்திற்கு அதிகமாக வேலை செய்ய, அவன் வாய்க்குள் உதட்டை விட்டு நாவை சுவைத்தேன். இருவரின் உடலிலிருந்தும் வெளியேறிய வெப்பம் சூரிய வெப்பத்தை  மிஞ்சிவிடும் போல இருந்தது. அந்த முதல் இரவிலேயே மூன்று முறை விந்து வெளியேற்றினோம். அதன் பிறகான ஒவ்வொரு பகலும் இரவானது.

அவனது  வீட்டில் சாப்பிடும் போதும் கூட அவனை விழுங்கி விடுவது போல பார்ப்பேன். அவன் மட்டும் என்ன! அவனும் என்னை விட்டு ஒரு நேரமும் விலகாமல் இருந்தான். நியால், என் மார்பில் சாய்ந்து என்னை கட்டி அணைத்துக்கொண்டு கிடப்பதிலேயே அதிக இன்பம் கொண்டான். நான் அவனது கண்பார்வையிலேயே அதிக நேரம் இருக்க ஆசைபட்டான். “இப்படியே இருக்க முடியாது” என்று விளையாட்டாக சில நேரங்களில் அவனிடம் சொல்ல ஆரம்பித்தேன். அந்த குறுகிய  நாட்களிலேயே பலமுறை போதும் போதும் என்கிற அளவிற்கு இருவரும் ஒருவரைவொருவர் அனுபவித்து விட்டோம்.

ஒரு வாரம் கடந்திருக்கும், வேலை பற்றிய பயம், குழப்பம் எல்லாம் என் மனதை வாட்ட ஆரம்பித்தது. திடிரென்று எனது கவனம் வேலையில் செல்ல காரணமென்ன? ஆம். அவன் சொன்ன பிலாசபி உண்மை தான் போலும். என் நான்கு வருட ஆசைகள் எல்லாம் நாங்கள் அடிக்கடி செய்யும் செக்ஸ் இன்பத்தால் குறைய ஆரம்பித்திருந்தது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்று சொல்லுவது போல அவனது அன்பு எனக்கு திகட்டியது. முன்பெல்லாம் அவனது அதீத அன்பை விரும்பிய எனக்கு அதுவே அதிக தொல்லை தருவதாக மாறியது. முன்பு போல அவன் கூப்பிட்ட குரலுக்கு மறுப்பு சொல்லாமல் உடனே பைக்கை எடுத்துக்கொண்டு நான் செல்லவில்லை. முன்பு போல மணிக்கணக்கில் தோலைபேசியில் பேசுவதில்லை. மெசேஜ்களுக்கு உடனே பதில் அனுப்புவதில்லை. முன்பு போல எப்போதும் அவனோடு கூடவே கட்டுண்டு கிடக்க முடியவில்லை. இத்தனைக்கும் நான் தான் காரணம். வேலை தேட வேண்டும் என்று சொல்லுவது கூட ஒரு காரணம் என்றாலும் அதுவொரு சாக்குபோக்கு தான். நான் சட்டென்று அவ்வாறு மாறியதற்கு நான் தான் காரணம். நான் மட்டுமே காரணம். என்னால் முழு நேரமும் அவனோடு கட்டுண்டு கிடக்க முடியவில்லை என்பது தான் காரணம். விரும்பிய போது மட்டும் அவனுடன் செக்ஸ் அனுபவிக்க வேண்டும் என்று நான் மாறிப்போனேன். அவனது அன்பும், அரவணைப்பும், பொசசிவ் குணமும் எனக்கு எரிச்சலை கொடுத்தது.

பாவம் நியால். நொறுங்கி போனான். இல்லை, நொறுக்கி விட்டேன். கோபங்கள், வருத்தங்கள், சண்டைகள், சமாதானங்கள் என்று நாட்கள், வாரங்கள் கடந்தன. ஒருநாள் போனில் “நீ இல்லாமல் செத்துவிடலாம் போல இருக்கிறது, சந்தோசம் – துக்கம் என்று எதுவென்றாலும் உன்னை தான் முதலில் நினைக்கிறேன், உன்னை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கிறேன், என் அன்பை நீ அலட்சியம் செய்வது என்னால் தாங்க முடியவில்லை….” என்று என்னவெல்லாமோ சொல்லி தேம்பி தேம்பி அழுதே விட்டான். நான் பதில் பேசாமல் இருந்தேன். சொல்ல நினைத்தவற்றை எல்லாம் சொல்லிவிட்டு போனை துண்டித்தான். “உறவையும் சேர்த்து துண்டித்து விடு” என்று என் மனம் சொல்லியது. அவனது அழுகை எனக்கு இன்னும் அதிக எரிச்சலையே தந்தது. கோபம், வெறுப்பு எல்லாம் சேர்ந்து இனிமேல் அவனிடம் பேசவே கூடாது என்கிற நிலைக்கு வந்து விட்டேன்.

ஆம். நியாலின் கண்ணீர் கூட என்னை எரிச்சலடைய செய்தது. நான் எவ்வளவு மாறி போனேன்! ஆனாலும் வேலை, குடும்ப பிரச்சனைகள் தான் என்னை இப்படி மாற்றியது என்று எனக்கு நானே சமாதானமடைந்தேன். நியாலை விட எனக்கு என்னுடைய பிரச்சனைகள் தான் முக்கியமாகப்பட்டது. என்னுடைய பிரச்சனைகளுக்கு கூட நியால் தான் காரணம் என்று கோபம் கொண்டேன்.

ஆனால், ஒருநாள் தான் அவனால் என்னிடம் பேசாமல் இருக்க முடிந்தது. அடுத்த நாள் மெசேஜ் அனுப்பினான். நான் பதில் அனுப்பவில்லை. கால் செய்தான். அட்டென்ட் செய்யவில்லை. பலமணி நேரம் கழித்து மெசேஜ் அனுப்பினேன். உடனே I LOVE YOU என்று ஒரு மெசேஜ் முழுவதும் டைப் செய்து பதில் அனுப்பினான். “இனிமேல் நான் அதிகம் தொல்லை செய்ய மாட்டேன், என்னிடம் பேசாமல் மட்டும் இருக்காதே”  என்று அடுத்த மெசேஜ். “நான் நேற்றிலிருந்து சாப்பிடவில்லை” என்று அடுத்த மெசேஜ். என்னால் இவைகளை படித்தவுடன் சகிக்க முடியவில்லை. மீண்டும் கோபத்தில் அவனுக்கு பதில் அனுப்பவில்லை. இதுவே வாடிக்கையானது… ஒருநாள் டவுனில் எதேச்சையாக அவனை பார்த்தும் பார்க்காதது போல சென்றுவிட்டேன். அவனும் என்னை கவனித்திருக்கிறான். அந்த இரவில் “இனிமேல் உன் முகத்திற்கு நேராக எப்போதும் வரமாட்டேன். நீ எங்கும் தைரியமாக செல்லலாம்” என்று ஒரு மெசேஜ் அனுப்பினான். அதன் பிறகு முன்பு போல மெசேஜ் அனுப்புவதில்லை, கால் செய்வதில்லை. நானும் அவற்றை எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் நான் இப்படி ஒட்டுமொத்தமாக கைகழுவ நினைக்கவில்லை. சரி, விட்டால் போதும் என்று நானும் இருந்து விட்டேன்.

இதற்கிடையே அவன் முதுகலை பட்டப்படிப்பிற்கு சேர்ந்தான். நான் ஒரு கம்ப்யூட்டர் சென்டரில் ப்ராஜெக்ட் செய்து கொடுக்கும் வேலையில் சேர்ந்தேன்.

பக்கத்து ஊர் என்பதால் சில நேரங்களில் நேருக்கு நேராக பார்க்கும் படியான சந்தர்ப்பங்கள் அமைந்தது. நான் அவன் முகத்தை பார்த்தாலும் அவன் என்னை பார்க்காமல் சென்றான். சில நேரங்களில் அவனுடைய நண்பர்கள் என்னிடம் “ஏன் சண்டையா?” என்று கேட்க ஆரம்பித்தார்கள். “ஆமா சும்மா சின்ன பிரச்சனை” என்று சமாளித்துச் செல்வேன். டவுனில் என்னிடம் முகத்தை திருப்பி செல்வது முதலில் எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது. பின்னர், “உனக்கே அவ்வளவுனா எனக்கு எவ்ளோ இருக்கும்” என்று ஈகோ காட்ட ஆரம்பித்தேன். எனக்கும் நியாலுக்குமான உறவு கிட்டத்தட்ட 4 மாதங்கள் தான். முடிந்து விட்டது. எல்லாம் முடிந்து விட்டது.

மாதங்கள் பல கடந்தன…. வேறு பல நண்பர்களின் நட்பு, செக்ஸ் என்று வாழ்க்கை போக ஆரம்பித்தது. நட்பு எல்லாம் செக்ஸ் செய்யும் வரை தான். மேட்டர் முடியும் வரை ஓயாமல் பேசுவது, பின்னர் காரியம் முடிந்ததும் காணாமல் போய்விடுவது என்று தான் நண்பர்கள் கிடைத்தார்கள். பலரும் ஆசை தீர என் ஆணுறுப்பையும், உதட்டையும், உடலையும் அனுபவித்து விட்டு சென்றார்கள். எனக்கு யாரையும் பிடிக்கவில்லை. நான் விரும்பி அனுபவிக்க எனக்கு யாரும் கிடைக்கவில்லை. யாரிடமும் உண்மையான அன்பும், நட்பும் கிடைக்கவில்லை. இப்படி கமிட் ஆகாமல் இருப்பது கூட நன்றாக இருந்தது. ஆனால் பல நேரங்களில் நியால் நினைவாகவே இருந்தது. ஒவ்வொரு முறையும் புதிதாக ஒருவரை சந்தித்து செக்ஸ் அனுபவித்து விட்டு அதோடு பிரியும் போதெல்லாம் நியாலை நினைத்து உருகினேன். ஆனாலும் ஈகோ தடுத்தது.

ஒருநாள் ஏதோவொரு வருத்தத்தில் நியாலுக்கு மெசேஜ் அனுப்பினேன். டெலிவர் ஆகவில்லை. தயங்கியபடி கால் செய்தேன். இணைப்பு கிடைக்கவில்லை. தொடர்ந்து இரண்டு நாட்கள் முயற்சி செய்தேன். நம்பர் மாற்றியிருந்தான். “நல்ல நட்பை தொலைத்து விட்டோமோ?” என்று மனம் கேள்வி கேட்க ஆரம்பித்தது. ஆனால் டவுனில் என்னை பார்க்காமல் அவன் கல்லூரி நண்பர்களோடு சிரித்து பேசி செல்வதை நினைத்துப் பார்த்து, “தொலைந்தது தொலையட்டும்” என்று மனம் சமாதானம் அடைந்தது.

அப்போது அவன் முதுகலை இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தான். அதுவொரு ஞாயிறு கிழமை. அன்று தான் அவன் வீட்டில் இருப்பான் என்று வெட்க்கத்தை விட்டு அவனது வீட்டிற்கு சென்றேன். “அவனோடு சண்டை என்றால் எங்களிடமும் பேசாமல், வீட்டிற்க்கு வராமல் இருந்து விட்டாயே, பைக்களில் சில நேரம் உன்னை சந்தையில் வைத்து பார்ப்பேன், என்று அம்மா திட்டினார்கள். “என்ன எங்க பாத்தாலும் அண்ணன் எங்கிட்ட பேசுவாங்கப்பா” என்று என்னை விட்டுக்கொடுக்காமல் தங்கை அம்மாவுக்கு பதில் சொன்னாள். எல்லாரும் பேசினார்கள், ஆனால் நியால்? எத்தனை மாற்றம் அவனிடம். “பிராக்டிக்கலா இருடா” என்று நான் அவனிடம் பலமுறை சொல்லியிருக்கிறேன். இப்போது அவன் அப்படி தான் இருக்கிறான். என்னை பார்த்து அவன் முகம் கொஞ்சம் கூட மாறவில்லை. அந்த முகத்தில் கோபம் இல்லை, வருத்தம் இல்லை, அன்பும் இல்லை, நட்பும் இல்லை, எதுவும் இல்லை. சாதாரணமாக இருந்தான். என்னுடைய வேலை, ப்ராஜெக்ட் என்று மட்டும் கொஞ்சம் பேசினான். அது தவிர அவனுக்கு என்னிடம் பேச எதுவும் இருக்கவில்லை. வார்த்தைகள் நெஞ்சை அடைக்க வாய்விட்டு கேட்டேவிட்டேன்… அவ்வளோ தானா?

டிவியை பார்த்தபடி மெளனமாக இருந்தான். “இனிமேல் நான் உனக்கு தொல்லை தர மாட்டேன். இன்னும் ரெண்டு நாளைல வெளிநாட்டுக்கு போறேன். எல்லாத்துக்கும் சேத்து என்ன மன்னிச்சிடு. நான் கிளம்புறேன்.” “ஓகே பாக்கலாம்” என்று டிவியை பார்த்துக்கொண்டே  செயற்கையாக ஒரு சிரிப்பும் சிரித்தான். நான் அந்த பதிலை எதிர்பார்க்கவில்லை. ஆனால் அது தான் அவனது பதில். சூழ்நிலையை உணர்ந்து எழுந்து அம்மாவிடமும், தங்கையிடமும் சொல்லிவிட்டு கிளம்பினேன்.

கதை எப்படி இருக்கு?

0 / 5 Results 0 Votes 0

Your page rank:

Picture of the day


காதல் என்பது எதுவரை?
மேலும் காட்ட

இதோ.. நீங்க ஓரினச்சேர்க்கை கதை படிக்கிறதால இந்த ஜாலியான கேள்விகளுக்கு பதில் சொல்லுங்களேன்.

கதைக்கு கொடுக்கும் நடிகரும், நடுவில் வரும் படங்களும் உங்களை கவர்கிறதா?

யாருக்கிடையே நடக்கும் ஓரினச்சேர்க்கை சுவாரசியமாக இருக்கும்

ஓரினச்சேர்க்கை கதையின் climax-ல் எந்த வகை Sex உங்களுக்கு பிடிக்கிறது?

ஓரினச்சேர்க்கை கதையில் வயது வித்தியாசம் நன்றாக இருக்குமா?

உங்க வயசு என்ன? (சும்மா ரசனையை புரிஞ்சிக்க மட்டுமே கேட்கிறேன்)


அனைத்து பதிவுகளையும் ஒரே table-ல் காண, இங்கே click செய்யவும்.

காதல்ரசிகன்

காதலுக்கும் காமத்துக்கும் பால் (Gender) தேவையில்லை என்று கருதும் கூட்டத்தில் ஒருத்தன். அழகு எங்கிருந்தாலும், யாரிடமிருந்தாலும் ரசிக்கும் கலாரசிகன். அன்பு எங்கிருந்து கிடைத்தாலும் பால் நோக்காமல் கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் கொண்டவன். கட்டிலில் கட்டியவளோடு புணர்ந்தாலும் நான் ஓரினச்சேர்கையாளனும் கூட என்று சொல்லிக்கொள்வதில் வெட்கமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Free Sitemap Generator

Adblock Detected

Please disable the adblocker for this site (not only the page) to render the in-line related posts blocks effectively and reload the page.