09. காத்துவாக்குல ஒரு காதல் – 20 அத்தியாயங்கள் (முற்றும்)
“காற்று வாங்க போனேன்… கவிதை வாங்கி வந்தேன்”ங்குற பாட்டு மாதிரி KT வாங்க போய் காதல் வாங்கி வந்த ஓரினக்காதல் கதை. காதலுக்கு கண் இல்லைங்குறதால இனம், மொழி மட்டுமல்ல, பால் (Gender) கூட தெரியாதுங்குறதால கொல்கத்தாவில் இருக்கும் IT Company-க்கு KT வாங்க போன தமிழனான கார்த்தியும், பெங்காளியான அர்ணாபும் பார்த்த மாத்திரத்தில் ஈர்க்கப்படுகின்றனர். ஜாலிக்காக one night stand அல்லது casual fling என்று நினைத்து செய்யும் hot sex அவர்கள் relationship-ன் dynamics-ஐ மாற்றிவிடுகிறது. KT முடிந்து ஊர் திரும்பும் கார்த்தியும், ஏடாகூடமாக condition போட்ட அர்ணாபும் அவர்களே எதிர்பாராதபடிக்கு காதலில் விழுந்துவிடுகின்றனர். 24 மணி நேரமும் கூடவே இருக்குற ஆளுங்களோட காதலே பல சமயம் அத்துக்கிட்டு போகும்போது, மொழி பிரச்சனை, கூடவே தூர பிரச்சனையும் சேர்ந்துக்கொள்ள, எப்படி கார்த்தியும் அர்ணாப்பும் அவற்றை எதிர்கொள்கிறார்கள் என்பதை கார்த்தியின் பார்வையில் இருந்து சொல்லும் கதை. |
08. பருவராகம் – 30 அத்தியாயங்கள் (முற்றும்)
காலேஜில் இருந்து fresher-ஆக IT Company-ல் வேலைக்கு சேரும் ஸ்வேதாவுக்கு தன்னுடைய Team lead-ஆக அறிமுகம் ஆகும் பிருத்வியை பார்த்ததும் காதல் ஏற்படுகிறது. அது போலவே பிருத்விக்கும் ஸ்வேதா மீது ஈடுபாடு வந்து அவர்கள் இருவருக்குமிடையே காதல் chemistry சூப்பராக workout ஆகிறது. ஆனால் அதை விட அவர்களது sexual chemistry அமோகமாக களை கட்டுகிறது. பொது இடங்களான சாலையோரம், சினிமா தியேட்டர் மட்டுமல்லாது அலுவலகத்துக்குள்ளேயே கூட அவர்கள் திகட்ட திகட்ட செக்ஸ் இன்பத்தில் உல்லாசம் அனுபவிக்கிறார்கள். இதற்கிடையில் பிருத்வி onsite போகிறான்… அதே சமயம் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக ஸ்வேதா வேலை இழக்கிறாள். பிருத்வி திரும்பி வரும் போது ஸ்வேதா வேறு நிறுவனத்தில் வேலைக்கு போகிறாள். வேலை காரணமாக பிரிந்த ஸ்வேதா & பிருத்வியின் காதல் என்ன ஆனது? இதுவரை எழுதப்பட்ட தொடர்கதைகளில் அதிகம் வாசிக்கப்பட்டது இந்த தொடர் தான். |
07. அயலான் அன்பு -23 அத்தியாயங்கள் (முற்றும்)
கார்த்தி (நான்) பக்கத்து வீட்டுக்கு புதிதாக குடிவந்த இளம் தம்பதியில் கணவன் அசோக் மீது காதல் கொள்கிறான். கார்த்தியின் உணர்வுகளை அசோக்கும் reciprocate செய்ய, காதலோடு காமமும் கலந்து இருவரிடையே sensuous & sexual affair ஏற்படுகிறது. கார்த்தியும் அசோக்கும் திருமணம் ஆகி குடும்பத்தோடு வசிப்பதால் அவர்களது extra marital affair-ஐ discreet ஆக வைக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டு, (ஓரின)காதலுக்கும், கல்யாணம் & குடும்பத்துக்கும் இடையே சிக்கி தவிக்கிறார்கள். அவர்களது உள்ளத்துக்கும் சமுதாயத்துக்கும் நடுவே நடக்கும் போராட்டம் எப்படி முடிவுக்கு வருகிறது? கல்யாணமான Closet Gays-க்களின் பிரச்சனைகளை வெளிப்படையாக சொல்லும் தொடர் இது. |
06. நான் அவன் இல்லை – 19 அத்தியாயங்கள் (முற்றும்)
ஓரினச்சேர்க்கையாளர்களை அடியோடு வெறுக்கும் ஹரீஷ், பொருளாதார தட்டுப்பாடு காரணமாக தன் வீட்டை openly gay-யான சபாவுடன் பகிர்ந்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலை வருகிறது. முதலில் சபாவை வெறுப்புடன் வீட்டுக்குள் ஏற்றுக்கொள்ள, நாட்கள் செல்ல, ஹரீஷுக்கு gay-க்கள் மீதான எண்ணம் எப்படி மாறுகிறது? சபாவுக்கும் ஹரீஷுக்குமான உறவு housemates-ல் இருந்து நட்பாக மாறுகிறதா என்பதை சுவாரசியமாக சொல்ல முற்படும் தொடர்கதை இது. |
05. உயிரில் கலந்த உறவே – 25 அத்தியாயங்கள் (முற்றும்)
சிறிய வயதில் எலியும் பூனையுமாக எதிரிகளாக திரிந்த நெருங்கிய உறவினர்களான ஜெய்யும் பிரபாகரும் பல வருடங்கள் கழித்து மீண்டும் சந்திக்கும்போது எதிர்பாராமல் ஓரிக்காதல் உருவாகிறது. நாளடைவில் உயிருக்கு உயிராக காதலிக்கும் அவர்களிடையே சமுதாய கட்டமைப்பு வில்லனாக வர, எப்படி அவர்கள் அதை எதிர்கொள்கிறார்கள் என்ற கதை. இது கிட்டத்தட்ட எனது சொந்த வாழ்க்கை கதை என்று சொல்லலாம். அதோடு சில கற்பனைகளையும் சேர்த்து எழுதப்பட்ட தொடர். |
04. Sugar Daddy – 13 அத்தியாயங்கள் (முற்றும்)
Closet Gay-ஆக இருக்கும் நரேனுக்கும், அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் இளைஞன் விக்னேஷுக்கும் ஏற்படும் கவர்ச்சி உடலுறவின் மூலம் மேலும் வலுப்படுகிறது. நாள்பட கவர்ச்சி காதலாக மாற, இருவருக்கும் இடையே உள்ள 25 வருட வயசு வித்தியாசத்தை காரணம் காட்டி நரேன் விக்னேஷின் காதலை நரேன் ஏற்க மறுக்கிறார். கட்டிளம் காளையான விக்னேஷை ஆண்கள் மொய்க்க, அவன் மனது ஏன் வயதான நரேனை நாடியது? அதையடுத்து வரும் பிரச்சனைகள் எப்படி முடிந்தன? |
03. Paying Guest – 19 அத்தியாயங்கள் (முற்றும்)
ரவியும் அலுவலகத்தில் அவனுடைய subordinate-ஆன அவினாஷும் ஓரினக்காதல் கொள்கிறார்கள். ரவியோ கல்யாணம் ஆகி மனைவி, குழந்தை என சந்தோஷமாக வாழ்ந்துக்கொண்டிருக்கிறான். இந்நிலையில் அவினாஷ் ரவியின் அருகாமையில் இருப்பதற்காக ரவியின் வீட்டுக்கே Paying Guest-ஆக குடியேறுகிறான். ஒரே வீட்டுக்குள் மனைவியுடனும், காதலன் அவினாஷுடன் வாழும் ரவி எப்படி தன் உறவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போகிறான்? அவினாஷ் மற்றும் ரவியின் காதல் மற்றும் மனைவி ரூபாவுடனான உறவுகள் என்னவாயிற்று? |
02. நினைக்க தெரிந்த மனமே – 4 அத்தியாயங்கள் (முற்றும்)
வாலிபத்தில் விளிம்பில் சந்தோஷமாக இருக்கும் ரவி அவனது குடும்ப நண்பரின் மகனான ரமேஷை பார்த்த மாத்திரத்தில் பொறிகள் பறக்கின்றன. ரமேஷ் திருமணமானவன் மட்டுமல்ல இருவரது குடும்பங்களும் மிகவும் நெருங்கியவை என்பதால் ரவி இந்த சூழலை எப்படி லாவகமாக கையாள முயற்சிக்கிறான் என்பதை சொல்லும் குறுந்தொடர். |
01. ஜெய்யும் ஜெஃப்பும்
இந்திய ஜெய்யும், பிரஸிலிய ஜெஃப்பும் காதல் கொண்ட கதை |
|